வைத்தியசாலைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – வைத்தியர் 200,000 ரூபா பிணையில் விடுதலை !

புளியங்குளத்தில் உள்ள தனது தனியார் வைத்திய நிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில் அனுராதபுரம் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வைத்தியர் 200,000 ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரது கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *