அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

போர் இடைநிறுத்த காலப்பகுதியில் பொதுமக்கள் மீதான பிடியை புலிகள் மேலும் இறுக்கமாக்கியுள்ளனர் – ஐ.நா. சபையில் ஜோன் ஹோம்ஸ் விளக்கம்

sirjohnholmes.jpgபுது வருடத்தை முன்னிட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட போர் இடைநிறுத்த காலப்பகுதியில் பொதுமக்கள் வெளியேறுவது முன்னரை விட மிகவும் குறைவடைந்துள்ளது. புலிகள் பொதுமக்கள் மீதான தடையை மேலும் இறுக்கமாக்கியுள்ளதையே இது காட்டுகின்றது. இது மிகவும் கவலைக்குரியதாகும் என மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ்; இலங்கை நிலவரங்கள் குறித்து ஐ.நா சபையில் விளக்கிக்கூறியுள்ளார்.

பொதுமக்கள் இந்தவிதத்தில் பிணை வைக்கப்படவோ அல்லது மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படவோ கூடாது. எனவே புலிகள் தமது இந்த மனப்பாங்கை மாற்றி பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டும் என மிகவும் வன்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் வெளியேற விருப்பமாகவுள்ளனர் என்பது எந்தஅடிப்படையில் கூறப்படுகின்றது? என ஊடகங்கள் கேட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளித்த திரு ஹோம்ஸ், ஐ நா முகவர் நிறுவனங்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்,  எமது பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் புலிகளது பிடியிலிருந்து தப்பிவருகின்றபோது அவர்கள் தங்களது விருப்பத்தி;ற்கு மாறாகத் தடுத்துவைக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு தப்பித்துவர முயற்சிப்போர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் மிக கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் பலவந்தமாக படையில் சேர்க்கப்பட்டு போரிடுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அல்லது கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசியல் காரணங்களுக்கெல்லாமம் அப்பால் மிகப் பெரும்பாலனவர்கள் தமது பாதுகாப்புக்கருதி வெளியேறி வரவே விரும்புகின்றனர் எனவும் தெரிவித்தார்.

ஐ. நா  யுத்தநிறுத்தமொன்றை கோருகின்றதா? என கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளித்த அவர் யுத்தநிறுத்தத்தைப் பொறுத்தவரை பணயமாக வைக்கப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்களின் நிலைமைகளுக்கு முறையானதும் அமைதியானதுமான ஒரு முடிவைக் கண்டதன்பின்னர் ஒரு மனிதாபிமான யுத்தநிறுத்தத்தைக் கோரி அதனையே ஒரு நிரந்தர நடைமுறையாக மாற்ற முடியும் என்பதே எமது எதிர்பார்ப்பு

அத்தகையதொரு போர்நிறுத்தம் தற்போதைய சூழ்நிலையில் இல்லை. தற்போதைய சூழ்நிலையில   நாம் யதார்த்தமானதொன்றையே செய்ய முயறசிக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

பிரபாகரன் பயன்படுத்திய வீட்டில் ஜனாதிபதி மஹிந்த

mahinda000.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கிளிநொச்சிக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். 30 வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் தலைவர் ஒருவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும். இன்று காலை 6.00 மணிக்கு முதலில் கிளிநொச்சி வைத்தியசாலைக்குச் சென்ற ஜனாதிபதி அங்கு சிகிச்சை பெற்று வரும் படை வீரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

படையினரின் சேமநலன்கள் பற்றிக் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி அவர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். படை வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து புத்தாண்டு விருந்து நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

பின்னர் கிளிநொச்சியிலுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, கிளிநொச்சியின் தற்போதைய நிலைமைகள் மற்றும் படை வீரர்களின் முன்னேற்ற விபரங்கள் என்பன தொடர்பாகவும் அறிந்துகொண்டார். எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளிடமிருந்து படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகனைகள் மற்றும் யுத்த தாங்கிகள் உட்பட ஏனைய ஆயுதங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

கிளிநொச்சியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய வீடு,  அலுவலகம் மற்றும் புலிகளின் சமாதான செயலகம் ஆகியவற்றையும் ஜனாதிபதி நேரில் சென்று பார்வையிட்டார். வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு புலிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கட்டிடங்கள் மற்றும் மாநாட்டு மண்டபங்கள் என்பவற்றுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்தார்.

பின்னர் படை வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி,  பாதுகாப்புப் படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் திடசங்கற்பம் மிக்க சேவைக்காக அவர்களுக்கு தேசத்தின் கௌரவம் உரித்தாகட்டும் எனப் பாராட்டுத் தெரிவித்தார். பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் புலிகளிடம் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி இங்கு கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதியின் இவ்விஜயத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தாக்குதலுக்குள்ளான இலங்கைத் தூதரகத்தின் சேதங்களுக்கு நட்டஈடு வழங்கத் தயார்: நோர்வே அரசாங்கம்

norwy-slhc.jpgஅண் மையில் நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்களுக்கு நட்ட ஈடு வழங்கத் தயார் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து புலிகளுக்கு மனவுறுத்தல்கள் கிடையாது -ஹிந்து பத்திரிகை கருத்து

the_hindu.jpgதாம் அழிவை நோக்கிச் செல்வதை அறிந்தும் மோதல் தவிர்ப்பு வலயத்தினுள் கனரக ஆயுதங்களுடன் நடமாடி சிவிலியன்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவது தொடர்பில் எல்.ரீ.ரீ.ஈ. யினருக்கு மனவுறுத்தல்கள் எதுவும் கிடையாது என இந்தியாவின் ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில் புலிகளுக்கெதிரான படை நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதென இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தைப் பாராட்டும் வகையில் தீட்டப்பட்டிருந்த ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வெளியான இப்பத்திரிகையில் இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் மனிதநேயத்துக்கான மோதல் தவிர்ப்பு வலயம் எனும் கருதுகோலையாவது அங்கீகரிக்க மறுப்பது,  அவர்கள் தங்களை எந்த மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகக் கூறிக்கொள்கின்றார்களோ அம்மக்களின் உயிர்கள் மற்றும் நலன்கள் என்பன தமது இந்தப் போலி விடுதலைப் போராட்டத்தில் கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது என்பதையே தெளிவுபடுத்துகின்றது.

புலிகளின் பிடியிலிருந்து கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி வருகை தந்த தமிழ் மக்களின் தொகை 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இப்புள்ளி விபரம் தமிழ் மக்கள் அவர்களின் சுய விருப்பத்தின்பேரில் தம்மோடு இருப்பதாக புலிகள் கூறிவரும் பொய்ப் பிரச்சாரத்தின் யதார்த்தத்தைப் புலப்படுத்துகிறது.

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதும் மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்து வெளியேற விரும்பும் சிவிலியன்களை எந்தவித தடைகளுமின்றி தப்பிவர அனுமதிக்குமாறு புலிகளை நிர்ப்பந்திப்பதுமே தற்போதுள்ள மனிதாபிமான நெருக்கடிக்குரிய ஒரே தீர்வாகும் என்றும் அப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குருநகர் மீன் சந்தை 20 வருடங்களின் பின்னர் மீண்டும் இயங்க ஆரம்பம்!

f-m.jpgயாழ்ப்பாணம் குருநகர் மீன் சந்தை 20 வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 20 வருட காலமாக இந்த சந்தை மூடப்பட்டிருந்ததுடன் இராணுவத்தினர் இதனை தங்களின் முகாமாகப் பயன்படுத்தி வந்தனர்.

பொதுமக்கள் பாவனைக்காக இந்தச் சந்தை நேற்று உத்தியோக பூர்வமாக மீண்டும் திறந்து வைக்கப்பட்டதாக யாழ் இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வில் மீன்பிடி அமைச்சு மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், மீன்பிடி சங்கப் பிரதிநிதிகள்ää அரசியல் பிரமுகர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை யாழ் கடற்பிரதேசத்தில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ராஜபட்சவின் உண்மையான நண்பராக கருணாநிதி செயல்படுகிறார்:பழ.நெடுமாறன்

neduma2.jpgஇலங்கை அதிபர் ராஜபட்சவின் உண்மையான நண்பராக முதல்வர் கருணாநிதி செயல்படுவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள சிலரின் வழிகாட்டுதலின்பேரில் தவறான அணுகுமுறைகளை விடுதலைப் புலிகள் கடைப்பிடிப்பதால் தான் இலங்கைப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது என்று கருணாநிதி அண்மையில் கூறியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பழ.நெடுமாறன் வெளியிட்டிருக்கும் அறிக்கை : “போர் நிறுத்தம் என்ற பெயரில் இரு நாள்களாக அதிகமான படைகளை ராஜபட்ச கொண்டு வந்து குவித்து, பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் தமிழ் மக்கள் மீது ஏவுகணைகளையும், எறி குண்டுகளையும் வீசி கொன்று குவித்துவருகிறார்.

ஆனால் கருணாநிதியும், ப.சிதம்பரமும் தங்களது முயற்சியால்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த செய்த முயற்சி ஒரு நாடகமே என்பது நிரூபணமாகிவிட்டது. ஈழத் தமிழர்களை ராஜபட்ச துரத்தித் துரத்தி அடிக்கிறார். கருணாநிதியோ தமிழக தமிழர்களை விரட்டிவிரட்டி அடிக்கிறார். ராஜபட்சவின் உண்மையான நண்பராக கருணாநிதி திகழ்வதைக் கண்டிக்கிறேன்” என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் நேற்றிரவு சந்திப்பு

tna_.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் நேற்று புதன்கிழமை இரவு இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் மற்றும் அதிகாரிகளைச் சந்திப்பதற்காக புதுடில்லிக்கு நேற்று சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களே எம்.கே.நாராயணனை நேற்றிரவு சந்தித்துப் பேசினர்.

கூட்டமைப்பு எம்.பி.ஆர்.சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, இலங்கைப் படையினர் இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த இந்தியா அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. எனினும் போர்நிறுத்தம் குறித்து இந்திய தரப்பில் உறுதியான பதிலெதுவும் வழங்கப்படவில்லை யெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இன்று வியாழக்கிழமை சிவ்சங்கர் மேனன் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்திய அரசு தரப்பை சந்திக்கக் கூடாதென கூட்டமைப்பு எம்.பி.க்களில் பெரும்பான்மையோர் வலியுறுத்தி வந்த நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு160 மில்லியன் US $ கடனுதவி

asian-development-bank.jpgஇலங்கைக்கு 160 மில்லியன் டொலர்களை கடன் உதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. யுத்த முன்னெடுப்புகளால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மின்சாரத்தினை வழங்குவதற்கும்,  மின்சார வசதிகளை மேலும் மேம்படுத்தவும் இந்த நிதியை வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள் இன்று மேனனுடன் பேச்சு

tna_.jpgஇந்திய அரசுடன் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பேசுவதற்காக நான்கு எம்.பிக்கள் அடங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவினர் நேற்று டில்லிக்கு சென்றனர்.

இலங்கையில் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்க வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக் களிடையே இரு வேறு கருத்துக்கள் எழுந்தன. பெரும்பாலான எம்.பிக்கள் இந்தியாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கோரினர்.

இருப்பினும் சில எம்.பிக்கள் பேசிப் பார்க்கலாம் என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சேனாதிராஜா, பிரேமசந்திரன், அடைகலநாதன், இரா. சம்பந்தன் ஆகிய நான்கு எம்.பிக்கள் நேற்று டில்லிக்கு சென்றனர். அவர்கள் நான்கு பேரும் வெளியுறவுத் துறைச் செய லாளர் சிவசங்கர மேனனை இன்று சந்தித்துப் பேசுவார்கள்

காவற்துறையின் தலையீட்டை அடுத்து கிருஸ்ணா அம்பலவாணரின் உண்ணாவிரதம் இடைநிறுத்தம்?

swiss_01.jpgவன்னியில் உடனடிப் போர் நிறுத்தம் கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போரட்டத்தை ஆரம்பித்த கிருஸ்ணா அம்பலவாணரின் போராட்டம் காவல்துறையினரின் தலையீட்டை அடுத்து இடைநிறுத்தப்பட்டது.

அவரைப் பரிசோதித்த மருத்துவர் உடனடி மருத்துவ உதவி தேவையென அறிவித்த போதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நிலையில் உண்ணாநிலைப் போராட்ட இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் அவரைப் பலாத்காரமாக அகற்றினர்.

13.04.2009 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சுவிஸ் தமிழர் பேரவை இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் ஆரம்பித்த போராட்டம் தொடர்ந்து 15.04.2009 இரவு 8 மணிவரை தொடர்ந்தது.