அனுராவின் இந்திய விஜயம்: இலங்கையில் வடகடலில் இந்திய மீனவர் ஆக்கிரமிப்பு முதல் டிஜிற்றலைசேசன் வரை புரிந்துணர்வு ஒப்பந்தம்:

அனுராவின் இந்திய விஜயம்: இலங்கையில் வடகடலில் இந்திய மீனவர் ஆக்கிரமிப்பு முதல் டிஜிற்றலைசேசன் வரை புரிந்துணர்வு ஒப்பந்தம்:

மூன்று நாள் பயணமாக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவிற்கு இந்தியாவின் குடியரசு தலைவர் மாளிகையில் செம்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கே இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியாலும் இந்திய குடியரசு தலைவர் ஜனாதிபதி திரௌபதி முர்முவினாலும் வரவேற்கப்பட்டார். அதன் பின்னர் டெல்லி ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் காந்தி சமாதிக்கு மலர்வளையம் வைத்து ஜனாதிபதி அநுர அஞ்சலி செலுத்தினார். அப்போது மத்திய இணையமைச்சர் எல். முருகனால் காந்தியின் உருவப்படம் பொதித்த நினைவுச் சின்னமும் மற்றும் காந்தியின் புத்தகமும் வழங்கப்பட்டது.

அதன்பின்னர் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுக்கும் டெல்லியில் பிரதமர் மோடிக்கும் இடையில் இந்தியப் பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அப்போது குறிப்பாக வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பாகவும் இருவரும் விவாதித்தனர். குறிப்பாக இலங்கை தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பிலான அபிலாசைகளை நிறைவேற்றுதல், எல்லை தாண்டி வட இலங்கையில் அடி இழுவை படகுகளைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாகவும் மற்றும் அதானி குழுமத்தின் இலங்கை முதலீடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஊடகங்களுக்கு தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரட்டை வரி விதிப்பை தடுத்தல் மற்றும் அரச அதிகாரிகளின் திறன்மேம்பாடு தொடர்பில் இந்திய- இலங்கை ஆட்சித்தலைவர்கள் முன்பு இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *