புல்மோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு தொகுதி நோயாளர்கள் நேற்று மாலை மன்னார் பொது வைத்தியசாலைக்கு 20 அம்புலன்ஸ்கள் மற்றும் வாகனங்களில 255 நோயாளர்கள் அழைத்து வரப்பட்டனர்.
வன்னியில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக இதுவரையில் 3000 நோயாளர்கள் வரை மன்னார் வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர். இவர்களில் நன்கு குணமடைந்த சுமார் 300 நோயாளர்கள் வரை வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் அநேகமானோர் சிறுவர்களும் பெண்களுமாவர் என்பது குறிப்பிடத்தக்கது.