பொருளாதார நெருக்கடி எதிரொலி – கல்விச் சூழலில் இருந்து இடைவிலகும் ஆண் மாணவர்கள்!

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வியில் இருந்து மாணவர்கள் குறிப்பாக ஆண் மாணவர்கள் இடைவிலகும் வீதம் அதிகரித்துள்ளதுடன் பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் பல்வேறு காரணிகளினால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள்ளதாக ஜே .வி.பி. எம்.பி.யான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் கல்வியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

கொரோனா பெருந்தொற்று தாக்கத்தினால் கல்வித்துறை பெரும் பாதிப்பை எதிர்கொண்டது.கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கல்வித்துறைமை மேம்படுத்த எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பாடத்திட்டங்களை நிறைவு செய்வது முழுமையடையவில்லை.அதன்பின்னர் பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.பாடசாலை மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

 

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வியில் இருந்து மாணவர்கள் குறிப்பாக ஆண் மாணவர்கள் இடைவிலகும் வீதம் அதிகரித்துள்ளது..பெரும்பாலான பல்கலைக் கழகங்கள் இலாபமடையும் நோக்கத்துடன் செயற்படுகின்றன.நிர்வாக கட்டமைப்பின் மோசடியால் மாணவர்கள் தான் இறுதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *