சர்வதேச நாணய நிதியத்துக்கு ஒரு ரில்லியன் டொலர் 2010க்குள் ஐந்து ரில்லியன் செலவிடவும் தீர்மானம் – நிதி நெருக்கடியைத் தீர்க்க ஜீ 20 மாநாட்டில் முடிவு

g-20.jpgசர்வதேச நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்யும் வழிகளை ஆராய்ந்த ஜீ 20 மாநாடு அவசரமாக சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒரு ரில்லியன் டொலர் பணத்தை வழங்க வேண்டுமெனத் தீர்மானித்தது. மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள் மாட்டியுள்ள நாடுகளுக்கு ஏனைய நிதி நிறுவனங்கள் பாரிய வர்த்தக அமைப்புகள் அவசரமாக உதவ வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. இரண்டு நாள் நடைபெற்ற இந்த மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

அமெரிக்க ஜனாதிபதி பிரிட்டிஷ் பிரதமர் ஆகியோர் முக்கிய உரைகளை நிகழ்த்தினர். 2010 ம் ஆண்டு முடிவடைவதற்குள் ஜீ 20 நாடுகளும், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளும் ஐந்து ரில்லியன் டொலரைச் செலவு செய்து நிதி நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன்பிரவுண் சொன்னார்.

இது புதிய உலகின் உத்தரவு எனக் கூறிய பிரதமர் பிரவுண் நெருக்கடியிலிருந்து மீழ இதுவும் ஒரு வழியாகவும் உள்ளது என்றார். ஜீ 20 மாநாடு புதிய திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பதாகக் கூறிய ஜனாதிபதி பராக் ஒபாமா மாநாட்டின் தீர்மானங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அழுத்தம் கொடுக்கும் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியாதென்றும் தெரிவித்தார்.

இத்தீர்மானத்தில் அதிகமான நம்பிக்கை வைக்கவில்லை என்று பிரான்ஸ் ஜனாதிபதி கூறினார். இதேவேளை வரலாற்று முக்கியம் வாய்ந்த பேச்சுவார்த்தையும் மாநாடும் நடந்ததாக ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்கல் சொன்னார். ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட முக்கிய நாடுகளின் தலைவர்களும் இம் மாநாட்டில் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான கருத்துக்களைத் தெரிவித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கப்படவுள்ள ஒரு ரில்லியன் நிதியில் 500 பில்லியன் பணமாகவும் 250 பில்லியன் காசோலையாகவும் 250 பில்லியன் வர்த்தகக் கடனாகவும் வழங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. ஐநூறு மில்லியன் பணத்தில் ஜப்பானும் ஐரோப்பிய யூனியனும் நூறு மில்லியன் டொலர்களை வழங்கும். ஏனைய செல்வந்த நாடுகள் தனித்தனியே இத் நிதியை வழங்கும் மாநாட்டின் முடிவில் முறையிடப்பட்டாத வரிகள் பற்றி பொருளாதாரக் கூட்டுறவுக்கான அபிவிருத்தி அமைப்பு பட்டியலொன்றை வழங்கியது.

இது குறித்து அவசர முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறிய கோர்டன் பிரவுன் இம் மாதிரியான வரிகளுக்கு கடுமையான நடவடிக்கையும், தடைகளையும் கொண்டுவர மாநாடு இணங்கியதாகவம் சொன்னார். கோஸ்ட்டாரிகா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், உறுகுவே ஆகிய நாடுகள் இவ்வாறான முறையிடப்படாத வரிகள் உள்ள நாடுகளில் உள்ளடக்கப்படுகின்றன. இது குறித்து இந்த நாடுகள் எந்தக் கருத்தையும் கூறவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *