அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கையும் அமெரிக்காவும் பொது நிலைப்பாடு

president.jpgபரந்துபட்ட அரசியல் விவகாரங்களில் குறிப்பாக பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவும் இலங்கையும் பொதுவான ஜனநாயக விழுமியங்களையும் கொள்கைகளையும் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் இறைமை, ஒருமைப்பாடானது பேச்சுவார்த்தைக்கு இடமற்றது என்ற அமெரிக்க அரசின் தலையாய நிலைப்பாட்டை இலங்கை மக்களும் அரசாங்கமும் மிகவும் பாராட்டுகின்றன.

ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலமும் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதன் ஊடாகவும் இலங்கையில் சமாதானத்தை வென்றெடுக்க அமெரிக்கா ஆற்றிவரும் பங்களிப்பானது எம்மை கவர்ந்துள்ளதுடன் நன்றிக்கும் உரிய தோன்றாகும்.

ஜனாதிபதி பதவிக் காலத்தை வெற்றியுடன் நிறைவேற்ற எனது வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காகவும் வாழ்த்துகிறேன். அத்துடன் தங்கள் பதவிக்காலத்தில் இருநாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் நெருக்கமடையுமென்பது எனது உறுதியான நம்பிக்கையாகும். உலக சமாதானத்துக்காகவும் சுபிட்சத்துக்காகவும் தங்களுடன் நெருக்கமாகப் பணிபுரிவது மகிழ்ச்சியானதாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

ஐ. நா. சபைக்கான தூதராக ரைஸ் நியமனம்: செனட் ஒப்புதல்

ஐ. நா. சபைக்கான அமெரிக்க தூதராக சூசன் ரைஸ் நியமிக்கப்பட்டிருப்பதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னாள் அமெரிக்க கிளின்டன் நிர்வாகத்தில் வெளியுறவுத்துறையில் அமெரிக்க விவகாரங்களுக்கான துணை அமைச்சராக இருந்தவர் சூசன் ரைஸ். இவரை ஐ.நா.வுக்கான தூதராக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நியமித்துள்ளார்.

இந்த நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பதவியில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். போக்குவரத்து அமைச் சராக ரே லாகுத் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக ஷான் டோனோவன் ஆகியோரது நியமனத்திற்கும் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

யசூசி அகாசி திருகோணமலைக்கு விஜயம்

yasusi.jpgஇலங் கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசூசி அகாசி திருகோணமலைக்கு சென்றுள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவில் கொழும்பிலிருந்து விசேட விமானமொன்றில் திருகோணமலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனரையும் சந்திக்கும் யசூசி அகாசி பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றையதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்த ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகப் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு விஜயம்

flag_uk.jpg
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹெய்ன்ஸ் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

மட்டக்களப்புக்கு நேற்று விஜயமொன்றை மேற்கொண்ட பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹெய்ன்ஸ் மாவட்ட மறைமாவட்ட ஆயர், மாவட்ட அரச அதிபர் உட்பட உயரதிகாரிகளையும் சந்தித்து அங்குள்ள தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் அவர் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

லங்கா ஈ நியூஸ் பிரதம ஆசிரியர் 4ஆம் மாடியில் நேற்று தீவிர விசாரணை

லங்கா ஈ நியூஸின் பிரதம ஆசிரியர் சந்துருவன் சேனாதீர நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் (சி.ஐ.டி.) தீவிர விசாரணைக்குட் படுத்தப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் முறைப்பாடொன்றையடுத்தே இவர் சி.ஐ.டி.யினரால் விசாரணைக்குட் படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு கோட்டையிலுள்ள சி.ஐ.டி.யினரின் தலைமையகமான நான்காவது மாடிக்கு வரவழைக்கப்பட்டே ஆறு மணிநேரத்துக்கும் மேலாக நேற்று தீவிர விசாரணைக்குட் படுத்தப்பட்டார்.கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தில் வெளியான செய்தி ஒன்று தொடர்பாகவே இவரிடம் இரகசியப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  இந்தச் செய்தி தொடர்பாக முன்னரும் லங்கா ஈ நியூஸ் அலுவலகத்துக்கு வந்து சி.ஐ.டி.யினர் விசாரணைகளை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்
 

விடுதலைப் புலிகளின் கண்ணிவெடி தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் பாரிய முகாம்கள் கண்டுபிடிப்பு

_army.jpgமுல்லைத் தீவு புதுகுடியிருப்புக்கு மேற்கில் அமைக்கப்ப ட்டிருந்த புலிகளின் கண்ணிவெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உட்பட பாரிய முகாம் தொகுதி ஒன்றை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் இரண்டாவது செயலணியினர் உடையார் கட்டுக்குள காட்டுப்பகுதியில் புதுகுடியிருப்புக்கு மேற்கே அமைந்துள்ள இந்த முகாமை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தப் பிரதேசத்தில் படைநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் இரண்டாவது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரோஹன பண்டார தலைமையிலான படையினர் அங்கு பாரிய தேடுதலுக்கு மத்தியில் தமது நிலைகளை பலப்படுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கண்ணிவெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை, கட்டளை பணியகம் பாதுகாப்பான பதுங்கு குழிகள், மண் அரண்கள் மற்றும் சில களஞ்சியசாலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பாரிய முகாம் தொகுதியாகவே இது அமையப் பெற்றுள்ளது.

அதிசக்தி வாய்ந்த ஜெனரேட்டர்கள் மூலம் 3 வழி மின்சாரம் வழங்கப்பட்டுள்ள இந்த முகாமிலிருந்து ரி – 55 ரக சேதமடைந்த யுத்த தாங்கி – 01, பெருந் தொகையான கண்ணிவெடிகள், வெடிமருந்துகள், 81 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள், 61 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள், பெருந்தொகையான பிளாஸ்டிக் கலன்கள், இரும்பு போலைகள், பற்றரிகள், பெருந்தொகையான சிலிண்டர்கள், மற்றும் வயர்களையும் மீட்டெடுத்துள்ளனர். இது தவிர பெருந்தொகையான பி. வி. சி. குழாய்கள் மற்றும் இரும்பு குழாய்களையும், களஞ்சிய பகுதியிலிருந்து படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை இராணுவத்தின் 57 வது படைப்பிரிவினர் தமது பாதுகாப்பு முன்னரங்குகளை மேலும் விஸ்தரித்துள்ளனர். அத்துடன் 574 வது படையினரின் கட்டளைத்தளபதி லெப்டினன்ற் கேர்ணல் சேனக விஜேசூரிய தலைமையிலான குழுவினர் நெத்தலியாறு பிரதேசத்தை ஊடுறுத்து விசுவமடுவின் மேற்கு எல்லை புரத்திற்குள் பிரவேசித்துள்ளனர். புதுகுடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய தேடுதலின் போது கொல்லப்பட்ட புலிகளின் ஆறு சடலங்களையும் பெருந்தொகையான ரி – 56 துப்பாக்கிகளையும் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலுள்ள புலிகளின் 3 இலக்குகள் மீது தாக்குதல்

jet-1301.jpgமுல்லைத் தீவிலுள்ள புலிகளின் அடையாளங் காணப்பட்ட மூன்று இலக்குகள் மீது விமானப் படையினர் நேற்று கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் ரக போர் விமானங்கள் மற்றும் எம் – ஐ 24 தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களும் வெற்றியளித்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவு நகருக்கு தென் பகுதி விசுவமடுவுக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள் மற்றும் மண் அரண்கள் மீதே விமானப் படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 57வது, 59வது படைப் பிரிவினர்கள் மற்றும் இரண்டாவது செயலணியினர் ஆகியவற்றுக்கு உதவியாகவே இந்த விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஜனக நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

வன்னிச் சிறுவர்களின் நிலை ராதிகா குமாரசாமி கவலை

rathika-kumarasamy.jpgவன்னியில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக அரச படைகள் மேற்கொண்டுள்ள தாக்குதல்களில் இடைநடுவில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான சிறுவர்களின் நிலைமை குறித்து ஐ.நா.செயலாளர் நாயகத்தின் சிறுவர்கள் மற்றும் ஆயுதமோதல்கள் விவகாரத்திற்குப் பொறுப்பான விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமி விசனமும் கவலையும் தெரிவித்துள்ளார். இடம் பெயர்ந்திருக்கும் சிறுவர்கள் மற்றும் புலிகளால் போருக்குப் பயன்படுத்தப்படும் சிறுவர்களின் நிலைமை தொடர்பாக கவலை அடைந்திருப்பதாக ராதிகா குமாரசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

2008 இன் பின் அரையாண்டுப் பகுதியில் வட இலங்கையில் மோதல்கள் அதிகரித்திருப்பதால் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விடயங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மோதல் இடம்பெறும் பகுதிகளிலிருந்து சிறுவர்களும் அவர்களின் குடும்பங்களும் இடம்பெயர புலிகள் அனுமதியளிக்க வேண்டும். அதேசமயம் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கான உதவிகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்று ராதிகா வலியுறுத்தியுள்ளார்.

இடம் பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்படும் எந்தவொரு முகாமும் சர்வதேச தரத்திற்கு அமைவானதாகவிருக்க வேண்டும். இடம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச உள்ளூர் மனிதாபிமான பணியாளர்களுடன் இலங்கை இணைந்து பணியாற்றவேண்டும் என்றும் ராதிகா கூறியுள்ளார். அத்துடன் யுத்தத்தில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்களை விடுதலைப்புலிகள் உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் ராதிகா வேண்டுகோள்விடுத்திருக்கிறார். அவர்களின் வாழ்வைய் பாதுகாப்பது எப்படி என்பது தொடர்பான பேச்சுக்களில் அரசாங்கம் பங்கேற்கும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ள ராதிகா அதிகாரிகளும் மனிதாபிமான நடவடிக்கையிலீடுபடுவோரும் இந்த சிறுவர்களை தத்தமது குடும்பங்களுடன் சேர்ப்பதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். சிறுவர்களை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்களே அடுத்த தலைமுறையினராகும் சாத்தியமான அளவுக்கு அவர்கள் பாதுகாக்கப்படவேண்டியது அவசியம் என்றும் ராதிகா கூறியுள்ளார்.

மேனன், அகாசி வருகை பயங்கரவாத ஒழிப்புக்கு எந்த பாதிப்பையும் தராது – போகொல்லாகம

rohitha-bougo.jpg
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடொன்றை செய்யும் பொருட்டே ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவரான யசூசி அகாசி இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக வியாழக்கிழமை சபையில் தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, அகாசியின் இந்த விஜயத்தால் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எந்தவொரு தடங்கலும் ஏற்படாதெனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற குழுத் தலைவரான அநுரகுமார திஸநாயக்க, இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் ஜப்பானின் இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி ஆகியோரின் இலங்கை விஜயங்களுக்கான நோக்கம் மற்றும் அவர்கள் நடத்திய சந்திப்புகள், இவற்றின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள், எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசும்போதே அமைச்சர் போகொல்லாகம இவ்வாறு கூறினார். அத்துடன், இரு தரப்பு உறவுகள், இலங்கை மற்றும் சார்க் வலய அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைவரங்கள் பற்றி பேச்சுக்களை நடத்தவே இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கை வந்திருந்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் இதன்போது மேலும் விளக்கமளிக்கையில்;  “இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவானது முன்னொருபோதும் இல்லாத வகையில் சுமுகமான ஒத்துழைப்புடன் இருப்பதாக இரு தரப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இதற்கமைய இரு நாடுகளுக்குமிடையில் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் இருதரப்பு பேச்சுக்களுக்கான அழைப்பு எப்போதும் திறந்தே உள்ளது.  இதற்கமைய இருநாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் உறுதிப்படுத்திக்கொள்வது மற்றும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போதைய அரசியல், மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு நிலைவரங்கள் பற்றி நன்கு மதிப்பீடு செய்து அது தொடர்பாக இருதரப்பு கருத்துக்களை பரிமாறிக் கொள்ளல் ஆகியவையே சிவ்சங்கர் மேனனது இலங்கை விஜயத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது.

இதேநேரம், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த ஜப்பானினால் மேற்கொள்ள வேண்டிய உதவி செயற்பாடுகள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மதிப்பீடொன்றை செய்யவும், அது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசவுமே யசூசி அகாசி இலங்கை வந்திருக்கிறார்.  இந்த பேச்சுகளினால் இலங்கையின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் எந்த வகையிலும் பாதிப்போ அல்லது பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எந்த தடங்கலோ ஏற்படாது. அகாசி இந்த விஜயத்தில் பலதரப்பட்ட அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசவிருக்கிறார்’ என்றார்.

ஊடகச் சுதந்திரத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் எந்தச் செயற்பாட்டையும் அரசு அனுமதிக்காது

rivira-editor-02.jpgஊடகச் சுதந்திரத்திற்கு இழுக்கை ஏற்படுத்தும் எந்த விதமான செயற்பாட்டையும் அரசாங்கம் அனுமதிக்காது; செய்தியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என்று பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றும் குற்றவாளிகளைக் கண்டறிய புலனாய்வுத்துறை விசாரணைகள் முனைப்புடன் இடம்பெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் மீதான நெருக்கடிகள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாகவும், இதனைத் தடுத்து நிறுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள் ளுமாறும் ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்கவும், ஜே. வி. பி. எம்.பி. சுனில் ஹந்துன்னெத்தியும் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்களுக்கும் பிரபுக்களின் பாதுகாப்பு வழங்கி பாராளுமன்றத்திற்கு அழைத்துவர வேண்டிய நிலை ஏற்படுமென்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், ஊடகச் சுதந்திரம் பாதிப்படைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அண்மைய சம்பவங்கள் குறித்து முறையான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.