துப்பாக்கி – போதைவஸ்து – விலையுயர்ந்த கார்: கனடாவில்தமிழ் பெண்ணும் ஆணும் கைது!
கார் கடத்தல் குற்றச்சாட்டில் சந்தேக நபர்களாக கருதப்படும் இரண்டு தமிழர்கள் டிசம்பர் 10இல் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கனேடிய பொலிஸார் குற்றப் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களோடு இணைந்து இணைந்து குற்றத்தில் ஈடுபட்ட மேலும் இருவரைத் தேடி வலைவிரித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 10 பிரம்டன் நகரில் ஒரு தொகை போதைப்பொருட்களும், களவாடப்பட்ட கார் ஒன்றையும் மீட்டுள்ளனர் பொலிஸார். பிக்கரிங் நகரசைச் சேர்ந்த 34 வயதான சுவிசான் கணேசமூர்த்தி மற்றும் பிரமன் நகரத்தைச் சேர்ந்த 29 வயதான அருண்ஷியா அருளானந்தம் என்ற இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நவம்பர் 4 இரண்டு கனேடிய சாலைகளான ஓல்ட் கெனடி மற்றும் டெனிசன் தெரு வீதிகளில் கார் ஒன்றை மூவர் துப்பாக்கி முனையில் திருடிச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட காரானது 2021 மெர்சிடஸ் ஜி வேகன் (Mercedes g Wagen) என்ற ரகமான பென்ஸ் என்று கூறப்படுகிறது. திருடப்பட்ட காரை மிசுசாகா குடியிருப்பு பகுதியில் கைவிட்டுவிட்டு நாலாவது சந்தேக நபர் ஓட்டி வந்த பி எம் டபிள்யூ (BMW) காரில் மற்றைய மூன்று சந்தேக நபர்களும் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். கடத்தப்பட்ட கார் கைவிடப்பட்ட இடத்திலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கும்பலைச் சேர்ந்த பலரை தேடிவருவதாக அறிவித்துள்ள பொலிஸார். பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.