கொழும்பு துறைமுக நகரில் Cryptocurrency நிலையங்களுக்கு அனுமதி!

கொழும்பு துறைமுக நகரில் இரண்டு க்ரிப்டோகரன்சி (Cryptocurrency) பணப்பரிமாற்ற மத்திய நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அறிவித்துள்ளது.

 

அண்மையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கமைய, குறித்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் கருத்தையும் அறிந்து குழுவிற்கு தெரியப்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

கொழும்பு துறைமுக நகரத்தில் செயற்படும் மட்டத்தில் காணப்படும் வணிகங்களை ஒப்பந்தம் செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை 4 வாரங்களுக்குள் குழுவிற்கு பெற்றுக்கொடுக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *