சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா ஏவி இருப்பதற்கு ஐ.நா பாதுகாப்பு சபை பலமான பதில் ஒன்றை கூற வேண்டும் என அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கூறியுள்ளன.
இந்த ஏவுகணை செலுத்தல் தூண்டும் வகையில் இருப்பதாக கூறியுள்ள அமெரிக்க அதிபர், இருந்த போதிலும் தாங்கள் வடகொரியாவுடன் அணுத்திட்டம் குறித்து சர்வதேச பேச்சுவார்த்தை நடத்துவதில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தை ஐ.நா பாதுகாப்பு சபை விவாதிக்கவுள்ளது. நிதானமாக செயல்படுமாறு ஏனைய நாடுகளுக்கு சீனாவும் ரஷ்யாவும் கோரிக்கை விடுத்துள்ளன.
தங்களுடைய ஏவுகணை செய்மதி ஒன்றை பாதையில் அமர்த்தியதாக வடகொரியா கூறியுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள அமெரிக்காவும், தென்கொரியாவும், இந்த ஏவுகணை ஏவப்பட்டது அதனுடைய செயற்திறனை சோதனை செய்வதற்காகவே என கூறியுள்ளன.