சாமிமலை நகருக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு பெருந்தோட்ட கட்டமைப்பு பிரதியமைச்சரும், இ.தொ.கா தலைவருமான முத்து சிவலிங்கம் 55 இலட்சத்து 153 ரூபாயை தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கியுள்ளார்.
நீர் விநியோகத் திட்டத்தை வெகு விரைவில் திறந்து வைக்கவிருக்கிறார். கெளரவில, பார்குரோ, மின்சிங்லேன் ஆகிய தோட்டங் களின் வீடமைப்புத் திட்டத்தையும் வெகுவிரைவில் திறக்கவிருக்கிறார். சாமிமலை கொழும்புத் தோட்டம், ஸ்டொக்கம் ஆகிய தோட்டங்களுக்கு மின்சார விநியோ கத்திற்கு 2 இலட்சத்து 97 ஆயிரத்து 900 ரூபாயையும் ஒதுக்கியுள்ளார்.
கடவளை தமிழ் வித்தியாலய கட்டிடங்களுக்கு 69 இலட்சத்து 24 ஆயிரத்து 64 ரூபாய் ஒதுக்கியுள்ளதோடு திறப்பு விழாவும் வெகு விரைவில் நடைபெறும். பின்னோயா, கீழ்ப்பிரிவு தமிழ் வித்தியாலயத்தின் மின்சாரத்திற்கு 11 இலட்சத்து 13 ஆயிரத்து 900 ரூபா யையும், சென்ன தமிழ் வித்தியால கட்டிடத் திறப்பு விழாவிற்கும் 93 இலட்சத்து 52 ஆயிரத்து 155 ரூபாயையும் ஒதுக்கியுள்ளார்.
மஸ்கெலியா பகுதிக்கு பிலரத்தோல் டிவிஷனின் மின்சாரமும், மின்சார தூண்களுக்கும் 34 இலட்சத்து 35 ஆயிரத்து 900 ரூபாயையும், டங்கல்ட் தோட்டத்திற்கு மின்சாரம் பெறவும், செலவீனத்திற்கு 72 இலட்சத்து 48 ஆயிரத்து இருநூறு ரூபாயையும், கிளன்டில் மஸ்கெலியா டிவிசன் நீர் விநியோகத்திற்கு 55 இலட்சத்து நூற்றி ஐம்பத்திமூன்று ரூபாயையும், மஸ்கெலியா குயின்ஸ் லன்ட் டிவிசன், பிரவுன்சிக் கட்டிட நிர்மாணத்திற்கு 41 இலட்சத்து 4 ஆயிரத்து முன்னூற்றி தொண்ணூற்றி ஏழு ரூபாயையும் ஒதுக்கியுள்ளார்