மாவீரர் தினத்தை கொண்டாடியவர்களை ஏன் கைது செய்யவில்லை  என கொழும்பு பிரதான நீதவான் கேள்வி !

இனவாதத்தை தூண்டியதாக கைதான தென்னிலங்கையை சேர்ந்தவர் விடுதலை – மாவீரர் தினத்தை கொண்டாடியவர்களை ஏன் கைது செய்யவில்லை  என கொழும்பு பிரதான நீதவான் கேள்வி !

நாட்டில் மாவீரர் தின நிகழ்வு நடத்தியோரை ஏன் கைது செய்யவில்லை என கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே, குற்ற விசாரணைப் பிரிவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் காணொளிகளை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிலரை பொலிஸார் கைது செய்திருந்த நிலையில் , மாவீரர் நிகழ்வுகளை மேற்கொண்டவர்களை அடையாளம் கண்டு ஏன் அவர்களை கைது செய்யவில்லை என நீதவான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த காணொளியை சமூக ஊடகங்கள் வாயிலாக திரித்து இனவாதத்தை தூண்டும் விதத்தில் பிரசாரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தென்னிலங்கையில், கெலும் ஹர்ஷன கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரை பிணையில் விடுதலை செய்த போது, நிகழ்வினை நடத்தியவர்களை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதவான் , சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்கான சட்ட அவகாசம் குறித்த தகவல்களை முன்வைக்குமாறு , குற்ற விசாரணைப் பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *