களுத்துறை சிறையில் தப்பி செல்ல முயன்ற கைதிகள் மீது துப்பாக்கி பிரயோகம்: 6 பேர் பலி

களுத்துறை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகத்தில் தப்பி செல்ல முயன்ற 11 கைதிகளில் 6 பேர் பலியாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் சரணடைந்துள்ளதாகவும் களுத்துறை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *