::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

வடகொரியாவின் ஏவுகணை செலுத்தலுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா ஏவி இருப்பதற்கு ஐ.நா பாதுகாப்பு சபை பலமான பதில் ஒன்றை கூற வேண்டும் என அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கூறியுள்ளன.

இந்த ஏவுகணை செலுத்தல் தூண்டும் வகையில் இருப்பதாக கூறியுள்ள அமெரிக்க அதிபர், இருந்த போதிலும் தாங்கள் வடகொரியாவுடன் அணுத்திட்டம் குறித்து சர்வதேச பேச்சுவார்த்தை நடத்துவதில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தை ஐ.நா பாதுகாப்பு சபை விவாதிக்கவுள்ளது. நிதானமாக செயல்படுமாறு ஏனைய நாடுகளுக்கு சீனாவும் ரஷ்யாவும் கோரிக்கை விடுத்துள்ளன.

தங்களுடைய ஏவுகணை செய்மதி ஒன்றை பாதையில் அமர்த்தியதாக வடகொரியா கூறியுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள அமெரிக்காவும், தென்கொரியாவும், இந்த ஏவுகணை ஏவப்பட்டது அதனுடைய செயற்திறனை சோதனை செய்வதற்காகவே என கூறியுள்ளன.

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்

earth_indo.jpg இந்தோனேசியாவில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் இதன் வீச்சு 6.5-என்ற அலகாக பதிவான இந்த நிலநடுக்கம் ,சுலாவிசி தீவுப்பகுதியில் கடலுக்கு அடியில் சுமார் 10-கி.மீ.ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

மகனை உருப்படியாக வளர்க்காத மேனகா என்னை விமர்சிப்பதா?: மாயாவதி

mayawati.jpgபெற்றால்தான் தாயா?. அன்னை தெரசா என்ன குழந்தை பெற்றவரா?. அவர் உலக மக்களை தன் பிள்ளைகளாக நினைத்து பாசம் காட்டவில்லையா?. நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்காமல் பிள்ளையை வளர்த்த மேனகா காந்தி என்னைக் குறை கூறிப் பேசுவது கண்டனத்துக்குரியது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

வருண் காந்தியை வைத்து மேனா காந்திக்கும், மாயாவதிக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது. வருண் காந்தியை சிறைக்குச் சென்று பார்க்க மேனகா காந்திக்கு உ.பி. அரசு திடீரென தடை விதித்தது. இதனால் கோபமடைந்த மேனகா, மாயாவதி ஒரு குழந்தை பெற்றவராக இருந்திருந்தால் ஒரு தாயின் வலி தெரிந்திருக்கும் என்று கூறியிருந்தார்.

இதற்கு மாயாவதி தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டத்தை மீறிச் செயல்படுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். வருண் காந்தி மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை. எனது ஆட்சி, யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும். தாய்ப் பாசம் பற்றிப் பேசும் மேனகா, நமது நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான தாய்மார்களின் கவலைகள் குறித்தும் கவலைப்பட வேண்டும்.

மகனுக்கு நல்ல புத்திமதி சொல்வதை விட்டு விட்டு அவரை ஆதரித்துப் பேசும் மேனகாவின் செயல் கண்டனத்துக்குரியது. ஒரு மகனின் வலிக்காக வருத்தப்படுகிறார் மேனகா. நான் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பிள்ளைகளுக்காக கவலைப்படுகிறேன். என்னைப் பற்றி அவர் பேசிய அவமானகரமான பேச்சுக்காக என்னிடம் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் மேனகா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் மாயாவதி.

கண்டெய்னர் ஒன்றில் மூச்சுத்திணறி 44 பேர் பலி

containers_.jpgபாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் கண்டெய்னர் ஒன்றில் சுமார் 150 பேர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர்களில் 44 பேர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சட்டத்திற்கு புறம்பாக குடியேற முயன்ற இவர்கள் மூச்சு திணறி இறந்து விட்டதாக பொலிஸார் ஒருவர் தெரிவித்துள்ளார். நேட்டோ படைகளுக்கு பொருட்களை ஏற்றி செல்லும் இந்த வாகனம் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் ஊடாக இரான் செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது

நேட்டோ அமைப்பின் அடுத்த செயலாளர் டென்மார்க் பிரதமர்

nato_hq.jpgநேட்டோ அமைப்பின் அடுத்த செயலாளராக டென்மார்க் பிரதமர் அண்டர்ஸ் ஃபோக் ரஸ்முஸன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்கவுள்ளார்.

இவருடைய நியமனத்திற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்தது. டென்மார்கில் நபிகள் நாயகம் குறித்து கேலிச்சித்திரம் வெளியானது மற்றும் டென்மார்கில் குர்து இன ஆதரவு தொலைக்காட்சி நிலையம் செயற்படுவது போன்ற விடயங்களில் இவர் மீது துருக்கிக்கு அதிருப்தி உள்ளது.

எனினும் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து துருக்கியின் கவலைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாக தற்போதைய நேட்டோ செயலாளர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துக்கு ஒரு ரில்லியன் டொலர் 2010க்குள் ஐந்து ரில்லியன் செலவிடவும் தீர்மானம் – நிதி நெருக்கடியைத் தீர்க்க ஜீ 20 மாநாட்டில் முடிவு

g-20.jpgசர்வதேச நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்யும் வழிகளை ஆராய்ந்த ஜீ 20 மாநாடு அவசரமாக சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒரு ரில்லியன் டொலர் பணத்தை வழங்க வேண்டுமெனத் தீர்மானித்தது. மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள் மாட்டியுள்ள நாடுகளுக்கு ஏனைய நிதி நிறுவனங்கள் பாரிய வர்த்தக அமைப்புகள் அவசரமாக உதவ வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. இரண்டு நாள் நடைபெற்ற இந்த மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

அமெரிக்க ஜனாதிபதி பிரிட்டிஷ் பிரதமர் ஆகியோர் முக்கிய உரைகளை நிகழ்த்தினர். 2010 ம் ஆண்டு முடிவடைவதற்குள் ஜீ 20 நாடுகளும், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளும் ஐந்து ரில்லியன் டொலரைச் செலவு செய்து நிதி நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன்பிரவுண் சொன்னார்.

இது புதிய உலகின் உத்தரவு எனக் கூறிய பிரதமர் பிரவுண் நெருக்கடியிலிருந்து மீழ இதுவும் ஒரு வழியாகவும் உள்ளது என்றார். ஜீ 20 மாநாடு புதிய திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பதாகக் கூறிய ஜனாதிபதி பராக் ஒபாமா மாநாட்டின் தீர்மானங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அழுத்தம் கொடுக்கும் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியாதென்றும் தெரிவித்தார்.

இத்தீர்மானத்தில் அதிகமான நம்பிக்கை வைக்கவில்லை என்று பிரான்ஸ் ஜனாதிபதி கூறினார். இதேவேளை வரலாற்று முக்கியம் வாய்ந்த பேச்சுவார்த்தையும் மாநாடும் நடந்ததாக ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்கல் சொன்னார். ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட முக்கிய நாடுகளின் தலைவர்களும் இம் மாநாட்டில் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான கருத்துக்களைத் தெரிவித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கப்படவுள்ள ஒரு ரில்லியன் நிதியில் 500 பில்லியன் பணமாகவும் 250 பில்லியன் காசோலையாகவும் 250 பில்லியன் வர்த்தகக் கடனாகவும் வழங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. ஐநூறு மில்லியன் பணத்தில் ஜப்பானும் ஐரோப்பிய யூனியனும் நூறு மில்லியன் டொலர்களை வழங்கும். ஏனைய செல்வந்த நாடுகள் தனித்தனியே இத் நிதியை வழங்கும் மாநாட்டின் முடிவில் முறையிடப்பட்டாத வரிகள் பற்றி பொருளாதாரக் கூட்டுறவுக்கான அபிவிருத்தி அமைப்பு பட்டியலொன்றை வழங்கியது.

இது குறித்து அவசர முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறிய கோர்டன் பிரவுன் இம் மாதிரியான வரிகளுக்கு கடுமையான நடவடிக்கையும், தடைகளையும் கொண்டுவர மாநாடு இணங்கியதாகவம் சொன்னார். கோஸ்ட்டாரிகா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், உறுகுவே ஆகிய நாடுகள் இவ்வாறான முறையிடப்படாத வரிகள் உள்ள நாடுகளில் உள்ளடக்கப்படுகின்றன. இது குறித்து இந்த நாடுகள் எந்தக் கருத்தையும் கூறவில்லை.

சிறையில் வருண் காந்தி: மேனகாவுக்கு அனுமதி மறுப்பு

rahul.jpgமத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வருண் காந்தி சிறையில் அடைக்கப்பட்டார். தீவிரவாதிகளால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதை தொடர்ந்து, பிலிபிட் சிறையில் இருந்து இட்டா சிறைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவரை சந்திக்க அவரது தாயார் மேனகா காந்தி சென்றார். “தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருக்கும் ஒரு கைதியை வாரத்துக்கு 2 முறை மட்டுமே சந்திக்க சட்டத்தில் இடமுண்டு. அவரை ஏற்கனவே ஒரு முறை சந்தித்து விட்டதால் 8-ந் தேதிக்கு பிறகே சந்திக்க முடியும்” என்று கூறி மாவட்ட கலெக்டர் கவுரவ் தயாள் அனுமதி கொடுக்க மறுத்து விட்டார். இது பற்றி மேனகா காந்தி கூறுகையில், “இது எனக்கு இழைக்கப்பட்ட அநீதி. மாயாவதி ஒரு தாயாக இருந்தால் உணர முடியும். நியாயமற்றது, சட்ட விரோதமானது” என்று கூறினார்.

கருணாநிதிக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்திடமிருந்து அச்சுறுத்தல் கடிதம்

karunanithi.jpgதமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் பெயரில் அச்சுறுத்தல் விடுத்து மர்மக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை நகர காவற்துறை ஆணையாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதிக்குத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய மத்திய அரசின் உள்துறையிடமிருந்து ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ‘இசெட் பிளஸ்’ அளவுகோலின்படி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 3ஆந் திகதியன்று முதல்வரின் கோபாலபுர இல்ல முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சின்னம் அச்சடிக்கப்பட்ட தாளில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மலேஷியாவில் புதிய பிரதமர் பதவியேற்பு

najib-razak.jpgமலேஷி யாவின் புதிய பிரதமராக நஜீப் ரஸாக் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.  மலேஷிய நாடும் அதன் ஆளும் கட்சியும் மிகப் பெரும் சவால்களை எதிர்நோக்கும் இந்த நேரத்தில் புதிய ஆட்சித் தலைவராக ரஸாக் பொறுப்பேற்கிறார்.

மலேஷியாவின் பொருளாதாரம் இவ்வாண்டு சுருக்கம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஸாக் இப்போது வழிநடத்தும் ஐக்கிய மலாய் கட்சி நாடாளுமன்றத்தில் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கடந்த ஆண்டில் இழந்தது.

இதன் விளைவாக அப்போதைய பிரதமர் அப்துல்லா பதாவி ராஜினாமா செய்து வெளியேற நேரிட்டது. புதிய பிரதமர் ரஸாக்கின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பலவும் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் அவர் அக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இரண்டு அடி உயர மாப்பிள்ளையை மணந்த ஐந்து அடி உயர பெண்

marriage.jpgஇரண்டு அடி உயரே ஆன 35 வயது இளைஞர், 5 அடி உயரம் கொண்ட பெண்ணை மணந்துள்ளார்.

இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பரப்புரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் நேற்று  நடை பெற்றுள்ளது கேரள மாநிலம் கோழிக்கோடை சேர்ந்தவர் தேவதாஸ். இவர் ஒரு ஓவியர். வயது 35 . இவர் வழக்கமான ஆண்களின் உயரம் கொண்டவரல்ல இரண்டு அடி உயரமே கொண்டவர்.

இந்த இயற்கையின் முரண் காரணமாக திருமணமே நடைபெறாமல் இருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் 30 வயதான சசிகலா என்ற பெண்ணை சந்தித்தார். இவர் பெண்களின் சராசரி உயரமான 5 அடி உயரம் கொண்டவர். உயரத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும்,  இருவரது மனமும் சமன்பட்டது, காதல் மலர்ந்தது, இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

தேவதாஸின் குடும்பத்தினர் இந்த காதலுக்கு பச்சைக் கொடி காட்டினர். ஆனால் சசிகலாவின் பெற்றோருக்கு துளியும் இதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் தங்களது காதலில் உறுதியாக இருந்த தேவதாஸும், சசிகலாவும் கோழிக்கோடு மாவட்டம் பரப்புரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் வைத்து நேற்று திருமணம் செய்து கொண்டனர்.