தேர்தல் நடத்தை விதி மீறிய லாலு திடீர் கைது – ஜார்கண்டில் பரபரப்பு

laluprasat.jpgமுன் அனுமதி பெறாமல் பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கிய விவகாரத்தில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தை ஜார்கண்ட் போலீசார் நேற்று திடீரென கைது செய்தனர். பிரசார பொதுக்கூட்ட மேடையில் அவரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜார்கண்ட் மாநிலம் கார்வா பகுதியில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கடந்த 7ம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது, லாலு வந்த ஹெலிகாப்டர், அதற்காக அமைக்கப்பட்டிருந்த தளத்தில் இறங்கவில்லை. பொதுக் கூட்டம் நடந்த இடத்துக்கு அருகில் இருந்த பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்கியது. இது தேர்தல் நடத்தை விதி மீறல் என்று கூறி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் ஜார்கண்டில் பிரசாரம் செய்ய லாலு நேற்று மீண்டும் வந்தார். பலாமு தொகுதியில் போட்டியிடும் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் குரன் ராமை ஆதரித்து பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசினார். அப்போது, பொதுக்கூட்ட மேடையில் ஏறிய போலீசார், லாலுவை கைது செய்தனர். இதனால் பிரசார கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், உடனடியாக அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *