அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

புகையிரதத்தில் வரும் பயணிகளின் நன்மை கருதி இரவு நேர பஸ் சேவை

மாத்தறை ரயில் நிலையத்துக்கு இரவு 8.25க்கு சென்றடையும் புகையிரதத்தில் வரும் பயணிகளின் நன்மை கருதி இரவு நேர பஸ் சேவையை நடத்த போக்குவரத்துச் சபை முன்வந்துள்ளது.

ரயில்வே திணைக்களமும், இலங்கை போக்குவரத்துச் சபையும் இணைந்து கூட்டு சேவையாக இதனை நடத்துகின்றன.

சூறாவளி தாக்கக்கூடிய பிலிப்பைன்ஸில் பேரிடர் அவசர நிலை

01-indonesia.jpgபிலிபைன்ஸ் அதிபர் குளோரியா அரோயோ நாடு முழுவதும் பேரிடர் அவசர நிலையை அறிவித்துள்ளார். புதிய சூறாவளியான பார்மா தாக்கக்கூடிய பகுதிகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை வெளியேறுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

வரும் சனிக்கிழமை இந்த சூறாவளி கரையை கடக்கும் என்றும் இதன் வேகம் மணிக்கு 230 கிலோமீட்டர் வரை வீசும் என்றும் நாட்டின் வானிலை மையம் கணித்துள்ளது.  இந்த சூறாவளி காரணமாக 18 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.நா. கூறுகிறது. கடந்த சனிக்கிழமை வேறோரு சூறாவளி தாக்கியதால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தென் கிழக்கு ஆசியாவில் நானூறு பேர் உயிரிழந்தனர்.

மலையகப் பகுதிகளில் மண்சரிவு அபாயம்: வீடுகளுக்கு சேதம்; போக்குவரத்து துண்டிப்பு

011009rain-in-upcountry.jpgநாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலையின் காரணமாக மலையப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. இதனால் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையுடன் கடும் காற்றும் வீசுவதால், மின்சாரக் கம்பங்களும், தொலைத் தொடர்புக் கம்பங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன. ஹட்டன் வனராஜா பகுதியில் பாரிய கல்லொன்றும், மரமொன்றும் சரிந்துள்ளது. இதன்போது அந்த வழியால் சென்ற பால் வேனொன்று சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஹட்டன், வட்டவளை உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் வீதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கினிகத்தேனை, ஹட்டன் வீதியில் மழை காலங்களில் மண்சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கண்டி பகுதியில் சிறு மினிசூறாவளி எனக் கருதப்படும் அளவுக்கு மரங்கள் பன்வில, கோம்பர, ஹேவாஹெட்டை, கண்டி, ஹாரிஸ்பத்துவ போன்ற பல இடங்களில் முறிந்து விழுந்துள்ளன. பிரமாண்டமான மாறாமரம் கண்டி பேராதனை வீதியில் கிங்ஸ்வூட் கல்லூரிக்கு முன்பாக உடைந்து விழுந்ததால் தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. பாடசாலை முடிவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றதால் பாரிய விபரீதம் எதுவும் இடம்பெறவில்லை.

இதே போன்று கண்டி கட்டுகஸ்தோட்டை வீதியில் வட்டாரந்தன்னையில் பாரிய மாமரம் ஒன்றும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கள் சில மணி நேரம் தடைப்பட்டன. உடனடியாக இந்த மாம ரம் வீதி அதிகார பிரிவினால் அகற்றப்பட்டது. இவ்வாறு பெய்யும் அடைமழையினால் மலையகத்தில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்படலாம் என தேசிய கட்டட நிர்மாண ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த பூகற்பவியல் அதிகாரி எம். எம். சி. டபிள்யூ. மொரேமட தெரிவித்தார். மண்சரிவுகள் குறிப்பாக சப்ரகமுவ, மத்திய ஆகிய பிரதேசங்களில் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு எனவும் அவர் தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்டத்தில் கடும் மழை, சூழல் காற்றினால் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இறக்குவானை பகுதிகளில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.

பெல்மதுளை வன்னியாராச்சி கிராமத்தில் நேற்று இடம்பெற்ற கடும் மழை, சூழல் காற்றினால் வீட்டுக் கூரை அள்ளுண்டு சென்றுள்ளது. இதேவேளை இறக்குவானை டெல்வீன் ஏ பிரிவில் மரமொன்று சரிந்து விழுந்ததால் தோட்டத் தொழிலாளியின் வீடு பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது. பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. இறக்குவானை பல பகுதிகளில் நேற்று முதல் மின்வெட்டு இடம் பெற்றுள்ளது.

தமிழ்ச் சங்கத்தில் வாசிப்பு மாத நிகழ்வுகள்

வாசிப்பு மாதத்தையொட்டி ஒக் டோபர் மாதம் முழுவதும் வாசி ப்புக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் பல நிகழ்வுகள் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இம்மாதம் முழுவதும் புதன், வெள்ளிக்கிழமைகளில் இடம் பெறும் அறிவோர் ஒன்றுகூடல் மற்றும் படித்ததும் பிடித்ததும் நிகழ் வுகளில் வாசிப்பை ஊக்குவிப்ப தற்கான சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

கொழும்பு தமிழ்ச் சங்க நூல் நிலையத்தை அங்கத்தவரல்லாதவர்களும் பாவிப்பதற்கு ஒக்டோபர் மாதம் முழுவதும் அனுமதி வழங்கு வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இம்மாதத்தில் நூலக அங்கத்தவர்களாகச் சேருபவர்களுக்கு அங்கத்துவப் பணத்தில் 50% கழிவு வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாசிப்பு மாதத்தில் வாசிப்பை ஊக்குவிப்பதற்கென புதிய நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டு நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தெனவும் தமிழ்ச் சங்கச் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி தெரிவித்தார்.

புலமை பரிசில் பரீட்சையில் ஹம்பாந்தோட்டை முதலிடத்தில்

021009-dep-of-edu.jpgஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று நண்பகல் 12:00 மணியளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தூர இடங்களில் உள்ள பாடசாலைகள் கல்வியமைச்சின் http://www.doenets.lk என்ற இணைய முகவரியில் பெறுபேறுகளைப் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகளின்படி ஹம்பந்தோட்டை ரு{ஹணு விஜயபா மகா வித்தியாலய மாணவர் ஜே.ஏ.பிரமோத் டில்ஷான் 196 புள்ளிகளுடன் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் 60 ஆவது தேசிய தினம்

02china_festivalss.jpgசீனா அதன்  60வது தேசிய தினத்தை நேற்று கோலாகலமாகக் கொண்டாடியது. பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்புடன் பல விசேட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

சீனாவில், 1949ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி, கம்யூனிச ஆட்சி மலர்ந்தது. சீனாவின் மாபெரும் தலைவர் மா சேதுங்கின் புரட்சியை அடுத்து,  இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடந்தது. இதையடுத்து,  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி, சீனாவின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது.

சீனாவில் கம்யூனிச ஆட்சி மலர்ந்ததன் 60வது ஆண்டு விழா,  நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் பீஜிங் விழாக்கோலம் பூண்டிருந்தது. வரலாற்று சிறப்பு மிக்க தினான்மென் சதுக்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

சீனாவின் பலத்தை சர்வதேச நாடுகளுக்கு உணர்த்தும் வகையில் பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு நடந்தது. ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர். இந்த அணி வகுப்பில், சீனாவில் தயாரான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்,  அணு குண்டுகளை ஏந்திச் சென்று,  மிக நீண்ட தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் வகையிலான ஏவுகணைகள்,  நவீன டாங்கிகள் ஆகியவை பங்கேற்றன. போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில்,  கண்கவர் வாண வேடிக்கையும் நிகழ்த்தி காட்டப்பட்டது. பிரம்மாண்ட அணிவகுப்பை சீன அதிபர் ஜிண்டவோ பார்வையிட்டார்.

குருநாகலில் குண்டு வெடிப்பு: சிறுவர்கள் உட்பட 13 பேர் காயம்

021009kurunagala.jpgகுருநாகல் உடவல்பொல பிரதேசத்தில் இன்று காலை வான் ஒன்றில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று  நிகழ்ந்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் சிறுவர்கள் உட்பட்ட 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குருநாகல் வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தின் போது குறித்த வாகனம் வீடொன்றின் முன்பாக தரித்திருந்த வேளையிலேயே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தனிப்பட்ட  குரோதங்களே காரணம் என தெரிவிக்கப்படுகிறது

மலையகத்தில் அடைமழை – மண் சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது தேசிய கட்டட ஆய்வு நிறுவனம்

011009rain-in-upcountry.jpgமலைய கத்தில் தொடர்ந்து பெய்ந்து வருகின்ற அடைமழையினால் மத்திய மாகாணத்தில் மண் சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நுவரெலியா, கண்டி உட்பட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக காற்றுடன்கூடிய அடைமழை பெய்து வருகின்றது. இதனால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. அடிக்கடி மின்சாரத் தடையும் ஏற்படுகின்றது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

கினிகத்தேனை – ஹட்டன் பிரதான வீதியில் ஆங்காங்கே சிறியளவான மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்பிரதேச பொது மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டுமெனவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

டோங்காவில் மீண்டும் நிலநடுக்கம்- சுனாமி பலி 189 ஆக உயர்வு

300909samova_tsunamy.pngசமாவோ தீவுக்கு அருகே இருக்கும் டோங்கா தீவு பகுதியில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. நேற்று முன்தினம் ஏற்பட்ட சுனாமிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளது. நியூசிலாந்துக்கு கிழக்கே பசிபிக் பெருங்கடல் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் சுனாமி ஏற்பட்டது. இதில் சமாவோ தீவு கடும் பாதிப்புக்கு ஆளானது.

சமாவோ தீவில் இதுவரை 149 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்கன் சமாவோவில் 31, டோங்காவில் 9 பேர் இறந்துள்ளனர். மொத்தமாக சுனாமிக்கு 189 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 100க்கும் மேற்பட்ட மக்களை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமாவோ தீவு மக்களில் பெரும்பான்மையினர் அங்கிருக்கும் மலை பகுதியிலே வசித்து வருகின்றனர். மீண்டும் சுனாமி வந்துவிடுமோ என்ற அச்சத்தில் கடற்கரை பகுதிகளிலிருந்த இருக்கும் தங்களது வீடுகளுக்கு திரும்ப மறுத்துவிட்டனர். இந்நிலையில் இன்று காலை தெற்கு டோங்கா பகுதியில் மிதமான நிலநடுக்கம்  ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது.

வெளிநாடு சென்றுள்ள எமது நிபுணர்களை தாயகம் திரும்புமாறு ஜனாதிபதி அழைப்பு

290909mahinda.jpgஎத்தகைய தடைகள் வந்தாலும் அரசாங்கத்தின் பயணம் தொடரும். நாட்டைக் கட்டியெழுப்ப வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள கல்விமான்கள், நிபுணர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

வெளிநாட்டுச் செலாவணியில் மட்டும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, பொறியியலாளர்கள் துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்பு நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் மிக அவசியமானதெனவும் தெரிவித்தார்.

இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் 103வது வருடாந்த நிகழ்வு நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் பி. தயாரத்ன, மனோ விஜேரத்ன மற்றும் பொறியியல்துறை நிபுணர்கள், கல்விமான்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

நாட்டின் தீர்க்கமானதொரு காலகட்டத்தில் இலங்கை பொறியியலாளர் நிறுவனம் தமது 103வது நிறைவைக் கொண்டாடுகிறது. அதற்கு எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

இந்நாட்டில் பொறியியலாளர்கள், கல்விமான்கள் மட்டுமன்றி சகல துறையினரையும் அச்சுறுத்திய யுகத்துக்கு அரசாங்கம் முடிவு கட்டியுள்ளது. துப்பாக்கியால் மீட்கப்பட்ட நாட்டை கலப்பையினால் பாதுகாத்துக் கட்டியெழுப்பும் யுகம் தற்போது உருவாகியுள்ளது.

நாம் இந்த நாட்டில் பில்லியன் கணக்கில் நிதியைச் செலவிட்டு வீடுகள், பாலங்கள் என நிர்மாணித்தாலும் பயங் கரவாதிகள் ஒருகுண்டை வெடிக்க வைத்து அவற்றை அழித்தனர். வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை அங்கு பாரிய நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் அஞ்சிய காலகட்டமொன்று இருந்தது. அந்த யுகத்துக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. படையினர் இந்த நாட்டை மீட்டு அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதற்காக எம்மிடம் கையளித்துள்ளனர்.

அரசாங்கம் தற்போது நாட்டின் சகல பகுதிகளிலும் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுக ளிலிருந்து அதற்குத் தேவையான இயந்திர உபகரணங்களும் இந்நாட்களில் கொள்வனவு செய்யப்படுகின்றன. மஹாவலி போன்ற திட்டங்கள் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு, தெற்கு என எப்பக்கம் சென்றாலும் அபி விருத்தியும் பல்வேறு நிர்மாண நட வடிக்கைகளும் இடம் பெறுவதை நாம் நேரில் காணலாம். வரலாற்றில் முன் னொருபோதுமில்லாத வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

எமது தாய்நாடு என்ற உரிமையும் உணர்வும் நாட்டு மக்களிடையே காணப்படுகிறது.

வருடந்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொறியியலாளர்கள் எமது பல்கலைக் கழகங்களினால் உருவாக்கப்படுகின்றனர். இவர்கள் தொழில், பிள்ளைகளின் கல்வி என பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு செல்கின்றனர்.  சிலர் இந்த நாட்டில் இருப்பது வீண் என்று நினைக்கின்றார்கள்.

யுத்தம் எமது பொறியியலாளர்களுக்கும் கல்விமான்களுக்கும் ஒரு சாபமாக அமைந்ததை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை சகல இன, மத மக்கள் மத்தியிலும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் நமது பொறியியலாளர்கள் நிபுணர்கள் கல்விமான்கள் நாட்டில் இருக்கவேண்டும். அந்நியசெலாவணியால் மட்டும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. கல்விமான்கள் புத்திஜீவிகளின் சேவை மிக அவசியமாகிறது.

பொறியியலாளர் கூட்டுத்தாபனம் தனியாருக்குக் கையளிக்கப்படவிருந்த காலமொன்று இருந்தது.  அதற்காக சிலர் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். திறமையான பொறியியலாளர்கள் ஒரு நாளில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

அந்த நிலை இன்று மாற்றம் பெற்றுள்ளது. அரசாங்கம் தேசிய நிர்மாணக் கொள்கை யொன்றை உருவாக்கியுள்ளது.  இத்துறையை மேலும் கட்டியெழுப்ப கல்விமான்கள் மற்றும் நிபுணர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளவுள்ளோம்.

நிர்மாணத்துறை ஒப்பந்தங்களை வெளிநாட்டவருக்கு வழங்குவதை நாம் வெகுவாகக் குறைத்துள்ளதுடன் நம் நாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நாட்டின் அபிவிருத்தி மற்றும் மக்கள் செயற்பாடுகளுக்காக நாம் கடன்களைப் பெறுகிறோம்.

எனினும் எவ்வித நிபந்தனைக்கும் நாம் அடிபணிந்து அவற்றைப் பெறவில்லை. எமக்குக் கடன் கொடுக்க வேண்டாமெனவும், ஜீஎஸ்பி சலுகையை எமக்கு வழங்கக் கூடாதெனவும் சில சக்திகள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன.

பொறியியல் துறையில் நாட்டை நேசி க்கும் முன்னுதாரணமான பொறியியலாளர்கள் பற்றி நாம் குறிப்பிடவேண்டும். இரணைமடுக் குளத்திலிருந்து வெளியேறும் நீரை வாய்க்கால் மூலம் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்ல எஸ். ஆறுமுகம் ஆலோசனை முன்வைத்தார். ஆறுகள் இல்லாத யாழ்ப்பாணத்துக்கு ஆற்றை வழங்க அவர் முயற்சித்தார்.

இது மனிதாபிமானமாக சிந்திக்கும் செயல். அவ்வாறு இடம்பெற்றால் யாழ்ப்பாணம் மறு மலர்ச்சிபெறும். பொறியியலாளர்களால் இனங்களுக்கிடையிலான பாலத்தை மட்டுமன்றி மனிதாபிமான பாலத்தை உருவாக்கவும் முடியும். இது நாட்டுக்கு என்ன செய்யலாம் என சிந்திக்கின்ற யுகம்.

அவ்வாறு சகலரும் சிந்தித்தால் நாடு பெறுமதியானவற்றை பெற்றுத் தருவது உறுதி என்பதே எனது நம்பிக்கை. இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.