வன்னிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
அக்கராயன் குளம் பகுதியில் மேற்கொண்ட தேடுதல்களில் 25 மிதி வெடிகள் மீட்கப்பட்டன.
புதுக்குடியிருப்பு பகுதியில் நடத்திய தேடுதலில் ஆர். பி. ஜி. ரக குண்டொன்றும் 75 ரவைகளும் ரீ-56 ரக துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா பகுதியில் நடத்திய தேடுதலில் 11 கிளைமோர் குண்டுகள், ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தேடுதலை நடத்தியுள்ளன.
இதேவேளை திருகோணமலை மலையூற்று பகுதியில் கைக்குண்டொன்றுடன் ஒருவர் கைதாகியுள்ளார்.