சொகுபேருந்தும் உழவு இயந்திரமும் மோதி விபத்து!

சொகுபேருந்தும் உழவு இயந்திரமும் மோதி விபத்து!

 

பனங்கொட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த உழவு இயந்திரமும் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தும் நேற்று அதிகாலை கொடிகாமத்தில் மோதி விபத்தில் சிக்கின. இவ் விபத்தில் இவ்விரு வாகானங்களையும் செலுத்தி வந்த சாரதிகள் உட்பட 4 நான்கு பேர் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்தானது ஏ9 வீதியில் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. பெரும்பாலும் இவ்வாறான விபத்துக்கள் அதிகாலை வேளையிலேயே நடைபெறுகின்றது. அதற்கான வாய்ப்புகளே அதிகம். நித்திரைத் தூக்கமும் சோர்வும் அதற்கான காரணங்கள். இது தொடர்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகின்றது. விபத்திற்கான காரணம் முழமையாகத் தெரியவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை தொடர்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *