மாவீரர் நினைவேந்தலை தடை செய்ய கோரிய பொலிஸார் விண்ணப்பத்தை நிராகரித்தது மல்லாகம் நீதவான் நீதிமன்றம்!

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட விணணப்பம் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் இன்றையதினம் நிராகரிக்கப்பட்டது.

 

நாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுஸ்டிப்பதை தடை செய்ய கோரியே காவல்துறையினர் விண்ணப்பம் செய்தனர்.

 

நினைவு கூரும் உரிமையை யாரும் தடை செய்ய முடியாது. எதிர்மனுதாரர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் வாதத்தை தொடர்ந்து, வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம், நினைவு கூரும் உரிமையை யாரும் தடை செய்ய முடியாது.

 

தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல் நினைவேந்தலை நினைவுகூர முடியும் என தெரிவித்ததுடன் காவல்துறையின் தடை கோரிய விண்ணப்பத்தை நிராகரித்தது.

 

எதிர்மனுதாரர்களின் சார்பில் வி.மணிவண்ணன் உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

 

இதேவேளை மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி கடந்த வெள்ளியன்று மல்லாகம் நீதிமன்றத்தில் மானிப்பாய் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் கட்டளை நாளை (21) வழங்கப்படவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *