வருண் காந்தியை ரோடு ரோலரை ஏற்றி கொன்றிருப்பேன் என்று பேசிய ரயில்வே அமைச்சர் லாலுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கு “சட்டம் என்கிற ரோலரை’ என்ற பயன்படுத்து சட்டப்படி நசுக்கியிருப்பேன் என்பதைத் தான் அப்படிக் கூறினேன் என்று லாலு விளக்கமளித்தார். இந்நிலையில், துணை தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வருண் காந்தி ஒரு சமூகத்துக்கு எதிராகப் பேசியதால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. லாலு தனிப்பட்ட நபருக்கு எதிராகப் பேசியதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மூத்த தலைவர் என்ற முறையில் லாலு அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. எனவே, அவர்களது பேச்சுகள் குறித்து தேர்தல் ஆணையம் கடும் அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறது என்றார்.