போதைப்பொருள் பாவனையால் விரக்தி..? – தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

திருகோணமலை – மட்கோ பகுதியில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

திருகோணமலை பாலையூற்று பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது.

 

இச் சம்பவத்தில் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த அபயரத்னகே தரிந்து அசங்க (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இச்சம்பவம் தொடர்பாக திருகோணமலை ரயில்வே திணைக்களத்திடம் விசாரித்தபோது குறித்த சம்பவம் கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு இன்று (14) காலை வந்த ரயிலின் சாரதியிடம் விசாரித்ததாகவும் குறித்த சம்பவம் இடம்பெற்றது தொடர்பாக தனக்கு தெரியாது எனவும் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *