அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா அமைப்பை உருவாக்க உதவுங்கள் – அலவி, அஸ்வரிடம் உலமாக்கள் கோரிக்கை

macca.jpgஸ்ரீலங்கா ஜம்இய்யத் துல் உலமா என்ற புது இஸ்லாமிய இயக்கத்தை உருவாக்கி பக்கச் சார்பற்ற முறையில் அதனை இயங்க வைக்க உதவிகள் செய்ய வேண்டுமென ஆளுநர் எஸ். அலவி மெளலானா, ஜனாதிபதி ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோரை நேற்றுக் காலை கொழும்பில் சந்தித்த உலமாக்கள் கேட்டுக் கொண்டுள் ளனர்.அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நடுநிலையான அமைப்பு. அரசியல் கட்சிக்கோ அல்லது ஒரு வேட்பாளருக்கோ இந்தமைப்பு அதன் சரித்திரத்திலேயே ஆதரவளித்தது கிடையாது.

உலமா சபைக்கு ஒரு கட்டடம் வேண்டு மென்ற வேண்டுகோளு க்கமைய கொழும்பில் பெறுமதிமிக்க காணித் துண்டை பெற்றுக் கொடு த்து அதில் நிர்வாகக் கட்டடம் அமைத்துக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம் சமுதாயம் ஒருபோதும் மறக்காது என்றும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தலைமைகள் விடும் தவறுகளுக்காக முழு உலமா சமுதாயமும் பொறுப்பாகாது. நிதான மாக சிந்தித்து நடுநிலை வகித்து முஸ்லிம் சமூகத்தை நல்வழிப்படுத்தும் ஏராளமான உலமாக்கள் இந்நாட்டில் இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினர்.

வோக்கரில் நடைபழகிய பாலகன் நீரில் மூழ்கி பலி

வெள்ளத்தில் விளையாடிக் கொண்டிருந்த 10 மாத பாலகனை பலியெடுத்த சம்பவம் கல்முனையில் நேற்று இடம்பெற்றுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறித்த சம்பவம் இடம்பெற்ற கல்முனை – 3 மாதவன் வீதியில் உள்ள வீடும் வெள்ள நீரில் அமிழ்ந்துள்ளது.

வீட்டுக்குள் வோக்கரில் நடைபழகி விளையாடிக் கொண்டிருந்த பாலகன் படிக்கட்டிலிருந்து தவறுதலாக நீருக்குள் விழுந்ததனால் மூச்சுத் திணறியுள்ளது. அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிறுவனை செயற்கை சுவாசம் வழங்கி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போதிலும் இடைநடுவில் அந்த பாலகனின் உயிர் பிரிந்தது.

பொன்சேகாவின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூற்று நகைப்புக்குரியது – அமைச்சர் மைத்திரிபால தெரிவிப்பு

msri-sens.jpgதாம் பதவிக்கு வந்தால் அரசாங்க ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள அதிகரிப்பு வழிங்குவதாக ஓய்வுபெற்ற சரத் பொன்சேகா தெரிவித்திருப்பது நகைப்புக்குரிய ஒரு விடயமாகும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் மைத்திர்பால சிறிசேன தெரிவித்ததார். மஹாவலி கேந்திர நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

சரத்பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது ஐ.தே.க மற்றும் ஜே.வீ.பி ஆகியவற்றின் தேவைக்காகவல்ல அவருக்குப் பின்னால் இயங்கும் மற்றுமொரு சக்தியின் அழுத்தத்துக்காகவே.

சரத்பொன்சேகா கட்சி பேதம் அற்றவர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஜே.வீ.பி கூட்டத்துக்கு வராத அவர்  ஐ.தே.க கூட்டத்துக்கு யானைச் சின்னத்துடன் வந்தார். இன்னும் இரண்டு வாரங்களில் ஐ.தே.க மற்றும் ஜே.வீ.பி கட்சிகள் மத்தியில் பிளவு ஏற்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்

பரீட்சை எழுத பன்றிக் காய்ச்சல் தடையில்லை – கல்வி அமைச்சு தகவல்

stu.jpgபன்றிக் காயச்சலால் பீடிக்கப்பட்ட மாணவர்களுக்கு இம்முறை க.பொ.த. பரீட்சை எழுதத் தடை விதிக்கப்படடுள்ளதாகத் தெரிவிக்கப்படும் தகவலில் எவ்வித உன்மையும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. பரீட்சைக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் பரீட்சை எழுத அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் கூறுகிறது.

இவ்வருடத்துக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 22 ஆம்திகதி வரை நடைபெறவுள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இம்மாதம் 31 ஆம் திகதி ஆரம்பித்து எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி வரை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

சரத் பொன்சேகா இன்று கட்டுப்பணம் செலுத்தினார்

sarath-pon.jpgஎதிர்க் கட்சிகளின் சார்பில் பிரதான ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா இன்று முற்பகல் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.  இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிவாரணக் கிராமங்களில் க. பொ. த (சா/த) பரீட்சை

schools_stu.jpg2009ஆம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரண தர பரீட்சைகள் இன்று 11 ஆம் திகதி ஆரம்பமாகிறது.  வவுனியா நிவாரணக் கிராமங்களில் இம்முறை 4944 பேர் தோற்றவுள்ளனர். இவர்களுக்கென 51 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பரீட்சை மண்டப மேற்பார்வைக்கென 726 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பு பிரிவினரால் வழங்கப்பட்ட ஆளடையாளத்தை பயன்படுத்த முடியும்.

இடம்பெயர்ந்தவர்களுக்கெனவும் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பலாத்காரமாக புலிகள் இயக்கத்துக்கு இணைக்கப்பட்டு சரணடைந்தவர்களுள் 432 பேரும் இன்று பரீட்சைக்கு தோற்றுகின்றனர். பம்பைமடு புனர்வாழ்வு முகாம், பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம், காமினி வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒவ்வொரு பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புனர்வாழ்வு முகாமிலிருந்து கற்றல் நடவடிக்கைகளுக்காக இரத்மலானை இந்து கல்லூரிக்கு அழைத்துவரப்பட்டவர்களுள் பரீட்சைக்குத் தோற்றுபவர்களுக்கென விசேட பரீட்சை நிலையமொன்றும் அமைக்கப்பட்டுள்ளன.

மகசின் சிறைச்சாலையில் கைதிகளாக இருக்கும் பரீட்சார்த்திகளுக்கென ஒரு விசேட பரீட்சை நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

மீளக்குடியமர்த்தப்பட்ட முல்லைத்தீவு துணுக்காய் பகுதி மற்றும் முழங்காவில் பகுதிக்கென ஒரு விசேட பரீட்சை நிலையமும், புளியங்குளம் மீளக்குடியமர்த் தப்பட்ட பகுதியில் ஒரு பரீட்சை நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

 நிவாரணக் கிராமம் – 51 நிலையங்கள் / 4944 பரீட்சார்த்திகள் / 726 பணியாளர்கள்
சரணடைந்தவர்கள் – 3 விசேட நிலையங்கள் / 432 பரீட்சார்த்திகள்
நாடு முழுவதும் – 4098 நிலையங்கள்
மீளக்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு 3 விசேட நிலையங்கள்

ரூபா 10 ஆயிரம் அரசாங்க ஊழியருக்கு சம்பள உயர்வு ஜெனரல் பொன்சேகா

pr-can.jpgஇந்நாட்டின் ஜனாதிபதியாக நான் பொறுப்பேற்றவுடன் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதுடன், தனியார் துறை ஊழியர்கள், தோட்டத் தொழிலாளர், ஓய்வூதியர்களின் கஷ்டங்களைப் போக்கும் வகையில் நிவாரணமளிக்கக் கூடிய நடவடிக்கைகளையும் எடுப்பேனென எதிர்க் கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா உறுதியளித்தார்.

சிறீ கொத்தாவிலுள்ள ஐ.தே.கட்சியின் தலைமையகத்தில் அதன் தொழிற்சங்கமான தேசிய சேவைகள் சங்கம் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு திரட்டும்முகமாக நடத்திய விசேட கூட்டத்தில் பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்;நாட்டின் ஜனநாயகத்துக்கு சக்தியளிப்பது தொழிற்சங்கங்களாகும். இந்நிலையில் தொழிற்சங்கங்களின் செயற்பாட்டுக்கு அரச பலம் பிரயோகிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. யுத்த வெற்றியை காண்பித்தே தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டங்கள் தடுக்கப்பட்டன. எனவே தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்து ஜனநாயகத்தை உருவாக்கவே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

அத்துடன் நாட்டிலுள்ள ஊழல் மோசடிகளை ஒழித்து நீதியையும் சமாதானத்தையும் உருவாக்கி பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி சிறந்ததொரு நாட்டை எதிர்காலத்திடம் கையளிப்பதே எனது கடமை. நான் தொடர்ந்து இரு வருடங்களுக்கு அரச உயர் அதிகாரியாக 600 பேரின் பாதுகாப்புடனும் 25 வாகனங்களுடனும் சுக போகமாக வாழ்ந்திருக்க முடியும். யுத்தம் முடிவடைந்த நிலையில் நாட்டை முன்கொண்டு செல்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதுபோல் தமிழ் மக்கள் முகாம்களில் கஷ்டத்தின் மத்தியில் வாழ்கையில் இயல்பு வாழ்க்கையைக் கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படவில்லை. இதனை கருத்தில் கொண்டே அரசியலுக்கு வந்துள்ளேன். நான் பதவியேற்றதும் சுகபோகங்களை அனுபவிக்கப் போவதில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து ஜனநாயகத்தை எதிர்கால சந்ததியிடம் கையளிப்பேன். எனது அதிகாரங்களைப் பாராளுமன்றத்திடம் கையளித்து மக்கள் அரசை உருவாக்குவேன். அதேவேளை, நாடு ஜனநாயக முறையில் செயற்படுகின்றதா என்பதைப் பார்த்து நடவடிக்கையெடுக்குமுகமாகக் பாராளுமன்றத்தின் மூலம் எனக்கு வழங்கப்படும் அதிகாரத்தைக் கொண்டு நடவடிக்கையெடுப்பேன்.

நான் அரச சேவையில் 40 வருட காலம் பணியாற்றியுள்ளேன். அதிக காலம் இராணுவத்தில் பணியாற்றியவன் என்பதனால் இராணுவம், பொலிஸ் மற்றும் அரச சேவையிலுள்ள அரசியலை இல்லாதொழித்து ஊழியரின் உரிமையை வழங்குவேன். குறிப்பாக பொலிஸ் சேவையிலுள்ள அரசியலை இல்லாதொழித்து அதன் அதிகாரிகள் சுதந்திரமாக செயற்பட வழிவகுத்து நாட்டில் நீதியை ஏற்படுத்த சிறந்ததொரு எதிர்காலத்தை நாட்டில் ஏற்படுத்துவேன். இதற்கான பணியையே நான் பொறுப்பெடுத்துள்ளேன்.அத்துடன், பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சினைக்கு கண்ணீர்ப் புகையே பதிலளிக்கப்படுகின்ற நிலையில் அவர்களது பிரச்சினை பட்டதாரிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களது குடும்பத்துக்கு சக்தியளிப்பேன். இதற்கு நீங்கள் எனக்கு சக்தியளிப்பீர்கள் என நம்புகிறேன் என்றார்.

பல்கலைக்கழகங்களில் மோதல்களை தவிர்க்க தேசிய கொள்கை தயாரிப்பு

university.jpgபல்க லைக்கழக மாணவர்கள் மத்தியில் அடிக்கடி ஏற்படும் மோதல்கள் மற்றும் முரண்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தேசிய கொள்கையொன்றை தயாரித்து வருவதாக பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஹரிச்சந்திர அபேகுணவர்தன தெரிவித்தார்.

இலங்கை புற்றுநோய் சங்கத்தின் கண்டிக் கிளையின் 36 ஆவது பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இந்தத் தகவலைத் தெரிவித்த அவர் தொடர்ந்து தன துரையில்; நாட்டின் சகல பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் மத்தியில் நெருக்கமான உறவுகளைக் கட்டியெழுப்புவதனூடாக மாணவக் குழுக்கள் மத்தியில் தோன்றும் மோதல்களை கட்டுப்படுத்த முடியும். மாணவர்களிடையில் ஏற்படும் முரண்பாடுகளை சட்டங்கள் மற்றும் தண்டனைகள் மூலம் தீர்க்க முடியாது. எனவே பல்கலைக்ககழக மானியங்கள் ஆணைக்குழு தேசிய கொள்கையொன்றை உருவாக்கி வருகின்றது. இதனை சகல பல்கலைக்கழகங்களிலும் அமுல்செய்யும் போது சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என்றார்.

க. பொ. த (சா/த) பரீட்சை நாடு முழுவதும் இன்று ஆரம்பம் : பரீட்சைகள் – 11ஆம் திகதி முதல் 22 வரை

anura.jpg2009ஆம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரண தர பரீட்சைகள் இன்று 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இப்பரீட்சைகள் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடை பெறுகிறது. நாடு முழுவதும் 4098 பரீட்சை நிலையங்களில் 5 இலட்சத்து 56 ஆயிரத்து 714 பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்பரீட்சைக்கு சகல பரீட்சார்த்திகளும் காலை 8.00 மணிக்கு சமுகமளிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க அறிவித்துள்ளார்.

பரீட்சை விதிமுறைகளை மீறும் பரீட்சார்த்திகளோ அல்லது பரீட்சை மண்டபத்தினுள் ஒழுக்கக் கேடான முறையில் நடந்துகொண்ட பரீட்சார்த்திகளோ எக்காரணம் கொண்டும் தொடர்ந்தும் பரீட்சைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க அறிவித்துள்ளார். பரீட்சைக்கான அனுமதி அட்டை ஆளடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய, பரீட்சை திணைக்களம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள ஏதேனும் ஆளடையாள அட்டையை உடன் எடுத்துவர வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

11ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும் இப்பரீட்சைக்கு இடம்பெயர்ந்தோர், நிவாரணக் கிராமங்கள் நீங்கலாக, 5 இலட்சத்து 45 ஆயிரத்து 132 பரீட்சார்த்திகள் 4040 பரீட்சை நிலையங்களில் தோற்றுகின்றனர். இவர்களில் ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 875 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றுகின்றனர்

2017 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கனவில் ரணில். தொலைக்காட்சி பேட்டியில் எஸ்.பி.

sb-dissanayake.jpg2017  இல் மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் வரும் போது அதில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியலமைப்பின் பிரகாரம் அனுமதி கிடைக்காது.  எனவே, 2017 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமென்று ரணில் விக்கிரமசிங்க கனவு காண்கிறார். ஆனால் அவ்வாறு நடைபெறப் போவதில்லையென ஐ. தே. க. வின் முன்னாள் தேசிய அமைப்பாளர் எஸ். பி. திஸாநாயக்க கூறினார்.

ITN தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-

ஒரு கட்சியில் இருக்கும் வரை அக்கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். கட்சியில் ஒருமைப்பாடு அவசியம். இதனால் தான் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதும் அவருக்கு ஆதரவு தர நான் முன்வந்தேன்.  அவரை தோளில் சுமந்து சென்று வெற்றிபெற வைக்க தயாராக இருப்பதாகவும் கூறினேன். ஆனால் உண்மையை கூறுவதென்றால் ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகா வெற்றி பெறமாட்டார். அவர் தோல்வியை தழுவியதும் ரணில் விக்ரமசிங்க கட்சியினரைப் பார்த்து நீங்கள் தேர்வு செய்த வேட்பாளர் தோற்றுவிட்டார்.  எனவே மீண்டும் கட்சியை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு எனக்குத்தான் உள்ளது என்று தலைவர் பதவியில் இருந்து கட்சியை தொடர்ந்து நடத்திச் செல்வார்.

அவரால் நியமிக்கப்பட்ட செயற்குழுவும் அதனை ஆமோதிக்கும். இதன் பின் 2017 இல் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் வரும்போது அதில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் அமைப்பின் பிரகாரம் அனுமதி கிடையாது. எனவே 2017 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்று ரணில் விக்கிரமசிங்க கனவு காண்கிறார். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த திறமைசாலி, முக்கியஸ்தர்கள் பலர் தலைமைத்துவத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே கட்சியில் இருந்து வெளியேறினர். ரணில் விக்கிரமசிங்கவை கட்சியில் தலைமைப் பதவிக்கு கொண்டு வந்தவர் சிரிசேன குரே, ஆனால் அவர் தான் கட்சியில் இருந்து முதலில் வெளியேற்றப்பட்டார். சரத் அமுனுகம, நந்தா மத்தியூ, விஜேபால மெண்டிஸ் போன்ற அனுபவசாலிகளும் வெளியேற்றப்பட்டனர். விஜேபால மெண்டிஸ் கட்சியில் இரண்டாம் இடத்தில் இருந்தவர். ஆனால் அவரும் கூட கட்சியில் நிலைத்திருக்க முடியவில்லை.

அதன் பிறகு நான் கட்சியில் இருந்த போது கரு ஜயசூரிய தலைமையில் 17 பேர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி ஆளும் கட்சியில் சேர்ந்து கொண்டனர். ஆனால் நான் அப்போதும் கட்சியிலேயே தொடர்ந்தேன். கட்சியை சரியான வழியில் கொண்டு செல்லலாம் என்ற நோக்கத்திலேயே நான் தொடர்ந்து கட்சியில் இருந்தேன். ஆனால் அவ்வாறு முடியாது என்று நிச்சயமாக தெரிந்ததை அடுத்தே ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நான் வெளியேறினேன்.

ஐக்கிய தேசிய கட்சி இந்நாட்டின் மிகப் பெரிய கட்சி. 63 வருட பாரம்பரியத்தை கொண்டது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என மூவின மக்களினதும் பிரதிநிதிகளாகக் கொண்ட கட்சி. அக் கட்சியின் ஸ்தாபகர் முதல் இருந்து வந்த தலைவர்கள் திறமைசாலிகள்.

ஆனால் இப்போது அக்கட்சி அதன் பலத்தை இழந்து வருகிறது. இதற்கு கட்சியின் தலை மைத்துவமே காரணம். அக் கட்சிக்குள் இப்போது ஜனநாயகம் இல்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகர் டி. எஸ். சேனநாயக்க முதல் விஜேதுங்க வரை கட்சியின் தலைவர் கட்சியின் வரு டாந்த மாநாட்டில் கட்சி உறுப்பினர்களின் தேர்தல் மூலமே தெரிவாவார். ஆனால் இப்போது அந்த நடைமுறை இல்லை. கட்சியில் தீர்மானங்களை எடுப்பது கட்சியின் செயற் குழுவாகும். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டவர்களே உள்ளனர். கட்சி யின் செயற் குழுவுக்கு ரணில் விக்கிரமசிங்க எப்போதுமே திறமையற்ற அனுபவமற்ற, தனது பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவர்களையே நியமிக்கிறார். இதன் மூலம் ரணில் விக்கிரமசிங்க கட்சியில் தனியொரு சர்வாதிகாரி போல் செயற்பட முடிகிறது.

இம்முறை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் போது கட்சியில் இருந்த முக்கியஸ்தர்கள் பலர் தலைவர் விக்கிரமசிங் கவை வெற்றி பெறும் வகையில் சந்தைப் படுத்த முடியாது என்று கூறிவந்தனர். ரணிலும் அதனை ஏற்றுக் கொண்டார். அதனால் இம்முறை கட்சியில் இருந்து போட்டியிடும் ஆற்றல் மிகுந்த ஒருவரை செயற்குழு தேர்வு செய்திருக்க வேண்டும்.

ஆனால் செயற்குழு அதற்கு மா¡றாகவே முடிவெடுத்தது. ஏனெனில் செயற்குழு ரணிலினால் நியமிக்கப்பட் டது. அவர் சொற்படி தான் நடக்கும். எனவே கட்சியில் ஜனநாயகம் அற்ற வகையிலேயே முடிவுகள் எடுக்கப்படுவது தெளிவாகிறது.