மோதல் பிரதேசத்திற்கு மனிதாபிமான பணியாளர்கள் செல்வதற்கான ஒப்புதலை அரசிடம் இருந்து பெறுவதற்கு தம்மால் இயலவில்லை என்று இலங்கையில் பயணம் செய்துவரும் ஐ.நா. மன்றத்தின் தூதரான ஜான் ஹோம்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் விஜயமாக இலங்கை வந்துள்ள ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி சர் ஜோன் ஹோம்ஸ் கொழும்பில் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் இவ்வாறு தெரிவித்துள்ளார்