வெள்ளத்தில் விளையாடிக் கொண்டிருந்த 10 மாத பாலகனை பலியெடுத்த சம்பவம் கல்முனையில் நேற்று இடம்பெற்றுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறித்த சம்பவம் இடம்பெற்ற கல்முனை – 3 மாதவன் வீதியில் உள்ள வீடும் வெள்ள நீரில் அமிழ்ந்துள்ளது.
வீட்டுக்குள் வோக்கரில் நடைபழகி விளையாடிக் கொண்டிருந்த பாலகன் படிக்கட்டிலிருந்து தவறுதலாக நீருக்குள் விழுந்ததனால் மூச்சுத் திணறியுள்ளது. அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிறுவனை செயற்கை சுவாசம் வழங்கி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போதிலும் இடைநடுவில் அந்த பாலகனின் உயிர் பிரிந்தது.