அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

திருமலை மீள்குடியேற்ற கிராமங்களுக்கு பாதுகாப்பு செயலர் நேற்று விஜயம்

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ திருகோணமலையிலுள்ள மொரவெவ திவுல்வெவ மீள்குடியேற்ற பிரதேசத்திற்கு நேற்று விஜயம் செய்தார்.

விமானப்படையின் சேவா வனிதா பிரிவினால் மொரவெவவில் மீள்குடியமர்த்தப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்களின் கல்வி நடவடிக்கையை கருத்திற்கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஆரம்பப் பிரிவு பாடசாலையையும் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

மயோன் முஸ்தபாவிற்கு பிடிவிராந்து உத்தரவு

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவிற்கு கல்கிசை நீதிமன்றம் பிடிவிராந்து ஆணை பிறப்பித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மலிற்கு, மயோன் முஸ்தபா 4200000 ரூபா லஞ்சமாக வழங்கியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று குறித்த விடயம் தொடர்பாக கல்கிசை நீதிமன்றத்தில் விசானைக்கு எடுத்துக் கொண்ட போது மயோன் முஸ்தபா நீதிமன்றத்தில் ஆஜராகாதமையால் கல்கிசை நீதிமன்றம் பிடிவிராந்து ஆணை பிறப்பித்துள்ளது. இருப்பினும் முன்னாள் அமைச்சர் மயோன் முஸ்தபா தற்போது வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சந்தன கதிரியாராய்ச்சி உட்பட 4 பேர் விளக்கமறியலில்

candana.jpg1996 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் நாள் பிலியந்தலையில் சி.டி.சந்திரரத்ன என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக முன்னால் பிரதி அமைச்சர் சந்தன கதிரியாராய்ச்சி உட்பட 4 பேரை இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கை ஒரு ஜூரி சபையின் கீழ் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளவும் கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

பயங்கரவாத ஒழிப்பு அனுபவத்தை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயார் – ஜனாதிபதி

ugrain.jpgநாட்டின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. எனினும், ஏனைய நாட்டுப் படைகள் நாடொன்றின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வாக முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை இதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேன் சென்றிருக்கும் ஜனாதிபதி நேற்று மாலை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார். பயங்கரவாதிகளை தோற்கடிப்பதில் இலங்கைக்கு கிடைத்துள்ள அனுபவமானது பயங்கரவாத செயற்பாடுகளின் சவால்களுக்கு முகம் கொடுத்துவரும் ஏனைய நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாகுமெனவும் ஜனாதிபதி இதன் போது கூறினார்.

ஜனாதிபதி இங்கு மேலும் உரை நிகழ்த்துகையில், எமது இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பான செயற்பாட்டின் பயனாகவே எமது நாட்டுக்கு இந்த பாரிய வெற்றி கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். குரூர பயங்கரவாதத்தினை தோற்கடிப்பதில் எமக்கு கிடைத்த அனுபவத்தை பயங்கரவாதத்தின் சவால்களுக்கு முகம் கொடுத்து வரும் ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு நாம் தயாரெனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

பயங்கரவாதிகளை தோற்கடிக்கும் செயற்பாட்டின்போது உக்ரேன் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பினை ஜனாதிபதி இதன் போது நினைவுகூர்ந்தார்.

500 பேரின் கண் சத்திரசிகிச்சைக்கான செலவை ஏற்கிறார் சல்மான் கான்

salman.jpgவடக்கு, கிழக்கு மற்றும் வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருக்கும் கண்ணில் விழிவெண்படலம் படர்ந்துள்ள 500 பேருக்கு தமது சொந்த செலவில் கண் சத்திர சிகிச்சை செய்வதற்கு இந்தியாவின் முன்னணி பொலிவுட் நடிகர் சல்மான்கான் முன்வந்துள்ளார்.

இது விடயமாக நடிகர் சல்மான்கான் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி மூலம் நேற்றுமுன்தினம் கலந்துரையாடி தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.  இத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கேற்ப இந்தியாவின் ஐந்து கண்சத்திர சிகிச்சை நிபுணர்களும், இச்சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களும் மருந்து பொருட்களும் அடுத்துவரும் இரண்டு மூன்று தினங்களில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன. இக் கண்சத்திர சிகிச்சை கொழும்பு கண்ணாஸ்பத்திரியில் நடைபெறும். அதேநேரம் கண் நோயாளர்களுக்குப் பாவிக்கவென ஒரு தொகை கண்வில்லைகளை வழங்கவும் நடிகர் சல்மான்கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கே.பி.யை நம்பவேண்டாம் அரசை எச்சரிக்கிறார் பொன்சேகா

கே.பி. அல்லது குமரன் பத்மநாதனை நம்பவேண்டாம் என்று முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயக தேசியக்கூட்டணி எம்.பி.யுமான ஜெனரல் சரத் பொன்சேகா அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி. பயங்கரவாதியெனவும் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளை அவர் தவறான விதத்தில் வழிநடத்திச் செல்லக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

கே.பி. கைதாகி பல மாதங்கள் கடந்திருக்கும் நிலையில்அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க அரசு ஏன் தவறிவிட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.முன்னாள் புலித்தலைவருடன் இணைந்து செயற்படுவதற்கான அரசின் ஆர்வமானது பாதுகாப்பு படைகளின் மனநிலையை பாதிக்கச் செய்யும் நடவடிக்கை என்றும் பொன்சேகா கூறியுள்ளார்.

அத்துடன், கே.பி.யை சிறை வைக்கத் தவறியமை வெட்கக்கேடானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனிதர் பெருந்தொகை பணத்தை வைத்திருக்கிறார். இதனால், அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை அல்லது அவரை சிறைவைக்காமல் அரசாங்கம் சில சமயங்களில் இருக்கலாம். இது வெட்கக்கேடான விடயமாகும்.

ஏனென்றால் பிரிகேடியர்கள், ஜெனரல்கள் போன்ற யுத்த கதாநாயகர்கள் பலர் இன்று சிறையில் உள்ளனர். அதேசமயம் பயங்கரவாதிகள் உல்லாசமாக உள்ளனர் என்று பொன்சேகா டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறியுள்ளார்

யாழ்., வன்னிக்கு நிரந்தர மின்சாரக்கட்டமைப்பு- ஆரம்ப கட்டத்திற்கு ரூ. 6,376 மில். செலவு

ranawaka.jpgகிளிநொச்சி, சுன்னாகம், வவுனியா பிரதேசங்களை இலக்காகக் கொண்ட மின்சாரத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கென 6,376 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளதாக மின்வலு, எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.

கிளிநொச்சி, சுன்னாகம் வரையிலான முதலாவது மின் இணைப்புத் திட்டத்துக்கு 3276 ரூபா செலவிடப்படவுள்ளது. இரண்டாவது திட்டமான வவுனியா – கிளிநொச்சி வரையிலான திட்டத்துக்கு 3,100 மில்லியன் நிதி செலவிடப்படவுள்ளது

கடமையைப் பொறுப்பேற்கச் சென்றார் இமெல்டா. பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருப்பதாக கணேஷ் தெரிவிப்பு

imalda.jpgயாழ்ப் பாண மாவட்ட அரசாங்க அதிபர் யார் என்பது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை குழப்பகரமான நிலைமை ஏற்பட்டது. அந்த மாவட்ட அரச அதிபர் கே. கணேஷின் பதவிக்காலம் பூர்த்தியடைந்ததைத் தொடர்ந்து அவரின் இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் நேற்று வியாழக்கிழமை கடமையைப் பொறுப்பேற்கவிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், நேற்றுக்காலை யாழ்.கச்சேரிக்கு திருமதி சுகுமார் சென்றிருந்த போது கே.கணேஷின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருப்பதாக அவருக்கு அறிவிக்கப்பட்டது. அரச அதிபர் கணேஷின் பதவிக்காலம் முடிவடைந்ததை முன்னிட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை அவருக்கு யாழ்.கச்சேரியில் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றிருந்தது. ஆயினும் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கணேஷ் நேற்று தனது கடமைகளை மேற்கொண்டதாக யாழ்.கச்சேரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விடயம் குறித்து அரச அதிபரிடம் தொடர்புகொண்ட போது, யாழ்.மாவட்ட அரச அதிபராக மேலும் 6 மாத காலத்துக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதேவேளை, இந்த விடயம் தொடர்பாகத் திருமதி சுகுமாரிடம் கேட்டபோது, யாழ்.அரச அதிபராக நியமிக்கப்பட்டிருக்கும் நியமனக் கடிதத்தை பொது நிர்வாக அமைச்சு எனக்கு வழங்கியுள்ளது. ஆனால், ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னரே கடமையைப் பொறுப்பேற்பது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று கூறினார்.

பகிடிவதைக் குற்றச்சாட்டு:- சப். பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் இடைநிறுத்தம்

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சப்ரகமுவ பல் கலைக்கழக மாணவர்கள் 2 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப்பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும், முகாமைத்துவபீடத்தைச் சேர்ந்த 2 மாணவர்களுமே இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தில் புதிய மாணவியொருவரின் தலைமயிரை வெட்டியமை, இன்னுமொரு மாண வரை உடல் ரீதியாகத் தாக்கிய குற்றச்சாட்டுகளின் பேரிலேயே குறித்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் ஏற்படுத்தியுள்ள சமாதான சூழ்நிலையை குழப்ப சிலர் முயற்சி- அமைச்சர் பசில்

basil.jpgஅரசாங்கம் வடபகுதியில் ஏற்படுத்தியுள்ள சமாதான சூழ்நிலையை தெற்கில் படுதோல்வி அடைந்துள்ள சில அரசியல் கட்சிகள் குழப்புவதற்கு முயற்சி செய்வதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புணர்வுடன் செயற்படுவதுடன் அரசாங்கத்தின் மீள்குடியேற்ற வேலைத் திட்டங்களில் இணைந்து செயற்பட முன்வந்திருப்பதையிட்டு அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேனெனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2010ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை அரசாங்கத் தரப்பில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :

சர்வதேச நாணய நிதியம் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு தான் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை வழங்குகின்றது. அவர்கள் எமக்கு எந்த நிபந்தனையும் விதிக்காமல் தான் நிதியுதவி வழங்குகின்றார்கள்.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆகிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களில் நாம் நிதியுதவி பெறுகின்றோம். நாம் அந்த நிறுவனங்களில் உறுப்புரிமையைப் பெற்றிருப்பவர்கள் என்ற அடிப்படையில் தான் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ளுகின்றோம். நாம் இந்நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளுவதற்காக எந்த அரச நிறுவனத்தையும், சொத்தையும் தனியார் மயப்படுத்த மாட்டோம். நாட்டு மக்களுக்கு வழங்குகின்ற நிவாரணங்களையும், மானியங்களையும் குறைக்க மாட்டோம்.  அரச துறையில் ஆட்குறைப்பு செய்ய மாட்டோம் போன்றவற்றை அந்நிறுவனங்களுக்கு தெளிவாகக் கூறி வைத்துள்ளோம். நாம் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் நிதியுதவி கேட்போம். அதற்காக நாட்டின் இறைமையையும், சுயாதிபத்தியத்தையும், தனித்துவத்தையும் ஒருபோதும் காட்டிக் கொடுக்க முடியாது. இவ்விடயத்தில் ஜனாதிபதி தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்த போது சர்வதேச நிதி நிறுவனங்களில் நிதியுதவி பெற்ற போது நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் பெற்றனர். 1980 களில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியைப் பெற்றுக் கொள்ளுவதற்காக ஐ. தே. க. ஆட்சியாளர்கள் ஹோட்டல் துறை, யுனைட்டட் மோட்டர்ஸ் உட்பட பல அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தினார்கள்.

1990ம் ஆண்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெற்றுக்கொள்ளவென பசளை மானியத்தை நிறுத்தினார்கள். எஞ்சி இருந்த அரச நிறுவனங்களையும் தனியார் மயப்படுத்திட இணங்கினார்கள். அவ்வாறு நாம் ஒருபோதும் செயற்பட்டது கிடையாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மக்களின் விருப்பப்படி செயற்படுகின்றது. அதன் காரணத்தினால் தான் எல்லாத் தேர்தல்களிலும் ஜனாதிபதி தலைமையிலான ஐ. ம. சு. மு. அமோக வெற்றிபெற்று வருகின்றது. ஐ. தே. க. மக்களிடமிருந்து தூரமாகி வருகின்றது. மூன்று தசாப்த காலப் பயங்கரவாதத்தை ஒழித்து நாடுபூராகவும் தேசியக் கொடி பறக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.