‘’நாங்கள் எந்த நிதி மோசடியிலும் ஈடுபடவில்லை!’’ முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்த போது விஜயகலா மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்ட நிதி, ஆலய புனர் நிர்மானங்களுக்கே பயன்படுத்தப்பட்டது என்றும் அந்த நிதியில் நாங்கள் கையாடியதாக திட்டமிட்டு சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர் அதனை நான் வன்மையாகக் கண்டிப்பதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நிச்சயமாக சட்ட நடவடிக்கையும் எடுப்பேன் என முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரர் துவாரகேசன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
நாங்கள் நீண்டகாலம் வர்த்தகக் கப்பல் முதல் பல்வேறு தொழில்துறைகளையும் நடத்துகின்ற வர்த்தகத்தில் முன்னணியில் உள்ளவர்கள். இவ்வாறான வழிகளில் பணம் சேர்க்க வேண்டிய அவசியம் எங்கள் குடும்பத்திற்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் எங்களைப் பற்றிய இந்தப் பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார். இவர்களுக்கு எதிரகா சட்நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றும் துவாரகேசன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இவருடைய முழுமையான நேர்காணல் தேசம்ரியூப்பில் வெளியாக உள்ளது.