மட்டக்களப்பு காத்தான்குடியில் மாமாவையும் அவரது சகோதரரையும் சுட்டுக்கொன்ற மருமகன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் ஜாமி அத்துல் ஜமாலியா அரபு கல்லூரியின் அதிபரான சேகு முகமது மீரான் முதின் (வயது 65) அவரது சகோதரரான சேகு முகமது மஜ்ஜின் (வயது 60) மற்றும் துப்பாக்கி தாரியான ஷாஜஹான்(வயது 38) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மனைவியைப் பிரிந்து வாழும் மருமகன் இன்று காலை மாமனாரின் வீட்டுக்கு மதிலேறி குதித்து, அத்துமீறி நுழைந்து இத்துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவத்தில் துப்பாக்கிதாரியின் மனைவியும் பிள்ளையும் வீட்டின் பின்புறமாக ஓடித் தப்பிச்சென்றுள்ளனர்