::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நவம்பரில் சீனா செல்வார்

000-obama.jpgஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நவம்பர் மாதத்தில் சீனா செல்லவுள்ளதாக சீனாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதர் தெரிவித்தார். ஏப்ரல் மாத அழைப்பை ஏற்று பராக் ஒபாமா சீனா செல்வார். சிங்கப்பூரில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க வரும் அமெரிக்க ஜனாதிபதி மாநாடு முடிவடைந்ததும் சீனா செல்வார். இவரின் இந்த விஜயத்தால் அமெரிக்க- சீன உறவுகள் இந்த ஆண்டுக்குள் உறுதியடையும் எனவும் சீனாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதர் சொன்னார்.

பராக் ஒபாமாவை சீனா வருமாறு ஜனாதிபதி ஜுஹிண்டாவோ அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பராக் ஒபாமா ஏற்றுக் கொண்டதையடுத்து இந்த விஜயம் ஏற்பாடாகியுள்ளது. ஜனாதிபதியின் முதல் விஜயமாக இது அமையவுள்ளது. பெரும்பாலும் நவம்பர் 14-15ம் திகதிகளில் அமெரிக்க ஜனாதிபதி சீனா செல்வாரென நம்பகரமான வட்டாரங்கள் கூறுகின்றன.

சீனாவும் அமெரிக்காவும் பாரிய வியாபாரக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்றன. வர்த்தகம், வியாபாரம் காலநிலை மாற்றம் எரிவாயு பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் பற்றி இரு தலைவர்களும் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளனர்.

தாய்வானுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கியதால் ஆத்திரமடைந்த சீனா 2008ம் ஆண்டு 6.5 பில்லியன் பெறுமதியான ஆயுதப் பரிமாற்றங்களை அமெரிக்காவுக்கு வழங்காமல் நிறுத்திக் கொண்டது இது தவிர சீனாவின் கடல் எல்லைக்குள் அமெரிக்கக் கப்பல் ஊடுருவியதால் இரு நாடுகளிடையேயும் முறுகல் ஏற்பட்டது. இந்நிலைமைகளைச் சீர்செய்வது பற்றி முக்கிய பேச்சுக்களிலும் அமெரிக்க – சீன ஜனாதிபதிகள் ஈடுபடுவர். தாய்வான் எப்போதும் சீனாவின் இறைமைக்குக் கீழ் உள்ள ஒரு பகுதி என்பதை பராக் ஒபாமாவுக்கு இச்சந்திப்பின் போது வலியுறுத்தவும் சீன ஜனாதிபதி தயாராகவுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்

ஸ்வைன்: இந்தியாவில் 76 பலி

10092009.jpgஇந்தியா வில் பன்றி காய்ச்சல் நோய்க்கு இன்று பெங்களூர், டெல்லியில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஸ்வைன் ப்ளு எனப்படும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,900யை தாண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 205 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

.உல்லாச பயணம் வேண்டாம்-அரசு அறிவுரை:

இந்த நிலையில், பள்ளிகளில் பன்றி காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் கடும் அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறை மூலம் சுகாதாரத்துறை அனுப்பி உள்ள அந்த சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவுரைகள்:

– எந்த ஒரு மாணவருக்கோ, பணியாளருக்கோ, ஆசிரியருக்கோ பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

– பள்ளியில் பணிபுரிவோர், படிப்பவர் யாராக இருந்தாலும் உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறைகளை பயன்படுத்திய பின்பும், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

– தும்மல், இருமல் இருந்தால் கைக்குட்டை அல்லது சிறிய துண்டு அல்லது டிஸ்யூ பேப்பரை பயன்படுத்த வேண்டும்.

– ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டுவர வேண்டும்.

– பன்றி காய்ச்சல் பாதிப்புள்ள வெளிநாடுகள் மற்றும் ஊர்களுக்கு செல்ல அவசியம் ஏற்பட்டால் ஒழிய மற்றபடி பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கலாம். உல்லாச பயணம், மாநாடுகள் போன்றவற்றை தவிர்க்கலாம்.

– சரியான அறிவியல் பூர்வமான தகவல்களையும், செய்திகளையும் 044-24321569 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். மேலும் சுகாதாரத்துறை இணையதளத்திலும் தகவல் பெறலாம்.

– வீண் வதந்திகளை நம்பி பள்ளிகளில் பீதி ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– பள்ளியில் பணிபுரிவோர் மற்றும் மாணவர்கள்  மருத்துவச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

– பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ பரிசோதனைக்குப் பின் போதிய விடுமுறை வழங்கி வீடுகளில் இருக்கும்படி செய்ய வேண்டும். விடுதி மாணவர்களுக்கு நோய் அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனையில் சேர்த்திட வேண்டும்.

– நோய் வராமல் தடுக்க தும்மல் மற்றும் இருமலின்போது கைக்குட்டையால் வாய் மற்றும் மூக்குப்பகுதியை மூடிக்கொள்ள வேண்டும்.

– அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாக்கர்பீ: ஸ்காட்லாந்து சட்டங்களுக்கு உட்பட்டே மெக்ராஹிக்கு விடுதலை வழங்கப்பட்டதாக கூறுகிறார் நீதியமைச்சர்

megrahifora.jpgலாக்கர் பியில் 1988 இல் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியான லிபிய நபரை விடுதலை செய்வதற்கான தனது முடிவு ஸ்காட்டிஸ் சட்டங்கள் மற்றும் பெறுமானங்களின் அடிப்படியிலானது என்றும், இராஜதந்திர, அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்களுக்கு அதில் இடம் கிடையாது என்றும் ஸ்காட்டிஷ் நீதியமைச்சர் கென்னி மக் அஸ்கில் கூறியுள்ளார். அப்தல் பஸத் மெக்ராஹி என்னும் அந்த நபர் விடுதலை செய்யப்பட்டமை மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட வெற்றிவீரருக்கான வரவேற்பு ஆகியவை குறித்து சர்வதேச கண்டனம் எழுந்துள்ளது.

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், அந்த வரவேற்பு பொருத்தமற்றது என்று கூறிய மக் அஸ்கில் அவர்கள், வரவேற்பு குறைந்த அளவிலேயே நடக்கும் என்று தமக்கு உறுதி வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறினார். குணப்படுத்த முடியாத புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால், மனிதாபிமான அடிப்படையில் மெக்ராஹி விடுதலை செய்யப்பட்டார்.

14 மாதங்களுக்கு பின் முதல் தடவையாக தொலைக்காட்சியில் தோன்றிய பிடெல் காஸ்ட்ரோ

castro.jpgகியூபா முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ, 14 மாதங்களின் பின் முதல் தடவையாக தொலைக்காட்சியில் தோன்றியுள்ளார். 2006 ஆம் ஆண்டு சுகவீனமடைந்து அறுவைச் சிகிச்சையொன்றுக்கு ஆளாகிய பிடெல் காஸ்ட்ரோ, அது முதற்கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் தோன்றாது இருந்து வருகிறார்.

வெனிசுலாவைச் சேர்ந்த மாணவர்களுடன் பிடெல் காஸ்ட்ரோ உரையாடும் மேற்படி காட்சியானது கடந்த சனிக்கிழமை எடுக்கப்பட்டதாக அதிகõரிகள் தெரிவித்தனர்.

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிடெல் காஸ்ட்ரோ மிகுந்த ஆரோக்கியமாகவும் உற்சாகத்துடனும் காணப்பட்டார்.

மேற்படி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு முன்னர், அந்நாட்டு அரச ஊடகமான “ஜுவென்டட் ரெபல்டி’ பத்திரிகையானது பிடெல் காஸ்ட்ரோவின் புதிய புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தது.

அந்த புகைப்படமானது ஈகுவடோரின் இடதுசாரி ஜனாதிபதி ராபயல் கொர்ரியாவுடன் பிடெல் காஸ்ட்ரோ உரையாடுவதை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது

சி.ஐ.ஏ. செய்த கைதிகள் துஷ்பிரயோகம்: வழக்குகளை மீண்டும் நடத்த அமெரிக்க நீதித்துறை பரிந்துரை

guantanamo.jpgஅமெரிக் காவின் உளவுப் பிரிவான சி.ஐ.ஏ.வினர் சிறைக் கைதிகளை விசாரிக்கும்போது நடைபெற்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகள் பலவற்றை மீண்டும் தொடங்குவதற்கு அந்நாட்டின் நீதித்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் சி ஐ ஏ வின் ஊழியர்களும், அதனுடனான ஒப்பந்தக்காரர்களும் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

அமெரிக்க நீதித்துறையின் இந்த பரிந்துரையானது, முன்னர் அதிபராக இருந்த புஷ் அவர்களின் நிர்வாகம் எடுத்த கொள்கையினை மாற்றியைக்கும்.

தீவிரவாதம் தொடர்பான சந்தேக நபர்களை சி ஐ ஏ நடத்திய விதம் குறித்த தகவல்கள் இன்று வெளியிடப்படவுள்ளது.

கடந்த ஆண்டு இது தொடர்பான மூல அறிக்கை வெளியான போது, இந்த துஷ்பிரயோகங்கள் குறித்த தகவல்கள் வெளியாகாமல் தடுக்கப்பட்டன.

புதிய தகவல்கள் மரண தண்டனையை நிறைவேற்றுவது போல போலியாக செய்து காட்டியது குறித்தும், மின்சார துளையிடும் கருவியைக் கொண்டு அச்சுறுத்தியது குறித்தும் புதிய விபரங்களை வெளிக் கொண்டுவரக்கூடும் என அமெரிக்க பத்திரிகைகள் எதிர்வு கூறுகின்றன.

எதிர்காலத்தில், வெள்ளை மாளிகையின் கண்காணிப்பின் கீழ் பயங்கரவாத சந்தேகநபர்கள் மீது விசாரணைகளை நடத்துவதற்கான ஒரு புதிய துறை உருவாக்கப்படுவதற்கு அதிபர் ஒபாமா ஒப்புதல் வழங்கியுள்ளார்.

செப்டம்பர் மூன்றாம் திகதிக்கு முன்னர் தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்க முடியாது

vote000.jpgஆப்கா னிஸ்தான் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை செப்டம்பர் மாதம் 03ம் திகதிக்குப் முன்னர் எதிர்பார்க்க முடியாதென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஹமீத் அல்கர்ஸாயியும் மற்றொரு வேட்பாளரான முன்னாள் வெளிநாட்டமைச்சர் அப்துல்லாவும் அறிவித்துள்ளதால் பெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன.

முதல் சுற்றில் தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக இவ்விருவரும் உரிமைகோரியுள்ளனர். இது குறித்து கருத்து வெளியிட்ட தேர்தல் திணைக்களம் இரண்டாம் சுற்று எண்ணப்பட வேண்டியுள்ளதாக அறிவித்துள்ளது முதலாம் சுற்றில் இருவரும் சம அளவான வாக்குகளைப் பெற்றால் அல்லது வெற்றி தெளிவில்லாமல் இருந்தால் மாத்திரமே இரண்டாம் சுற்று எண்ணப்பட வேண்டும்.

தேர்தல் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் இவ்விரண்டில் ஒன்று நடந்திருக்க வேண்டும். இதை வைத்து வெற்றி தங்களுக்கேயென இரண்டு வேட்பாளர்களும் உரிமை கோருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்யோக பூர்வ முடிவுகள் வரும் வரை வெற்றிச் செய்திகளை பொது மக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டாமென இரு வேட்பாளர்களையும் ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கமான நேச நாடுகள் கேட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் தேர்தல்கள் (ஜனாதிபதி மாகாண சபை) வன்முறைமிக்கதென்றும் மோசடியானதென்றும் தெரிவித்துள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வாக்குப் பெட்டிகளைக் கைமாறும் விடயத்திலுள்ள அதிகாரங்கள் மாற்றப்படவேண்டும். இதைச் செய்ய அரசியலமைப்பில் மாற்றங்கள் தேவையென்றும் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 2001ம் ஆண்டு தலிபான்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் இது. தலிபானிகளின் அச்சுறுத்தல் வன்முறைகளுக்கு மத்தியிலும் மக்கள் வாக்களித்துள்ளமை ஆப்கான் வரலாற்றின் முக்கிய மைல்கல் என அவதானிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவுகளால் பெரும் வன்முறைகள் எழவும் வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

பன்றி காய்ச்சல் பலி- இந்தியாவில் 70 ஆக உயர்வு

10092009.jpgஇந்தியா வில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இரவு பெங்களூரில் ஒரு பெண் பலியானதை அடுத்து கர்நாடகாவில் மட்டும் இந்த எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மத்திய சுகாதாரத் துறை கவலை அடைந்துள்ளது.
 

பாகிஸ்தானில் கார்க் குண்டுத் தாக்குதல்; அன்ஸாருல் இஸ்லாம் முக்கியஸ்தர் பலி

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கடந்த சனிக்கிழமை நடந்த கார்க் குண்டுத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், ஐந்து பேர் காயமடைந்தனர். ரிமோட் கருவி மூலம் தூரத்திலிருந்து இக் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. அரசாங்க வைத்திய சாலைக் கருகாமையில் இக்கார் குண்டு வெடிக்கவைக்கப்பட்டது.

பலியான இருவரும் அன்ஸாருல் இஸ்லாம் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என பெஷாவர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். பலியான முபீன் அப்ரிடி இவ்வியக்கத்தின் பேச்சாளராவார். மற்றவர் இவரின் கார் சாரதியாவார். காயமடைந்தோர் பொது மக்களாவர்.

லக்ஷர் இ இஸ்லாம் என்ற அமைப்பு இக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குண்டு வெடித்த இடம் சன நெருக்கமுள்ள பகுதியாகும். ரமழான் மாதம் ஆரம்பமானதால் பெருந் தொகையானோர் வீதிகளில் நடமாட வில்லையென்பதால் இழப்புகள் குறைவாக இருந்தன.

பாகிஸ்தான் இராணுவத்தின் பாரிய நடவடிக்கைகள் வஸிரிஸ்தான் பகுதியில் ஆரம்பித்துள்ளதால் இஸ்லாமிய அமைப் புகளிடையே பிளவுகள் ஏற்பட்டுள்ளதை இந்த தாக்குதல் உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.

கிரேக்கத்தில் காட்டுத் தீயால் கடும் பாதிப்பு

greece_athens_fires.gifகிரேக்கத்தில் பரவிவரும் காட்டுத்தீ அந்நாட்டின் தலைநகரில் சேதங்களை ஏற்பபடுத்தும் என்று அஞ்சப்படும் நிலையில், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான சுற்றுச்சூழல் பேரவலம் இதுதான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரும் சீற்றத்துடன் காற்று வீசுவதால் தீ வேகமாக பரவி வரும் நிலையில், அதென்ஸ் நகரின் வடக்கு மற்றும் கிழக்கு புறநகர்ப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை வீடுகளை துறந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இத்தாலி, பிரான்ஸ் சைப்ரஸ் போன்ற நாடுகளிலிருந்து தீயணைப்பு விமானங்கள் உள்ளிட்ட சர்வதேச உதவிகளை காட்டுத் தீயை அணைப்பது தொடர்பில் கிரேக்க அரசாங்கம் பெற்றுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் இதேபோல் காட்டுத் தீ பரவியதில் எழுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர்.

ஆப்கான் தேர்தல் புகார்கள் முடிவை பாதிக்கலாம் – புகார் ஆணையம்

vote000.jpgஆப்கானிஸ் தான் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக வந்துள்ள புகார்கள் அதிபர் தேர்தலின் முடிவுகளை பாதிக்கலாம் என தேர்தல் புகார் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்த ஆணையத்தின் தலைவர் கிராண்ட் கிப்பன் கூறும்போது, தங்களுக்கு 225 புகார்கள் வந்துள்ளதாகவும், இவற்றில் 35 முக்கியமானவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை என முத்திரையிடப்பட்டிருப்பதாக கூறினார்.

அதிபர் தேர்தலின் முதற்கட்ட முடிவுகள் அடுத்த ஒரு சில நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.