இலங்கையில் மத்திய அரசினால் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகளின் விசேட திருத்தச் சட்டமூலம் தொடர்பாக மாகாண சபைகள் தமது கருத்துக்களை தெரிவிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை ஜனாதிபதி மேலும் ஒரு மாத காலம் நீடித்தள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் கிழக்கு மாகாண ஆளுனருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தேச திருத்த சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்படவிருந்த வேளையில் வெள்ளிகிழமையன்று கிழக்கு மாகாண சபையில் விவாதிக்கப்பட்ட போதிலும், இது தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படாத நிலையில், எதிர்வரும் திங்கள்கிழமைக்கு கிழக்கு மாகாண சபையின் அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறிப்பிட்ட இந்த அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்திலிருந்து மாகாண ஆளுனருக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.