அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

606 பேர் அரச பகுதிக்கு வருகை

_mullai_1.jpgபாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து 173 பெண்கள், மற்றும் 242 குழந்தைகள் உட்பட 606 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நேற்று முன்தினம் மாலை வந்துள்ளதாக ஊடக மத்திய நிலையம் நேற்று தெரிவித்தது. 173 பெண்களும், 193 ஆண்களும், 112 சிறுவர்களும், 130 சிறுமிகளும் இதில் அடங்குவதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

முல்லைத்தீவு இராமநாதபுரம் பகுதியில் படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் தேடுதலின் போது பெருந்தொகையான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். 60 எம்.எம். மோட்டார் குண்டுகள், எம்.பி.எம்.ஜி. குண்டுகள், 6 லைனர்கள், 4 கிரேன்டுகள், 55 வரை படங்கள், புலிகளின் சீருடை ஒன்று, புலிகளின் தொப்பிகள் 25 என்பவற்றையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தவர்களுள் எவரும் காயமடைந்திருக்கவில்லை எனவும் ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

நாவலப்பிட்டி வைத்தியசாலையில் குழந்தையை கடத்திச் செல்ல முயன்ற பெண்ணுக்கு விளக்கமறியல்

baby.jpgநாவலப்பிட்டி போதனா வைத்தியசாலையில் ஒன்பது நாள் ஆண் குழந்தையொன்றை கடத்திச் செல்ல முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதான பெண்ணை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டி நீதிவான் லலித் ஏக்கநாயக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.  இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

நாவலப்பிட்டி வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட அட்டன் டிக்கோயாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணொருவர் அங்கு பிரசவ வார்ட்டில் தங்கியிருந்த பெண்ணுடன் சிநேகிதம் வைத்துக்கொண்டார்.

இந்நிலையில் அப்பெண்ணின் 9 நாள் ஆண் குழந்தையை இவர் கடந்த 9 ஆம் திகதி கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார். குழந்தையின் தாயிடம் டாக்டர் அவரை அழைப்பதாகக் கூறி வெளியே அனுப்பிவிட்டே இவர் குழந்தையை கடத்திச் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது அங்குவந்த குழந்தையின் தாய் எழுப்பிய கூக்குரலையடுத்து உஷாரடைந்த வைத்தியசாலையின் பணியாளர்கள் குழந்தையைத் தூக்கிச் செல்ல முயன்ற பெண்ணைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, குறிப்பிட்ட பெண்ணை நேற்று வெள்ளிக்கிழமை நாவலப்பிட்டிப் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

கட்டுப்பாட்டு விலையிலும் குறைவாக சந்தையில் பாவனைப் பொருட்கள்- அமைச்சர் பந்துல

bandula_gunawardena.jpgபருப்பு, சீனி உட்பட முக்கிய பாவனைப் பொருட்களுக்கு அரசு கட்டுப்பாட்டு உச்ச விலையை அறிவித்தபோதும் அக்கட்டுப்பாட்டு விலைகளுக்கும் குறைவாகவே சந்தையில் அப்பொருட்கள் விற்கப்படுகின்றன என வர்த்தக, சந்தை  அபிவிருத்தி,  கூட்டுறவு, மற்றும் பாவனையாளர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடாந்தும் கூறுகையில்,

கடந்த வருட புதுவருடத்தை விட இவ்வருடம் பாவனைப் பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் பாவனையாளர்களுக்கு கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேங்காய் எண்ணெய் ஒரு போத்தல் 100 ரூபாவாக நேற்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. தேங்காய் மற்றும் முட்டை என்பன விலை குறைந்துள்ளன.; போட்டி வர்த்தகத்துக்கு இடமளிக்கப்பட்டதே இதற்கான காரணமாகும்.

பாவனைப் பொருட்களின்  விலை அதிகம் வீழ்ச்சியடைவதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் அரசாங்கத்து உண்டு. கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்ட பொருட்கள் பெக்கட்டுக்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்போது அவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை செல்லுபடியாகாது என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வைத்து சில் வர்த்தகர்கள் அப்பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கின்றனர் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தனியார் திறந்த பொருளாதாரக் கொள்கையை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன முதன்முதலாக அமுல்படுத்தினார். ஆனால் நாட்டுக்குப் பொருத்தமான  உண்மையான திறந்த பொருளாதாரக் கொள்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிமுகப்படுத்தியுள்ளார்

இதன் மூலம் அரசாங்கமும்  தனியார் துறையினரும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையமும் பொதுவான நன்மைகளை அடைந்துகொள்ள வழி ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை 81 வன்முறைச் சம்பவங்கள் பதிவு

election_ballot_cast.jpgமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை 81 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 4 மணிவரையான காலப்பகுதியிலேயே இவ் எண்ணிக்கையான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மேல்மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை 28 பாரியளவிலான வன்முறைச் சம்பவங்களும் 53 சிறுவன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அத்துடன், கடுவெல தேர்தல் தொகுதியிலேயே அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதுவரை நடைபெற்ற வன்முறைகளில் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதுடன் ஒருகொலை முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, 6 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. மாவட்ட அடிப்படையில் கொழும்பில் 33 வன்முறைச் சம்பவங்களும் கம்பஹாவில் 25 வன்முறைச்சம்பவங்களும் களுத்துறையில் 23 வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், கட்சி அடிப்படையில் ஐ.ம.சு. முன்னணிக்கு எதிராக 21 சம்பவங்களும், ஐ.தே.க.வுக்கு எதிராக 07 சம்பவங்களும் ஜே.வி.பி.க்கு எதிராக 01 சம்பவமும் ஏனைய கட்சிகளுக்கு எதிராக 52 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க ஊடகங்கள் பக்க பலமாய் இருத்தல் வேண்டும்’

sri-lanka-police00.jpgநாட்டில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டி மக்கள் அச்சமும் பீதியுமின்றி வாழக்கூடிய சூழ்நிலையை உறுதிப்படுத்துவதில் ஊடகங்களும் பக்க பலமாய் இருத்தல் அவசியமாகுமென்று மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர குறிப்பிட்டார். கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டமொன்று கம்பளை நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; ஊடகங்கள் சக்தி வாய்ந்தவை, நாட்டின் நிர்வாகத்துறைசார் நிறை குறைகளை சுட்டிக் காட்டும் ஊடகவியலாளர்களின் பணி தேசியப் பணியாகும். ஊடகங்களுடன் நெருக்கமாக செயற்படுவதன் மூலம் எனது பணிகளை இலகுவில் முன்னெடுக்க வழிவகுக்கின்றது.

பொலிஸ் பணி கௌரவமானது. மக்களின் அங்கீகாரம் பெற்ற பணியாகும். இதனால், தான் பொது மக்கள் பொலிஸாரின் சிறு தவறைக் கூட ஏற்றுக் கொள்ள முன்வருவதில்லை.

பொலிஸ் பணியை வேதனத்தைக் கொண்டு மதிப்பிடக்கூடாது. நாம் புரியும் பணி பணத்தால் அளவிடக் கூடியதல்ல. மக்கள் சேவையால் திருப்தி காண வேண்டும். பொலிஸ் சேவையின் மீது மக்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றனர். எனவே, சில சேவைகளை பொலிஸாரால் மாத்திரமே மேற்கொள்ள முடியம். இதனை வேறு எவராலும் மேற்கொள்ள முடியாது என்றார். இதில் கம்பளை பொலிஸ் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரஞ்சித் கஸ்தூரி ரட்ன மற்றும் கம்பளை, நாவலப்பிட்டி, புசல்லாவ, கலஹா, குருந்துவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

முதலீட்டுக் கம்பனிகளுக்கு குத்தகை அடிப்படையில் காணிகள்

kumarawelgama.jpgஇலங்கையில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டுக் கம்பனிகளுக்கு 50 வருட குத்தகை அடிப்படையில் காணிகளை ஒதுக்கிக்கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர் குமார வெல்கம சமர்ப்பித்திருந்தார்.

ஒதுக்கப்படும் காணியில் 6 மாத காலங்களுக்குள் கைத்தொழில் முயற்சிக்கான கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டும். இல்லையெனில் அக்காணிகளை மீளப் பெறும் அதிகாரமும் அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான கைத்தொழில் பேட்டைகள் ஏற்கனவே குருநாகல், புத்தளம்,  பொலன்நறுவை,  அம்பாறை,  திருகோணமலை, இரத்தினபுரி,  மாத்தளை,  கண்டி, காலி, மாத்தறை, ஹம்பந்தோட்டை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில்,போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

இலங் கையில் உடனடியானதும், நிரந்தரமானதுமான போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி, பிரித்தானியா நேரப்படி இன்று பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமாகியது.

ceasefire.jpg

இப்பேரணியில் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நீண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடாத்தப்பட்டது. இந்த ஊர்வலம் பிரித்தானிய தமிழர்கள் தமது ஆதங்கத்தை பிரித்தானிய அரசக்கும் தமது எதிர்ப்பை இலங்கை அரசக்கும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் வன்னியில் யுத்த யுத்த்ததை நிரந்தரமாக நிறுத்தும்படி வற்புறுத்தியது.

சித்திரைப் புதுவருட காலத்தில் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள்.

igp-sl.jpgஎதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருட காலப்பகுதியில் புலிகளினால் மேற்கொள்ளப்படக் கூடிய நாசகார தாக்குதல்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸ் மா அதிபர் ஜயந்த விரமரட்ண பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

68, 863 மக்கள் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு வருகை

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகளின் கட்டுப்பாட்டை மீறி பாதுகாப்பு வலயத்தில் இருந்து மேலும் 200 பொது மக்கள் இன்று (ஏப். 11) காலை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். புலிகளிடமிருந்து தப்பித்து இதுவரையில் 68, 863 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறி மக்கள் பாதுகாப்பாக  அரச கட்டுப்பாட்டிற்கு வருவதற்கான வழிகளை படையினர் அடையாளப்படுத்தி காட்டியுள்ளதாகவும் இதற்கென ஒலி பெருக்கிகள் மூலம் அறிவித்தல்களை தொடர்ந்து ஒலிக்க விட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கைக்கும் பெல்ஜியத்துக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

chamal-rajapaksha.jpgகப்பல் சிப்பந்திகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்வது தொடர்பாக இலங்கைக்கும் பெல்ஜியத்துக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான பிரேரணையை துறைமுகங்கள் மற்றும் விமானசேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ சமர்ப்பித்திருந்தார். இதன்மூலம் பெல்ஜியத்தில் கப்பல் பணியாளர்களாக வேலை செய்வதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.