அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

முகாம்களில் உள்ள உறவினர்களை மீட்க இரண்டாயிரம் விண்ணப்பங்கள்

101009displacedidps.gifவவுனியா தடுப்பு முகாம்களில் உள்ள தமது உறவினர்களை மீட்டுச் செல்வதற்காக சுமார் இரண்டாயிரம் பேர் தமது விண்ணப்பங்களை பிரதேச செயலங்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் யாழ்ப்பாண செயலகத்திற்கு ஆயிரம் விண்ணப்பங்களும் வவுனியா செயலகத்திற்கு ஆயிரம் விண்ணப்பங்களும் கிடைத்துள்ளதாக குறித்த செயலக தரப்புகள் தெரிவித்துள்ளன.

வவுனியா நகரசபை உறுப்பினரின் பதவி ஏற்பு விழா

வவுனியா நகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழா நேற்று மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.

இங்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஐவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

பிரதான வைபவம் நகர சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா சம்பந்தன் முன்னிலையில் இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

நகர சபைத் தலைவராக முன்மொழியப்பட்ட எஸ். என். ஜி. நாதன் உட்பட உப தலைவர் மு. முகுந்தரதன், ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இ. சிவகுமாரன், செ. சுரேந்திரன், ஐ. கனகசபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அப்துல் லத்தீப் முனைவர் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற குழுத் தலைவர் சம்பந்தன் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

சட்டவிரோத நிதி கம்பனிகள் மீது நடவடிக்கை : இலங்கை மத்திய வங்கி

central-bank-of-sri-lanka.jpgநாட்டில் சட்டவிரோதமாக இயங்கிவரும் நிதி கம்பனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு 21 சட்டவிரோதமான நிதி கம்பனிகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை குறித்த மதிப்பீடுகள் நீதி மன்றத்தில் சமரிப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

மூவருக்கும் ஆயுட் தண்டனை

அமெரிக்க கண்டத்திற்கு செல்லும் விமானங்களை திரவ வெடிகுண்டுகள் மூலம் வெடிக்கச்செய்ய முயன்ற குற்றச்சாட்டின்பேரில் பிரிட்டனைச் சேர்ந்த மூன்று முஸ்லீம்களுக்கு ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.  இவர்களுக்கு தண்டனை விதித்த நீதிமன்ற நீதிபதி, இவர்களில் ஒருவர் ஆயுட்காலம் முழுமையும் சிறைக்குள்ளேயே கழிக்கவேண்டி நேரலாம் என்று கூறினார்.

இவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சமாக 30 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சமமான ஒரு அட்டூழியத்தை நடத்த இவர்கள் சதி செய்ததாக நீதிபதி தெரிவித்தார்.

இவர்களின் சதி கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமானப்பயணிகள் கொண்டு செல்லத்தக்க திரவங்கள் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தச் சதிச்செயல் அல்கயீதாவால் வழி நடத்தப்பட்டதாக புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

வவுனியா நிவாரணக் கிராமம்: யாழ்ப்பாணத்துக்கு 500 பேர் நேற்று அனுப்பி வைப்பு

101009displacedidps.gifவவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து மேலும் 500 பேர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வவுனியா மாவட்டச் செயலகம் தெரிவித்தது.

வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள கதிர்காமர், இராமநாதன், அருணாசலம் மற்றும் வலயம் – 5 லிருந்து மீள் குடியேற்றத்துக்காக தெரிவு செய்யப்பட்டோரே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதாக செய லகம் தெரிவித்தது.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த சுமார் பத்தாயிரம் பேர் கடந்த வெள்ளிக்கிழமை தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 6838 பேர் யாழ்ப்பாணத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே நேற்றும் மேலும் 500 பேர் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக் களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வெள்ளியன்று யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம் பாறை மாவட்ட மக்கள் 9994 பேர் தமது சொந்த இட ங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கண்டி மாநகர சபைக்கு மக்கள் நேற்று வரை ரூ.30 கோடி நிலுவை

கண்டி மாநகர சபை நிருவாக எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பலர் கண்டி மாநகர சபைக்கு நிலுவைப் பணமாக நேற்று (14) வரைக்கும் 30 கோடி ரூபா செலுத்த வேண்டியுள்ளனர். இதனை செலுத்த முன்வராத வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக கண்டி மாநகர சபையின் பதில் மேயர் துமிந்த விக்ரமசிங்க தெரிவித்தார்.

கண்டி மாநகர சபையில் நேற்று (14) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்தார். நீர் மற்றும் வர்த்தக நிலையங்கள் தொடர்பாக கட்டணங்களுடனான வரி தொகைகளே இவ்வாறு மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளாகும்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்க முன் இந்த 30 கோடி ரூபாவில் 50% சதவீதத்தை மக்களிடமிருந்து அறவிடுவதற்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப் படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

கண்டி மரபுரிமை பிரதேசத்தை அலங்காரப்படுத்து வதற்கும் இந்நிருவாக பிரிவுக்குள் வசிக்கும் பொதுமக்களினது அடிப்படைத் தேவைகளுடன் மேலும் பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாகவே அரசுக்கு பணம் தேவைபடுகின்றதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வட பகுதி மாணவர்களுக்கு 10 இலட்சம் பாடப் புத்தகங்கள் 10 கொள்கலன்களில் அனுப்ப கல்வி அமைச்சு ஏற்பாடு

150909sri-lankas-students.jpgவட பகுதி மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 10 இலட்சம் பாடப் புத்தகங்கள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இவற்றை 10 கொள்கலன்கள் மூலம் இம்மாத இறுதிக்குள் வட பகுதிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டப்ளியூ. எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

2010 ஆம் கல்வி ஆண்டுக்கான இந்த பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இம்மாதம் 03 ஆம் திகதி முதல் இதுவரை 4.05 மில்லியன் ரூபா பெறுமதியான பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சப்ரகமுவ, வடமேல், வடமத்தி மற்றும் தென் மாகாணம் ஆகியவற்றுக்கான பாடப் புத்தகங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கல்வி வெளியீட்டுப் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு – அவுஸ்திரேலியா 5 மில்லியன் டொலர் உதவி

வட பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அவுஸ்திரேலியா ஐந்து மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடாகவும், புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் ஊடாகவும் இந்நிதி மூலம் பருவ பெயர்ச்சி மழை காலத்திற்கு முன்னரான அவசர மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதேவேளை இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நீர் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவென யுனிசெப் ஊடாக 5.25 மில்லியன் டொலர்களையும் அவுஸ்திரேலியா ஏற்கனவே வழங்கியுள்ளது

வவுனியா நகரசபை தலைவராக நாதன் பதவியேற்பு

வவுனியா நகர சபையின் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட எஸ். என். ஜி. நாதன் இன்று பதவியேற்கவுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வவுனியா நகரசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து வவுனியா நகரசபையை கைப்பற்றியுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய சுட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர். அமைச்சர் ரிசாட் பதிவுதீன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், வவுனியா முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்களும், இவ்வைபவத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் குறித்த தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற வேட்பாளரான முகுந்தன் பிரதி தலைவராக இன்று பதவியேற்கின்றார். 

வட கொரியாவுடன் பேச்சு நடத்த தயார் : யு.எஸ்.

தங்களுடன் நேரடியான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற வடகொரியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

உலக அளவில் அணு ஆயுதங்களை ஒழிக்க நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தையில் வட கொரியாவும் பங்கேற்க வேண்டுமானால், அமெரிக்கா தங்களுடன் நேரடியாக பேச்சு நடத்த வேண்டும் என்று அந்நாடு கூறியிருந்தது. இந்நிலையில், வட கொரியாவின் இந்த கோரிக்கையை ஏற்க அமெரிக்கா தயாராக இருப்பதாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பி.ஜே. கிரவ்லி தெரிவித்தார்.

முன்னதாக அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக ஆறு நாடுகளடங்கிய குழுதான் வடகொரியாவுடன் பேச்சு நடத்தும் என்று அமெரிக்கா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.