யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிாிழந்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் குறித்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கல்வி பொதுத்தராதர உயா்தரத்தில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடா்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளின் சாரதிகளின் கவனயீனத்தால் A9 சாலைகளில் அண்மையில் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.