காங்கேசன்துறைக்கும் திருகோணமலைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்.

green-ocean.jpgயாழ்.  அரச அதிபர் கே.கணேஷ் இத் தகவலை நேற்றிரவு தெரிவித்தார். “கிறீன் ஓஷன்” கப்பல் நாளை காலை காங்கேசன்துறையை வந்தடைந்து மாலை திரும்பப் புறப்பட உள்ளது. எனவே கப்பலில் பயணம் செய்ய பதிவு செய்தவர்களையும் அவசர தேவைக்காக பயணம் செய்ய இருப்பவர்களையும் நாளை முற்பகல் 11 மணிக்கு யாழ். ரயில் நிலையப் பகுதிக்கு பயண ஏற்பாடுகளுடன் வரவேண்டும் என்றும் அரச அதிபர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *