பாராளுமன்ற புலிக்குட்டிகளின் வரிசையில் புதிய புலிக்குட்டியாக இணைந்தார் ஊசி அர்ச்சுனா – முழங்கும் புலம்பெயர் தேசத்து ஊடகங்கள்!
சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவ மாபியாக்களை இனங்காட்டியதன் மூலமாக ஓர் புதிய பயணத்தை இலங்கை தமிழர் பகுதிகளில் ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஊசி அர்ச்சுனா தன்னுடைய அதீத மேதாவித்தனத்தால் சமூக வலைத்தளவாசிகளின் கேலி கிண்டலுக்கு உள்ளானார். மேலும் அவரால் முன்வைக்கப்பட்ட சில மருத்துவ குற்றங்களை தாண்டி வேறு எவற்றுக்குமான ஆதாரங்களை அவர் வெளியிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஓர் ஆசனத்தை உறுதிசெய்தார் ஊசி அர்ச்சுனா. பாராளுமன்றத்திற்கு சென்ற பிறகாவது ஓரளவுக்கு கேலித்தனங்கள் இல்லாமல் நடந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் எதிர்க்கட்சித் தலைவருடன் கதிரைக்கு சண்டை, எதிர்க்கட்சி உறுப்பினர் தாக்கிவிட்டார் என முன்பள்ளி மாணாக்கர்கள் போல முறைப்பாடு என தமிழர் ஓர் தெளிவற்ற நபரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டார்கள் என எண்ணுமளவிள்கு நடந்து கொண்டார்.
இந்த நிலையில் பாராளுமன்றத்தில் அவருடைய கன்னி உரை 04.12.2024 அன்று ஆற்றப்பட்டது. அதில் மருத்துவ மாபியா தொடர்பான விடயங்களையும் அதற்கு எதிராக தான் போராடியது பற்றியதும் சிறை சென்றது பற்றியும் பேசுவார் என்று பார்த்தால் வழமையான தூண்டிவிடும் தமிழ்தேசிய அரசியல்வாதிகள் போல தலைவருக்கு வணக்கம், மாவீரர்களுக்கு வீரவணக்கம் என்றும் முழங்கிக் தள்ளினார். ஏற்கனவே தன்னை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை புலிகள் பாணியில் துரோகி முத்திரை குத்தி செல்லும் ஊசி அர்ச்சுனா மாவீரர்கள் பற்றியும் புலம்பெயர் தேசத்து முதலீடுகள் பற்றியும் பேசியதன் மூலம் புலம்பெயர் புலிக்குட்டிகளை உசுப்பி விட்டு அதன் மூலம் தனது பாக்கெட்டினை நிரப்பு போகிறார் என ஊசி எதிர்ப்பு குழுவினர் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இதேவேளை ஊசி அர்ச்சுனாவின் மொழிப்புலமை அவரை ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுவதனை குறிப்பிட்டு பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.