இலங்கை ஜனாதிபதி இந்தியாவை முதன்மைப்படுத்தியுள்ளார் – பிரதமர் மோடி மகிழ்ச்சி:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நடந்த சந்திப்பில் இந்தியப் பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் கூட்டாக செய்தியாளர் மாநாட்டை நடத்தினர். அப்போது பரஸ்பரம் இரு தலைவர்களும் இத்தகைய ஒரு சந்திப்பு இரு நாடுகளிடேயும் இடம்பெற்றது தொடர்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
மோடி செய்தியாளர் சந்திப்பின் போது இலங்கை ஜனாதிபதி தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்ளும் போது இந்தியாவை முதலாவதாக தெரிவு செய்தமைக்கு மகிழ்ச்சியை தெரிவித்தார்.
அப்போது குறிப்பிட்ட இலங்கை ஜனாதிபதி அநுரகுமார இந்தியாவின் வெளிவிகாரக் கொள்கையில் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் தொடர்பாக இலங்கை கவனத்தில் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் “இந்தியாவின் பாதுகாப்பிற்கிற்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்வகையில் இலங்கையின் பிரதேசத்தை ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது” என்ற உறுதிமொழியையும் தனது உரையில் இந்தியாவிற்கு வழங்கினார்.
ஜனாதிபதியின் இக் கூற்றானது இலங்கை – இந்திய உறவுகள் தொடர்பில் சீனாவுடனான இலங்கை உறவை மையப்படுத்தி எழுப்பட்டு வந்த ஐயப்பாட்டை துடைத்தெறிவதாகவும் இலங்கை இந்தியாவின் தொப்புள் கொடி உறுவுதான் என்பதையும் வலியுறுத்துவதாகவும் அமைந்திருந்தாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.