40,000-இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதிர்ச்சி!

நாடளாவிய ரீதியில் 40,000-இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

 

சுகாதார ஊழியர்கள், நிறைவுகாண் வைத்திய ஊழியர்கள், தாதியர்கள் என சில தரப்பினர் தாம் வசிக்கும் பகுதிகளில் வைத்தியர்களை போன்று செயற்பட்டு சிகிச்சைகளை வழங்குகின்றமையை காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

 

நாட்டின் சுகாதார கட்டமைப்புக்குள் நோயாளர்களுக்கான மருந்துகளை வழங்குவதற்கு துறைசார் அறிவு, பொறுப்பு மற்றும் அதிகாரம் என்பன வைத்தியர்களுக்கு மாத்திரமே காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

 

ஏனைய எந்தவொரு தரப்பினருக்கும் அதற்கான அதிகாரம் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *