கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

தில்லியில் இலங்கைத் தமிழர் ஆதரவு கருத்தரங்கம்

16-vaiko.jpgஇலங் கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் வகையில், இந்தப் பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியில்  வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. அதே நேரத்தில், இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக இலங்கை அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது.

டெல்லி தமிழ் மாணவர் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தக் கூட்டத்துக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன், பத்திரிகையாளர் எம். நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல்கொடுக்க உலக நாடுகள் முன்வரவில்லை என்று குற்றம் சாட்டினார் பழ. நெடுமாறன்.

இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. இந்திய அரசு இலங்கைக்கு மறைமுகமாக ஆயுத உதவிகளைச் செய்ததாகவும் இலங்கையின் மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் ஐ.நா.வின் முயற்சியை முறியடித்ததும் இந்தியாதான் என்று வைகோ குற்றம்சாட்டினார்.

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஊதியத்துடன் விடுப்பு: தமிழக அரசு அறிவிப்பு

260909tamilnadugovtlogo.jpgஹெச். ஐ.வி. தொற்று அல்லது எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட தமிழக அரசு ஊழியர்களுக்கு 18 மாத கால ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது போன்றதொரு திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான் என்று அரசு ஆணை கூறுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அரசு ஊழியர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், காச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு ஏற்கனவே இது போன்று விடுப்பு கொடுக்கப்படுவதாகவும் தமிழக அரசின் சுகாதாரச் செயலர் சுப்புராஜ் BBCதமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தமிழக அரசு ஊழியர்களில் எத்தனை பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற விபரம் அரசிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

. ஜனாதிபதியின் மகனுக்கு ரிக்கற்: முன்னாள் அமைச்சர் வெளியே

மகாராஷ்டிர மாநில சட்ட சபைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் நிதி இணை அமைச்சர் சுனில் தேஷ்முக்குக்கு இடமளிக்கப்படவில்லை இவர் அமராவதித் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர். அந்தத் தொகுதி ஜனாதிபதி பிரதிபா பட்டேலின் மகன் ராஜேந்திர ஷெகாவத்துக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது.

தனது வழமையான தொகுதி தன்னிடமிருந்து பறிக்கப்பட்டதை ஆட்சேபித்து அதே தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக சுனில் தேஷ்முக் கூறுகின்றார்.

மகாராஷ்டிர மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டாகப் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி 174 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 114 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன.

அணு ஆயுத பரவல் ஒப்பந்த தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகள் கைச்சாத்திட வேண்டும் – ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம்

250909un-council.jpgஅணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் இதுவரை கையெழுத்திடாத நாடுகள் அனைத்தும் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வியாழக்கிழமை ஒரு மனதாக நிறைவேறியது. இந்தக் கூட்டத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளைக் குறி வைத்தே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால் இதில் கையெழுத்திட மாட்டோம் என்று இந்திய அரசு சார்பில் கூறப்பட்டது. பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன.

ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு அணு சக்தியைப் பயன்படுத்த இந்தியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்து கொண் டிருந்தாலும் அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வைக்க வேண்டும் என்பதிலும் சர்வதேச அணு விசை ஏஜென்சியின் கண்காணிப்பில் இந்திய அணு நிலையங்களைக் கொண்டு வந்தே தீர வேண்டும் என்பதிலும் அமெரிக்கா உறுதியாக இருப்பதையே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது.

பாகிஸ்தானையும், இஸ்ரேலையும் அமெரிக்காவால் எந்த அளவுக்கு நிர்ப்பந்தப்படுத்த முடியும் என்று தெரியவில்லை. ஆனால் இந்தியாவுக்கு அணு சக்தி பயன்பாட்டுக்குத் தேவைப்படும் மூலப் பொருள்கள், தொழில்நுட்பம், ஆகியவற்றுக்காக இனி இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதாகவே சர்வதேசப் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அணு ஆயுதங்களைத் தயாரித்து வைத்துள்ள அனைத்து நாடு ளும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்.பி.டி.) கையெழுத்திட்டே தீர வேண்டும். ஒருங்கிணைந்த அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலும் (என்.டி.பி.டி.) கையெழுத்திட வேண்டும். உலக நன்மையைக் கருதி இதைச் செய்ய வேண்டும்.

அணு ஆயுதங்கள் பெருகுவது நல்லதல்ல. உலகின் எந்தப் பகுதியில் அணுகுண்டு வீசப்பட்டாலும் அது மனித குலத்தின் பேரழிவுக்கே இட்டுச் செல்லும்.  இப்போது அணு ஆயுதங்களைத் தயாரித்து கையிருப்பில் வைத்துள்ள நாடுகள் அவற்றைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அணு குண்டுகளை வெடித்துச் சோதனை நடத்தும் ஆவலைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அணுகுண்டு தயாரிப்புக்குப் பயன்படும் மூலப் பொருள்களைத் தயாரிப்பதையே நிறுத்திவிடவும், உலக நாடுகள் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என்று இத் தீர்மானம் கோருகிறது. இதற்கு 1887 வது தீர்மானம் என்று பெயர்.

ஐக்கிய நாடுகள் சபை தோன்றிய 1945 லிருந்து பாது காப்பு கவுன்சிலின் அனைத்து நாடுகளும் பங்கேற்கும் உச்சி மாநாடு இன்றோடு இதுவரை 5 முறை தான் கூடியிருக் கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்குவது இதுவே முதல் முறை. இதிலிருந்தே இந்தத் தீர்மானத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.

பான். கி. மூன் புதியதொரு வரலாற்றுக்கு உலக நாடுகளை இட்டுச் செல்லும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் இன்றைக்கு நிறைவேறியிருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் இந்தத் தீர்மானம் நிறைவேறிய பிறகு பாராட்டு தெரிவித்தார்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டு ஒப்பந்த நாடுகளும் ரஷ்யா தலைமையிலான வார்சா இராணுவக் கூட்டு ஒப்பந்த நாடுகளும் எதிர் எதிர் முகாம்களில் இருந்த போதிலும் கூட அணு ஆயுதச் சண்டை நடை பெறாமல் தவிர்த்துவிட்டோம். இனியும் அப்படி இருக்க முடியும் என்று தோன்றவில்லை.

உலகம் முழுக்க பல பயங்கரவாத குழுக்கள் தோன்றி ஆதிக்கம் பெற்று வருகின்றன. அணு ஆயுதமோ அவற்றைத் தயாரிக்கும் தொழில்நுட்பமும் மூலப் பொருள்களுமோ அவற்றின் கைகளில் கிடைத்தால் அதை விட பெரிய அச் சுறுத்தல் மனித சமூகத்துக்கு இருக்க முடியாது என்பதால் தான் இந்த விஷயத்தில் கண்டிப்பாக இருக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தீர்மானத்தின் நோக்கம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இனி கையெழுத்திடுவதை அமெரிக்கா ஊக்குவிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நியூயோர்க்கில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

சம்பியன் கிண்ணம் – நான்காவது ஆட்டம். England won by 6 wickets

120909sanath-jayasuriya.jpgஐ.சி.சி சம்பியன் கிண்ணத்துக்கான பி பிரிவில் இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி பகல் இரவு ஆட்டமாக தென்னாபிரிக்க நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இப் போட்டியின் ஸ்கோர் விபரங்களையும் உடனுக்குடன் தொகுத்துத் தர தேசம் நெட் விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளது

Friday, September 25, 2009
Played at New Wanderers Stadium, Johannesburg
Start time 2:30 pm, 12:30 GMT {Srilanka time 6.00 pm)

England team
AJ Strauss*, JL Denly, OA Shah, PD Collingwood, EJG Morgan, MJ Prior†, LJ Wright, SCJ Broad, GP Swann, G Onions, JM Anderson 

Sri Lanka team
TM Dilshan, ST Jayasuriya, KC Sangakkara*†, DPMD Jayawardene, SHT Kandamby, TT Samaraweera, AD Mathews, KMDN Kulasekara, M Muralitharan, SL Malinga, BAW Mendis 

Umpires Aleem Dar (Pakistan) and BF Bowden (New Zealand)
TV umpire AL Hill (New Zealand)
Match referee J Srinath (India)
Reserve umpire SJA Taufel (Australia)

Sri Lanka innings (50 overs maximum)

 Sri Lanka innings (50 overs maximum)
 TM Dilshan  c Morgan b Anderson  2
 ST Jayasuriya  c †Prior b Onions  0
 KC Sangakkara*†  c Strauss b Onions  1 
 DPMD Jayawardene  lbw b Anderson  9 
 TT Samaraweera c Collingwood b Broad 30
 SHT Kandamby  run out (†Prior/Wright)  53 
 AD Mathews  c †Prior b Wright  52 
 KMDN Kulasekara  not out  17  
 M Muralitharan  b Broad  18
 SL Malinga  b Broad  0 
 BAW Mendis  c Strauss b Anderson  5
 47.3 caught Strauss 212/10
 
 Extras (lb 4, w 21) 25     
      
 Total (10 wickets; 47.3 overs) 212 (4.46 runs per over)
Fall of wickets1-7 (Jayasuriya, 1.5 ov), 2-7 (Dilshan, 2.3 ov), 3-17 (Jayawardene, 4.6 ov), 4-17 (Sangakkara, 5.2 ov), 5-81 (Samaraweera, 19.5 ov), 6-163 (Kandamby, 37.4 ov), 7-176 (Mathews, 40.5 ov), 8-197 (Muralitharan, 43.2 ov), 9-197 (Malinga, 43.3 ov), 10-212 (Mendis, 47.3 ov) 
        
 Bowling  
 JM Anderson 9.3 2 20 3
 G Onions 10 0 58 2
 SCJ Broad 10 0 49 3
 LJ Wright 6 0 34 1 
 PD Collingwood 8 0 24 0
 GP Swann 4 0 23 0 

England innings (target: 213 runs from 50 overs)
 AJ Strauss*  c Kandamby b Kulasekara  9
 JL Denly  lbw b Kulasekara  5 
 OA Shah  c †Sangakkara b Muralitharan  44 
 PD Collingwood  b Malinga  46 
 EJG Morgan  not out  62  
 MJ Prior†  not out  28
 Extras (lb 7, w 11, nb 1) 19     
      
 Total (4 wickets; 45 overs) 213 (4.73 runs per over)
Did not bat LJ Wright, SCJ Broad, GP Swann, G Onions, JM Anderson 
Fall of wickets1-9 (Denly, 3.5 ov), 2-19 (Strauss, 7.3 ov), 3-82 (Collingwood, 19.5 ov), 4-158 (Shah, 34.5 ov) 
        
 Bowling O M R W Econ  
 SL Malinga 9 0 43 1
 KMDN Kulasekara 9 1 42 2
 AD Mathews 8 2 26 0  
 BAW Mendis 9 0 35 0  
 M Muralitharan 10 0 60 1
 
Match details
Player of the match PD Collingwood (England)

ஆசிய மகளிர் கூடைப்பந்து சாம்பியன் பட்டத்தை சீனா கைப்பற்றியது.

1509fiba-news203a.jpgசென்னை யில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சீனா 91-71 என நடப்புச் சாம்பியன் கொரியாவை வீழ்த்தியது. இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் கடந்த 3 முறையும் சீனாவை கொரியா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்த சீனா, கொரியா,  ஜப்பான் ஆகியவை செக். குடியரசில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இப்போட்டியில் இந்தியா 6-வது இடம் பிடித்ததுடன் அந்த அணியின்; கீது அன்னா ஜோஸ் 132 புள்ளிகள் குவித்து,  அதிக புள்ளிகள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.

அவருக்கு அடுத்தபடியாக லெபனான் வீராங்கனைகள் சான்டெலே டெனிஸ் ஆன்டர்சன் 118 புள்ளிகளும்,  சடா நாசர் 101 புள்ளிகளும் குவித்துள்ளனர். இறுதி ஆட்டத்தின்போது,  அரங்கில் குழுமியிருந்த சீன,  திபெத் ஆதரவாளர்கள் எதிரெதிர் கோஷங்களை எழுப்பினர். இதனால்,  இரு குழுவினரிடையே 2 முறை கைகலப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு சமாதானப்படுத்தி வேறு இடங்களில் இரு குழுவினரையும் உட்கார வைத்தனர்

ஹஜ்ஜை முன்னிட்டு விசேட கடவுச்சீட்டு கருமபீடம் – இன்று திறப்பு

210909ramzan.jpgஇலங்கை யிலிருந்து புனித ஹஜ் கடமைக்காகச் செல்லும் முஸ்லிம்களின் நலன் கருதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இன்று விசேட கடவுச்சீட்டு கருமபீடமொன்று திறக்கப்படவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விசேட கருமபீடமத்தின் மூலம் ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் எவ்வித சிரமங்களுமின்றி கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மீரா மொஹிதீன் தேசம் நெட்டுக்கு தெரிவித்தார்.

இவ்வருடத்திலிருந்து ஹஜ் கடமைக்குச் செல்பவர்களும் முன்பு ஹஜ்ஜுக்கு மட்டுமென கடவுச் சீட்டு பெற்றுக்கொண்டவர்களும் தமது கடவுச் சீட்டுக்களை சகல நாடுகளுக்குமானதாக பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள விசேட கருமபீடத் திறப்பு விழாவில் பெற்றோலிய வள அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி,  மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் ஹஜ் முகவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

250909un-council.jpgஉலக மட்டத்தில் அணு ஆயுதப் பரவலை தடுக்கவும், ஆயுதக் களைவின் மூலம் அணுசக்தி சார்ந்த தீவிரவாதத்தை குறைக்கும் முகமான நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அணு ஆயுதமற்ற ஒரு உலகை உருவாக்க அனைவரிடமும் இருக்கும் ஒரு அர்ப்பணிப்பு இந்தத் தீர்மானத்தின் மூலம் தெரிகிறது என்று இந்தக் கூட்டத்துக்கு தலைமையேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்கும் ஒரு லட்சியத்தை நோக்கிய பயணத்தில் அனைவருக்கும் ஒரு பங்கிருப்பதை சுட்டிக்காட்டிய ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ், தம் நாட்டிடம் இருக்கும் அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை மூன்றில் இரண்டு பங்குக்கும் கூடுதலாகக் குறைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இரானின் அணுத்திட்டம் தொடர்பாக அதன் மீது கூடுதல் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்தக் கூட்டம் பார்க்கப்படுகிறது. என்றாலும் இரான் மீது கூடுதலாக எந்த தடையையும் விதிப்பதற்கு சீனா தனது எதிர்ப்பை மீண்டும் தெரிவித்துள்ளது.

சம்பியன்ஸ் கிண்ணத்தை அவுஸ்திரேலியா கைப்பற்றும் – ராவிட்

000cricket.jpgதரவரி சையில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்தாலும் சம்பியன்ஸ் கோப்பையை வெல்ல அவுஸ்திரேலிய அணிக்கே வாய்ப்பு இருப்பதாக இந்திய வீரர் ராகுல் டிராவிட் கணித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘அவுஸ்திரேலியா மிகவும் அபாயகரமான அணி. சமீபத்தில் அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் உலகில் அவர்களின் கைதான் ஓங்கி இருக்கிறது. எனவே அவர்களுக்கு தான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன் என்றார்.

‘பிரபாகரன் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவறவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ புலி ஆதரவு அரங்கில் தமிழருவி மணியன் தொகுப்பு : த ஜெயபாலன்

Maniyan_thamilaruvi‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவவவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ என தமிழருவி மணியன் செப்ரம்பர் 24 மாலை லண்டன் ஈஸ்ற்ஹாமில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நிறைந்திருந்த அரங்கில் ‘இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஆயுதப் போராட்டத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்று தான் நம்பவில்லை’ எனத் தெரிவித்தார் தமிழருவி மணியன். ‘தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அதன் தலைவரினதும் தியாகத்தை தான் மதிப்பதாகத் தெரிவித்த தமிழருவி மணியன் அவர் (வே பிரபாகரன்) ஆயுதங்களை மட்டும் நம்பியது மிகப்பெரிய தவறு என்றும் அது இவ்வளவு அழிவை ஏற்படுத்தி விட்டது’ என்றும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்தை எதிர்த்த போதும் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையேயான யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்தபோது பெரும்தொகையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்தமாறு வற்புறுத்தி வந்தவர் தமிழருவி மணியன். ஆளும் காங்கிரஸ் கட்சியின் நீண்டகால உறுப்பினரான அவர் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா வற்புறுத்தாததையிட்டு தனது கட்சிப் பதிவியையும் உறுப்புரிமையையும் துறந்தவர். சாத்வீகப் போராட்டமே இன்றைய காலத்திற்குப் பொருத்தமானது என்று நம்புபவர்.

‘தமிழக அரசியல் வாதிகள் உணர்ச்சி பொங்களிக்க மேடைகளில் பேசிவிட்டு போய்த் தூங்கிவிடுவார்கள். அவர்களை நம்பி அரசியல் மோசம் போய்விடாதீர்கள்’ என்று எச்சரித்த தமிழருவி மணியன் அவ்வாறு ‘என்னாலும் பேச முடியும்’ ஆனால் ‘என் தமிழினம் அழிக்கப்படுவதை என்னால் தாங்க முடியாது’ என்றார். நெடுமாறன், வைக்கோ, திருமாவளவன் போன்றவர்களின் வாக்கு வங்கிகள் ஒரு சில வீதமே எனச் சுட்டிக்காட்டிய தமிழருவி மணியன் ‘பரந்து பட்ட தமிழக மக்களின் ஆதரவைப் பெறாமல் இந்திய அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது’ என்றார். ‘இவர்களது அரசியல் பேச்சுக்கள் உணர்ச்சிபூர்வமாய் இருக்கும் கைதட்டுவார்கள், விசிலடிச்சான் குஞ்சுகள் விசிலும் அடிப்பார்கள் அவ்வளவுதான் அதற்கு மேல் என்ன?’ என்று கேள்வியும் எழுப்பினார்.

தமிழருவி மணியத்தின் சிறிய பேச்சைத் தொடர்ந்து அரங்கில் இருந்தவர்கள் தமது கருத்துக்களை வழங்கவும் கேள்வி எழுப்பவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. புலி ஆதரவு அரங்கு ஒன்றில் மாறுபட்ட கருத்துடைய ஒருவர் பிரதான பேச்சாளராக வரவழைக்கப்பட்டது இதுவே முதற்தடவையாக இருந்தது. செல்வவிநாயகர் ஆலயத் தலைவர் செல்வராஜா ‘கலைஞர் கருணாநிதியைப் பலப்படுத்தி அவரைக் கொண்டு நீங்கள் எதையாவது சாதித்திருக்க முடியாதா?’ எனக் கேள்வி எழுப்பினார். ‘என்னதான் கூறினாலும் வைக்கோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள்’ என்றார் செல்வராஜா. ‘மகிந்த ராஜபக்ச நினைக்கின்ற மாதிரி அல்ல. தலைவர் பெரும் திட்டத்தோடு வருவார்’ என்றும் ‘போராட்டம் தொடரும்’ என்றும் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

‘ஆயுதப் போராட்டமே ஒரே வழி’ என்ற கூக்குரல் ஒலிக்கத் தவறவில்லை. அதற்கு ஒருபடி மேலேசென்று ‘சுறாவளி’ போல் சுழட்டி கருத்து வெளியிட்ட சிவபாதம் என்ற முன்னால் கூட்டணி (தமிழரசுக் கட்சி) உறுப்பினர் ‘நானும் எனது மகனும் புலி. இந்தியாவுக்கு ஒரு பாடம் படிப்பிக்கிறோம்’ என்றார். கூட்டத்தின் இடையிடையே இவரது ‘குளறி’ வித்தைகள் அரங்கைக் குழப்பியது. இன்னும் ஓரிருவரும் மதுபோதையில் நின்று குளறி வித்தை காட்டியதைத் தவிர கூட்டம் சுமூகமாகவே நடந்தது.

Maniyan_thamilaruvi‘நான் இங்கு உங்களை மாற்றுவதற்காக ரோவினால் அனுப்பப்ட்டவன் அல்ல. என் இன மக்கள் கொல்லப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் யாதார்த்தமாக சில விடயங்களைப் பார்க்கும்படி சொல்கிறேன். இல்லை ஆயுதப் போராட்டம்தான் முடிவு என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. ஆயுதம் எடுத்தால் அழிவு எதிரிக்கு மட்டுமல்ல எமக்கும் தான் என்பதனை மறந்தவிடக்கூடாது. நான் உங்களுக்கு ஏற்றமாதிரிப் பேசுவதற்காக இங்கு வரவில்லை. எனக்குச் சரியெனப்பட்டதை உங்களுக்கு சொல்கிறேன். உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளுக்குச் செல்லாமல் நிதானமாகச் சிந்தியுங்கள்’ எனத் தமிழருவி மணியன் அங்கிருந்தவர்களைக் கேட்டுக்கொண்டார்.

தன்னுடைய பேச்சுக்களில் இலங்கை அரசையும் அதன் இனவாதப் போக்கையும் மிகச் சரியாகவும் நேர்த்தியாவும் கண்டித்த தமிழருவி மணியன் அந்த இனவாதப் போக்கிற்கு எதிராக சாத்வீகமாகவும் ராஜதந்திர ரீதியாகவும் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஒரு திலீபனுடன் சாத்வீகப் போராட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து இருந்திருந்தால் இந்தப் பேரவலத்திற்குச் செல்ல வேண்டி இருந்திராது என்பதையும் அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தரணியும் பல்வேறு அமைப்புகளின் தலைவருமான ப சிதம்பரப்பிள்ளை தனது கருத்தைத் தெரிவிக்கையில் ‘இந்தியா இலங்கையுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. தேசியத் தலைவர் இந்தியாவை நம்பியதே அவர் விட்ட மிகப்பெரிய தவறு’ எனத் தெரிவித்தார். இதே கருத்தினை இன்னும் பலரும் வெளியிட்டனர். தமிழருவி மணியன் தான் கட்சியின் பதவியில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் வெளியேறியவர் என்று கூறி இருந்தும் பலரும் மீண்டும் மீண்டும் அவரை ஒரு இந்தியப் பிரதிநிதியாக்கி கேள்விகளை தொடுத்தனர்.

இவற்றுக்கு பதிலளித்த தமிழருவி மணியன், ‘பிரபாகரன் ஒன்றும் இந்தியாவை நம்பி இருக்கவில்லை. அமெரிக்கா கப்பல் அனுப்பிக் காப்பாற்றும் என்று நம்பித்தான் கடைசிவரை இருந்தார். இந்தியா மட்டுமல்ல புரட்சியை வென்றெடுத்த நாடுகளே ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கி இருந்தன. இந்தியா இந்தியா என்று சொல்லிச் சொல்லியே நீங்கள் இந்திய மக்களை எதிரிகளாக்கி உள்ளீர்கள். இந்தியா வேறு இந்திய மக்கள் வேறு. எந்தவொரு சாதாரண இந்தியப் பிரஜையாவது எமது நாட்டு பிரதமரைக் கொலை செய்திருக்கலாம் என்று குற்றம்சாட்டும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்களா?’ எனக் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ‘அமெரிக்காவில் டலஸ் பகுதியில் தமிழ் சங்கத்தில் காலை ஒரு சந்திப்பு மாலை ஒரு சந்திப்பு. ஒன்று இந்தியத் தமிழர்கள் சந்திப்பு மற்றையது புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் சந்திப்பு. பாரிஸில் புதுச்சேரித் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் சேர்ந்து எதுவும் செய்வதில்லை’ இவ்வாறு தமிழருவி சொல்லிக் கொண்டிருக்கையில் ‘லண்டனிலும் அப்படித்தான். இலங்கைத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள், சிங்கப்பூர்த் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் என்று தனித்துத்தான் செயற்படுகிறார்கள்’ என்று ஒரு குரல் வந்தது. ‘ஏன் நாம் ஒற்றுமையாகப் போராட முடியாதவர்களாக இருக்கிறோம்’ என்றும் தமிழருவி மணியன் கேள்வி எழுப்பினார்.

‘புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு எப்போதும் உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் ஒரு பிரச்சினை உள்ளது.’ என்று தனது கருத்தை வெளியிட்ட தேசம்நெற் த ஜெயபாலன் ‘புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் நிஜத்திற்கு வரவில்லை. வரவும் விரும்பவில்லை. இன்னமும் கனவுலகத்திலேயே உள்ளனர். நீங்கள் இன்று வெளியிட்ட இதே கருத்துக்களை நான்கு மாதங்களுக்கு முன் வெளியிட்டு இருந்தால் உங்களை ரோ உளவாளி என்றும், தேசியத் துரோகி என்றும் அழைத்திருப்பார்கள்’ எனத் தெரிவித்தார். கூட்டத்தின் முடிவுப் பகுதியில் வெளியிட்ட இக்கருத்து மீண்டும் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

Maniyan_thamilaruviஅதனைத் தொடர்ந்து பேசிய தமிழருவி மணியன் ‘புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் என்னால் பிளவுபட்டுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் இன்று மூன்று லட்சம் மக்கள் முகாம்களில் பேரவலத்திற்கு உள்ளாகி உள்ளார்கள். அவர்களை விடுவிக்க வழிசெய்ய வேண்டும். நீங்கள் ஏதோ ஒரு வகையில் கல்வி வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி இங்குவந்து ஓரளவு வளமாக வாழ்கிறீர்கள். அப்படி வாழ்ந்துகொண்டு ஆயுதப் போராட்டம் என்றெல்லாம் பேச முடியும். ஆனால் அந்த முகாம்களில் வாழும் மக்களின் நிலையென்ன. இதுவரை ஆயுதப் போராட்டத்தில் ஒரு 10 வீதம் உரிமைகளைப் பெற்றிருந்தால் இவ்வளவு மக்களை இழந்து இந்த உரிமைகளைப் பெற்றிருக்கின்றோம் என்று சொல்லலாம். அப்படிச் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த தமிழருவி மணியன் ‘எமக்கு முன் உள்ள உதாரணம் தீபெத். எந்த நாடு அதனை அங்கிகரித்தது? அயர்லாந்துக்கு என்ன நடந்தது?’ என்று கேள்வி எழுப்பியதுடன் ‘தமிழ் நாட்டுக்கு இந்திய அரசமைப்பில் உள்ள உரிமைகள் போன்ற உரிமைகளைக் கோரி அதனை நோக்கிச் செல்வதே தற்போதுள்ள யதார்த்தம்’ எனத் தெரிவித்தார்.

இறுதியாக கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வி போஸ் கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது போராட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது. அதனால் போராட்டம் முடிவுக்கு வந்தள்ளது. அதனை போஸ்மோட்டம் செய்து அதன் சரி பிழைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களைக் கேட்டு அதன் சரி பிழைகளை ஆராய்கின்ற பக்குவம் வரவேண்டும். எத்தனையோ ஆயிரம் மக்களை இழந்திருக்கிறோம் படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு காலத்தில் துரோகிகள் என்று சொல்லியவர்களுடனெல்லாம் ஒரே மேசையில் உட்கார்ந்திருந்து கதைக்கின்றோம். சாத்வீகப் போராட்டம் தோற்றுவிட்டது. ஆயுதப் போராட்டமும் தோற்றுவிட்டது. இப்போது தமிழருவி மணியன் சொல்கின்ற அறிவு வழி சிந்திக்க வேண்டும். அவர் துரோகி. இவர் துரோகி. இந்தியா துரோகம் செய்துவிட்டது என்பதை விட்டுவிட்டு யதார்த்தமாகச் செயற்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

மூன்று மணிநேரம் வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பெரும்பான்மையானவர்கள் யதார்தத்தை நோக்கித் தள்ளப்படுவதைக் காணக் கூடியதாக இருந்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு இவ்வாறான கருத்துக்கள் புலி ஆதரவு அரங்கு ஒன்றில் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அடுத்த இரு தினங்களில் செப்ரம்பர் 26ல் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் தொல் திருமாவளவனையும் தமிழருவி மணியனையும் பிரதம பேச்சாளர்களாக அழைத்துள்ளது. புலி ஆதரவுத் தளத்தில் தற்போது ஒரு கருத்தியல் மாற்றத்தின் அவிசியத்திற்கான தேவை உருவாகி உள்ளதையே இது வெளிப்படுத்துகின்றது.