அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வன்னி தேடுதலில் பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிப்பு – பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம்

வன்னிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

அக்கராயன் குளம் பகுதியில் மேற்கொண்ட தேடுதல்களில் 25 மிதி வெடிகள் மீட்கப்பட்டன.

புதுக்குடியிருப்பு பகுதியில் நடத்திய தேடுதலில் ஆர். பி. ஜி. ரக குண்டொன்றும் 75 ரவைகளும் ரீ-56 ரக துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா பகுதியில் நடத்திய தேடுதலில் 11 கிளைமோர் குண்டுகள், ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தேடுதலை நடத்தியுள்ளன.

இதேவேளை திருகோணமலை மலையூற்று பகுதியில் கைக்குண்டொன்றுடன் ஒருவர் கைதாகியுள்ளார்.

தெற்கு வசிர்ஸ்தானில் சண்டை தொடர்கிறது

181009taliban.jpgதெற்கு வசிர்ஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல் கொய்தாவினர் வலுவாக இருக்கும் பகுதியில் இரண்டாவது நாளாக இராணுவத்தினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகின்றது.

சண்டையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மாறுப்பட்ட கருத்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இருதரப்பும் எதிர்தரப்புக்கு அதிக சேதம் ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றன.

இந்த பிராந்தியத்தின் வட பகுதியில் கவனத்தை செலுத்தி வரும் இராணுவம், வான் தாக்குதல் முறைகளையும் ஆர்டிலரிகளையும் பயன்படுத்தி வருகிறது. ஆனால் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது. சில இடங்களில் வீதிகளில் கூட சண்டை இடம்பெற்று வருகின்றது.

இந்த பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இன்னும் பலரும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

சத்திர சிகிச்சை நிபுணர் மஹ்பூப் திடீர் மரணம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் பி. எம். எம். மஹ்பூப் (52) நேற்றுக்காலை மாரடைப்பால் காலமானார்.

நேற்றுக்காலை 8 மணியளவில் காத்தான்குடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டபோது சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்வேளை அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்மாகாணம்: புதிய அமைச்சர்கள் தெரிவு பூர்த்தி

11upfa.jpgதென் மாகாண சபைக்கான அமைச்சர்களை தெரிவு செய்யும் பணி பெருமளவு நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் கூறினார்.

இவர்கள் விரைவில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை தென் மாகாண சபை முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சரே மீண்டும் நியமிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் கூறின.

வாகன விபத்துக்கள் – 24 மணி நேரத்தில் ஐவர் உயிரிழப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் ஒரு சிறுவனும் மூன்று பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் கூறினர்.

கடவத்தை பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு 5 பேர் காயமடைந்துள்ளனர். கடவத்தை 13 ஆவது மைக்கல் பகுதியில் வைத்து பாதுகாப்புப் படையினரின் டிபெண்டர் ரக, வாகனமொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் போதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளோட்டி இறந்துள்ளார்.

விபத்துக்குள்ளான டிபெண்டரின் மீது பின்னால் பயணித்த லொறியொன்றும் காரொன்றும் மோதியதில் ஐவர் காயமடைந்ததாக பொலிஸார் கூறினர். இதேவேளை ஹெட்டன், நோட்டன், பிரிட்ஜ் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர். குறித்த வாகனத்தின் சாரதி, குடிபோதையில், வாகனம் ஓட்டியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வாகனம் பள்ளத்தில் விழுந்துள்ளதோடு சாரதியின் மனைவியும் மற்றொரு பெண்ணுமே இறந்ததாக பொலிஸார் கூறினர். இதேவேளை கட்டான பகுதியில் வைத்து டிரக்டர் ஒன்றில் மோதி 3 வயதுச் சிறுவர் ஒருவன் நேற்று முன்தினம் இறந்துள்ளார்.

வீதியை கடந்து செல்ல முயன்ற சிறுவன் மீது வேகமாக வந்த டிராக்டர் மோதியதில் சிறுவன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். களுத்துறை மக்கொனை பகுதியில் ஆட்டோ ஒன்றும் வேனொன்றும் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த விபத்து நேற்று முன்தினம் (17) மாலை இடம்பெற்றது.

இதேவேளை களுத்துறை பகுதி கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இருவர் நீராடிக்கொண்டிருந்தபோது ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இறந்தவர் பயாகலை, மொரகொட பகுதியை சேர்ந்தவர் என அடையாளங் காணப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மேலும் ரூ. 500 கோடி: ப.சிதம்பரம்

18-pc-karuna.jpgஇலங் கையில் முகாம்களி்ல் உள்ள தமிழர்களை மீள் குடியமர்த்துவது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஆலோசன நடத்தினார்.

சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சிதம்பரம், அண்மையில் தமிழக எம்.பிக்கள் குழு இலங்கை சென்று, முகாம் தமிழர்களை சந்தித்து நிலவரங்களை அறிந்து வந்துள்ளது. அவர்கள் ஆய்வறிக்கையும் வழங்கியுள்ளனர். இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியுடன் இன்று ஆலோசனை நடத்தினேன். இலங்கை தமிழர் மறுவாழ்வு மற்றும் அவர்களை சொந்த இடங்களுக்கு குடியமர்த்த என்னென்ன அறிவுரை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என்பது குறித்துப் பேசினோம்.

முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசித்தது குறித்து மத்திய அமைச்சரவையிலும் விவாதிக்கப்படும்.

எம்.பிக்கள் குழு இலங்கை சென்று வந்த பிறகு இதுவரை சுமார் 5,000 தமிழர்கள் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.  இது தொடக்கம் தான் என்பதால் இந்தப் பணி மெதுவாக உள்ளது. போக போக அனைவரும் வேகமாக குடியமர்த்தப்படுவார்கள் இதுபற்றி இலங்கைக்கு போதிய அறிவுரை வழங்கப்படும். இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக ஏற்கனவே ரூ.500 கோடி மத்திய அரசு  வழங்கி உள்ளது. மீண்டும், இன்னும் ரூ.500 கோடி வழங்கவும் தயாராக உள்ளது.

இதுகுறித்து திட்ட அறிக்கை இலங்கை அரசிடம் இருந்து இன்னும் பெறப்படவில்லை. வந்த பிறகு தேவைப்பட்டால் நிதி ஒதுக்குவோம் என்றார் சிதம்பரம்.

குடாநாட்டு வங்கி சேவைகளை பலப்படுத்த நடவடிக்கை – மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் நாளை யாழ்; விஜயம்

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். குடாநாட்டில் 30 வருடங்களுக்கும் மேலாக நிலைகுலைந்து போய்க் கிடக்கும் வங்கிச் சேவைகளைப் பலப்படுத்துவதே இவரது விஜயத்தின் நோக்கமாகும்.

நாளை யாழ்ப்பாணம் செல்லும் ஆளுநர் கப்ரால் தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) கிளையொன்றைத் திறந்து வைப்பார். இந்த வங்கியின் கிளை திறக்கப்படுவது வரலாற்று முக்கியத்துவமானதாகக் கருதப்படுகிறது.

அபிவிருத்திகளுக்கு நிதி வழங்குதல், வர்த்தக வங்கிகளை அமைத்தல்,  கட்டுப்பணம் வழங்குதல், வீடமைப்பு நிதி,  நிதி முகாமைத்துவம்,  சொத்துக்களை அபிவிருத்தி செய்தல், காப்புறுதி ஆகிய வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்குடனேயே வங்கிகள் குடாநாட்டில் பலப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

குடாநாடு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் அமைதி ஏற்பட்டுள்ளதால் குடாநாட்டில் வங்கிகளின் தேவை எதிர்காலத்தில் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் அச்செழுபகுதிக்குச் செல்லும் ஆளுநர் அபிவிருத்திக்கான கடன் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைப்பார். இதற்காக மத்திய வங்கி 1.5 பில்லியன் ஷரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதற்காக 1.5 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதற்கு மேலதிகமாக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.

ஆளுநர் கப்ரால் நாளை யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் இரு கிளைகளைத் திறந்து வைக்கவுள்ளார். அங்கு விவசாய உபகரணங்கள் மற்றும் படகுகளை வழங்குவார்.

அதே நேரம்ää குடாநாட்டில் செயற்படும் வங்கிகளின் உயர் அதிகாரிகளையும் ஆளுநர் கப்ரால் சந்தித்துப் பேசவுள்ளார். சுமார் 200 வர்த்தகப் பிரமுகர்களை நாளை யாழ்ப்பாணத்தில் சந்திக்கும் அவர்ää அவர்கள் மத்தியில் உரையாற்றுவதோடுää அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் உதவி ஆளுநர் டபிள்யூ. எம். கருணாரத்னää வங்கிச் செயற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மத்திய வங்கியின் கிளையொன்று நிறுவப்படுமெனக் கூறினார்.

அனுராதபுரம்,  மாத்தளை, மாத்தறை ஆகிய இடங்களில் மாத்திரமே மத்திய வங்கியின் கிளைகள் நிறுவப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் வர்த்தக நடவடிக்கைகள் விருத்தியடைந்து வரும் போது மத்திய வங்கியின் கிளைகள் அமைப்பது அவசியமென தெரிவித்த கருணாரத்னää முதலீட்டுச் சபை அதிகாரிகளுடன் திராட்சை தோட்டங்களைப் பார்வையிடவுள்ளதாகக் கூறினார். 

தலிபானுக்கு எதிராக முழு நேர தாக்குதல்

181009taliban.jpg பாகிஸ்தான் – ஆப்கான் எல்லைப்பகுதியில் சுமார் 30,000 பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் தலிபான், அல் கய்டா தீவிரவாதிகளுக்கு எதிராக முழு நேர தாக்குதலுக்கு தயாராகியுள்ளனர்.

தெற்கு வாஜிரிஸ்தான் பகுதியில் தாலிபான் தீவிரவாத நடவடிக்கைக்கு சுமார் 175 பேர் கடந்த வாரங்களில் பலியானதால், இந்த ஒட்டுமொத்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளுப்பட்டு வருகிறது.

தெற்கு வாஜிரிஸ்தான் பகுதியில்தான் அமெரிக்கப் படைகள் மற்றும் நேட்டோ துருப்புகளுக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்லாது, பிற பகுதிகளிலும் பயங்கரவாதத் தாக்குதல் திட்டமிடப்பட்டுவதால் இந்த பகுதியில் ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு வாஜிரிஸ்தானில் இந்த தாக்குதல்கள் வெற்றிகரமாக அமைந்தாலும், தீவிரவாதிகள் தப்பித்து ஆப்கானிற்கும் பிற பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று அமெரிக்க உளவு அமைப்புகள் கணித்துள்ளன.

அம்னெஸ்டி இன்டெர்னேஷனல் அமைப்பு, இந்தப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் தொடங்கியது முதல் சுமார் 1 லட்சம் முதல் 1,50,000 வரை பொது மக்கள் பலர் தங்கள் இடங்களை காலி செய்து விட்டு புலம் பெயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் மேலும் கடுமையாக தீவிரப்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ஷவின் வெற்றிடத்திற்கு ஹேமால் குணசேகர நியமிக்கப்படவுள்ளார்

181009hemal_gunasekara.jpgஎதிர்வரும் 20ம் திகதி பசில் ராஜபக்ஷ தமது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும், அவரது வெற்றிடத்திற்கு ஹேமால் குணசேகர தெரிவு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த தென் மாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சியில் வெற்றியீட்டிய ஹேமால் குணசேகர அமைச்சரவை சாரா பெருந்தெருக்கள் அமைச்சராக நியமிக்கப்படக் கூடுமெனவும்  எதிர்வரும் 21ம் அல்லது 22ம் திகதிகளில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை வழிநடத்தும் நோக்கில் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் இராஜினாமா செய்யவுள்ளார்.

ஆறு வருடங்களில் சீனி உற்பத்தியில் நாடு தன்னிறைவு – அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க தெரிவிப்பு

181009cbrathnayakesss.jpgஎதிர்வரும் ஆறு வருடங்களில் சீனி உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச்செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க நம்பிக்கை தெரிவித்தார். கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 25 வருடங்கள் பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்.

நாட்டின் கரும்புச் செய்கையின் மேம்பாட்டுக்காக பல ஆக்கபூர்வமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரும்புச் செய்கையில் சிறந்த அறுவடையைப் பெறுவதற்கான நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொக்கும் திட்டம் ஒன்றை கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

தற்போது நாட்டில் 15000 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் கூடுதலான உற்பத்தி மொனராகலை மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றது. கரும்பு உற்பத்தியை மேலும் நான்கு மாவட்டங்களுக்கு வியாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலதிக பயிர்ச்செய்கை தொடர்பான அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க தெரிவித்தார்.

அதன்படி அம்பாறை,  பதுளை, அநுராதபுரம்,  குருணாகல் ஆகிய மாவட்டங்களிலும் கரும்புச் செய்கை விஸ்தரிக்கப்படவுள்ளது. இப்பிரதேசங்களில் 5 தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. கரம்புச்செய்கைக்கு ஏற்ற மண்வளம்கொண்ட வடக்கின் கிளிநொச்சி பகுதியையும் தெரிவு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை கரும்புச் செய்கையின் இடைக்கால உற்பத்திகளான எத்தனோல் எரிபொருள்,  உரம் மற்றும் விலங்கின உணவுப் பொருள் உற்பத்திகளை அதிகரிக்கவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

கரும்பு உற்பத்திக்கான செலவினங்களைக் குறைக்கும் வகையில் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் நவீன உபகரணங்களையும்; வெளிநாட்டு உயிரி நோய் தடுப்பு நடவடிக்கையையும் அறிமுகம் செய்துள்ளது.

இவ்வாறான திட்டத்தின் மூலம் இன்னும் 6 வருடங்களில் சீனி உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்யலாம் என அமைச்சர் தெரிவிக்கின்றார்.