ஒளிபரப்பு வாகனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் ஐவர் பலி!

ஒளிபரப்பு வாகனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் ஐவர் பலி

காசா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் காசாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள நுசிராத் அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.  இதில் அங்குள்ள அல்-அவ்தா மருத்துவமனையின் வெளியே நின்று கொண்டிருந்த பாலஸ்தீன ஊடகவியலாளர்களின் ஒளிபரப்பு வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஊடகவியலாளர்கள் ஐவர் கொல்லப்பட்டனர். அவர்கள் ஐவரும் அப்பகுதியின் அல் குத்ஸ் எனும் ஊடகத்தைச் சார்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் பாரிஸை தளமாகக்கொண்டு இயங்கும் எல்லைகளற்ற ஊடகவியாலளர்கள் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி காசா போர் ஆரம்பமாகிய 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடக்கம் 145க்கும் மேற்பட்ட பாலஸ்தின ஊடகவியலாளர்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை காசாவின் சுகாதார அமைச்சு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி இதுவரையில் 45 ஆயிரத்து 399 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *