நில அதிர்வுகளையும் சுனாமி ஆபத்தையும் முன்கூட்டியே அறிந்துகொள்ள ஏற்பாடு!

alert_towers1.jpgநாட்டில் அனர்த்த முகாமைத்துவ முன்னேற்பாடுகளை விஸ்தரிக்கும் திட்டத்தின் கீழ் நில அதிர்வுகளையும் சுனாமி ஆபத்தையும் முன்கூட்டியே அறிவிக்கக்கூடிய இரு கருவிகள் பொருத்தப்படவுள்ளதாக இலங்கை புவிச்சரிதவியல் சுரங்க ஆய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் கலாநிதி கிஸ்ரி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்திலுள்ள மஹகந்தராவ மற்றும் மாத்தறையிலுள்ள ஹக்மன ஆகிய பிரதேசங்களில் பொருத்தப்படவுள்ள இவ்விரு கருவிகளும் அமெரிக்காவின் கலிபோனிய பல்கலைக் கழகத்தின் புவிச்சரிதவியல் பிரிவுடன் இணைந்ததாக செயற்படும்.

இந்து சமுத்திரத்தில் ஏற்படக்கூடிய சுனாமிப் பேரலைகள் குறித்து துரித தகவல்களைப் பெறும் ஆற்றல் இலங்கைக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் அனர்த்தங்கள் குறித்து மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *