தெற்கு வசிர்ஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல் கொய்தாவினர் வலுவாக இருக்கும் பகுதியில் இரண்டாவது நாளாக இராணுவத்தினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகின்றது.
சண்டையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மாறுப்பட்ட கருத்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இருதரப்பும் எதிர்தரப்புக்கு அதிக சேதம் ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றன.
இந்த பிராந்தியத்தின் வட பகுதியில் கவனத்தை செலுத்தி வரும் இராணுவம், வான் தாக்குதல் முறைகளையும் ஆர்டிலரிகளையும் பயன்படுத்தி வருகிறது. ஆனால் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது. சில இடங்களில் வீதிகளில் கூட சண்டை இடம்பெற்று வருகின்றது.
இந்த பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இன்னும் பலரும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.