பாடசாலை சிற்றுண்டி உணவக பெண்னை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய பாடசாலை அதிபர் கைது !

பாடசாலை சிற்றுண்டியின் உரிமையாளரான பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டில், அப்பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மொனராகலை கலபெத்த மகா வித்தியாலய அதிபர், பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தொம்பகஹவெல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

கலபெத்த அலபொத்த பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இந்த பெண், கடந்த (28) உணவகத்தை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் பாடசாலையின் ஆசிரியை ஒருவர் வந்து, சிற்றுண்டிச்சாலையில் விளக்குகள் அணைக்கப்படவில்லை என்று கூறினார். மாலை 3.40 மணியளவில் பாடசாலைக்கு விளக்குகளை அணைக்கச் சென்றுள்ளார். விளக்குகளை அணைத்துவிட்டு வீட்டுக்குச் செல்ல இருந்தபோது அதிபரால் பாலியல் வன்கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.

 

சம்பவம் தொடர்பில் தொம்பகஹவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *