இந்தியா வின் ஆன்மீகத் தலைவரும் வாழும் கலை நிலையத்தின் நிறுவுநருமான ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருஜி மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை கொழும்பு வருகிறார். வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக அவர் பௌத்த மதத்தலைவர்களையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச்சு நடத்துவார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்கும் அவர் வவுனியா சென்று நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர் களையும் சந்தித்து அவர்களின் கஷ்டங் களையும் கேட்டறிவார்.