அன்பே சிவம், ஆனால் லூசியம் சிவன் ஆலயத்தில் ஏன் சமரசம் உலாவவில்லை? நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை!

அன்பே சிவம், ஆனால் லூசியம் சிவன் ஆலயத்தில் ஏன் சமரசம் உலாவவில்லை? நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை!

ஆலயத்தின் ஆரம்ப உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடல்..!

சர்ச்சைக்குரிய லண்டன் லூசியம் சிவன் கோயிலில் மீண்டும் மருத்துவ கலாநிதி துரைராஜா சிறீஸ்கந்தராஜா ஆலயத்தின் செயற்குழுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தலைமைப் பதவியில் இருக்கும் தன்னோடு போட்டியிடும், போட்டியாளர்களோடு பேசி அவர்களை ஒதுங்கச் செய்து பதவியிலிருப்பதாக தில்லைநாயகம் அருள்தாஸ், விஸ்வலிங்கம் கணேசமூர்த்தி மற்றும் என் சர்ச்சிதானந்தன் ஆகியோர் தேசம்நெற்க்குத் தெரிவித்தனர். அவர்கள் தொர்ந்தும் குறிப்பிடுகையில் நியாயமற்ற முறையில் அறங்காவல் சபையிலிருந்து வெளியேற்றப்பட்ட தில்லைநாயகம் அருள்தாஸ், விஸ்வலிங்கம் கணேசமூர்த்தி மற்றும் ஒருவரையும், மீள உள்வாங்குமாறு பிரித்தானிய நீதிமன்றம் ஆலய அறங்காவல் சபைக்குத் தெரிவித்து இருந்தது. ஆனால் துரைராஜா சிறீஸ்கந்தராஜா தொடர்ந்தும் தங்களை மீள உள்வாங்காமல் தடுப்பதாகத் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் துரைராஜா சிறீஸ்கந்தராஜாவின் நடவடிக்கைகளால் ஆலயம் நீதிமன்றத்திற்குச் செல்கின்றபோது ஏற்படும் பெரும் நிதிச் செலவுகள் ஆலயத்தின் நிதியிலிருந்தே செலவிடப்படுகின்றது என்றும் இவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குத்தகைக் காணியில் 1.6 மில்லியன் பவுண்செலவில் ஆலயம் புனரமைக்கப்பட்டுள்ளது. லூசியம் சிவன் கோவில் மட்டுமல்ல புலம்பெயர்நாடுகளில் உள்ள சிவன் கோவில்களில் இவ்வாறான எதேச்சை அதிகாரங்களைக் காணலாம். ஏனைய ஆலயங்களும் இதற்கு விதி விலக்கல்ல.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *