தமிழ் மக்களின் வெளிநாட்டு மோகம் – கனடாவுக்கு அனுப்புவதாக கூறி யாழ்ப்பாணத்தில் ஏழு கோடி ரூபாய் மோசடி !

கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போதே இந்த தகவல் வெளிவந்துள்ளது.

 

இது குறித்து மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கனடாவுக்கு அனுப்புவதாக ஆசை காட்டி யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பண மோசடிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்த மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *