மயோன் முஸ்தபாவிற்கு பிடிவிராந்து உத்தரவு

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவிற்கு கல்கிசை நீதிமன்றம் பிடிவிராந்து ஆணை பிறப்பித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மலிற்கு, மயோன் முஸ்தபா 4200000 ரூபா லஞ்சமாக வழங்கியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று குறித்த விடயம் தொடர்பாக கல்கிசை நீதிமன்றத்தில் விசானைக்கு எடுத்துக் கொண்ட போது மயோன் முஸ்தபா நீதிமன்றத்தில் ஆஜராகாதமையால் கல்கிசை நீதிமன்றம் பிடிவிராந்து ஆணை பிறப்பித்துள்ளது. இருப்பினும் முன்னாள் அமைச்சர் மயோன் முஸ்தபா தற்போது வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *