இரண்டாம் வருட மாணவர்களை தாக்கிய 7 சிரேஷ்ட மாணவர்களுக்கு விளக்கமறியல் !

சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவி மற்றும் இரு மாணவர்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பில்  கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 7 சிரேஷ்ட மாணவர்களையும் நாளை  (13) வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதிவான்  ஹெஷானி ரொட்ராகோ இன்று (12) உத்தரவிட்டார்.

சமனலவெவ பொலிஸாரிடம் சரணடைந்ததையடுத்து  பொலிஸார் அவர்களைக் கைது செய்து பலாங்கொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

சப்ரகமுவ,  பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று நேற்று (09) இரவு மின்சாரத்தை துண்டித்த பின் இவர்களைத் தடிகளால் தாக்கியதகாக விசாரணைகளில் தெரிய வருகிறது.

காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக பலாங்கொடை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *