மாமன் மத்திய வங்கியை கொள்ளையிட்டார் – வெளியே தலைமறைவு ! மருமகன் வரியில் மோசடி – உள்ளே சிறையில் !!

அரசாங்கத்தின் பொருளாதார இயந்திரம் ஆரம்பமாகிவிட்டது !

தங்களுடைய அரசாங்கத்தின் பொருளாதார இயந்திரம் இயங்க ஆரம்பித்து விட்டதாக தொழிலாளர் அமைச்சரும் பொருளியல் அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னான்டோ செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார். முப்பிரவு கடன் மீள்வரைபு நிறைவேற்றப்பட்டு விட்டது, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான உதவித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான உதவித்திட்டங்களும் வழங்கப்பட ஆரம்பிக்கப்பட்டு விட்டது என அனில் ஜயந்த பெர்னாடோ தெரிவித்தார்.

மாமன் மத்திய வங்கியை கொள்ளையிட்டார் – வெளியே தலைமறைவு ! மருமகன் வரியில் மோசடி – உள்ளே சிறையில் !!

ரணிலுடைய ஆட்சிக்காலத்தில் மத்திய வங்கியில் பிணைமுறி மோசடி செய்த ரணிலின் நெருங்கிய நண்பரான அர்ஜூனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாகி உள்ளார். அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. தற்போது அவருடைய மருமகன் அர்ஜூனா அலோசியஸ், மென்டிஸ் சாராயக் கொம்பனியின் உரிமையாளர் கோடிக்கணக்கில் வரி மோசடி செய்தமைக்காக உள்ளே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அர்ஜூனா அலோசியஸின் தந்தையும் பிணைமுறி மோசடிக்குற்றச்சாட்டில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *