சில தமிழ் பகுதிகளில் மக்கள் இராணுவ வீதித் தடைகளைக் கோருகின்றனர் !
வடக்கில் இராணுவ நீக்கம் மெல்ல மெல்ல ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ வீதித் தடைகள் அகற்றப்பட்டு பாதைகள் திறந்துவிடப்பட்டமை தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து இராணுவ முகாம்கள், இராணுவ வீதித் தடைகள் நீக்கப்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் இராணுவத் தடைகளை மீள எற்படுத்துமாறு கோருகின்றனர் என வடக்கு ஆளுநர் வேதநாயகன் அண்மையில் டான் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இராணுவ வீதித் தடைகள் நீக்கப்பட்ட பகுதிகளில் களவுகள், வன்முறைச் சம்பவங்கள், கள்ள மண் ஏற்றுவது, கள்ள மரம் வெட்டுவது போன்ற செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாலேயே இக்கோரிக்கை வைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.