இவ்வருடத்தில் 2859 மில்லியன் தேங்காய் உற்பத்தி இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த உற்பத்தியில் 2000 மில்லியன் தேங்காய் உள்ளூர் பாவனைக்காகப் பயன்படுத்தப்படுமென்றும் தெங்கு உற்பத்திச் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை தெங்கு, தெங்குசார் உற்பத்தி ஏற்றுமதி மூலம் 2007 ஆம் ஆண்டில் 11270 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. இந்த ஏற்றுமதி வருமானம் இம்முறை 21 வீத அதிகரிப்பைக் காட்டி இருப்பதாகவும் தெங்கு உற்பத்தி சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2008 ஆம் ஆண்டில் ஏற்றுமதி மூலம் 13667 மில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் பாவனைக்கு எடுக்கப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள 859 மில்லியன் தேங்காய்களையும் தெங்குசார் உற்பத்தித் துறைக்குப் பயன்படுத்துமாறு அமைச்சர் டீ. எம். ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.